திங்கள், நவம்பர் 07, 2011

'ஊசி'ப்போன கதை!



தொடர்ந்து அரசியல் பற்றி எழுதியது கொஞ்சம் போர் அடித்துவிட்டது.

கொஞ்சம் ரிலாக்ஸ்டாக  ஒரு கதை எழுதலாம் என்று நினைத்த நேரத்தில், எங்க அத்தான் ஒரு கதை சொன்னார். காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக  இருக்கும் அவருக்கு நகைச்சுவை அத்துபடி.

 

ந்த முனிவர் தனது சிஷ்யக்கோடிகளைக் கூப்பீட்டு  துணி தைப்பதற்கு  ஒரு ஊசி வாங்கிவரசொன்னார்.

அந்த பத்து சீடர்களும் சந்தைக்குச் சென்று ஊசி வாங்கினார்கள். ஊசியை வாங்கியபோது ஒரு பிரச்சனை.

ஊசியை யார் எடுத்து வருவது என்று அவர்களுக்குள் வாத பிரதிவாதங்கள் மூண்டது.  " நீ எடுத்து வா... இல்ல அவன் எடுத்துவரட்டும்"  என்று ஆளாளுக்கு தங்களுக்குள் வாதிட்டுக் கொண்டார்கள்.

யாரும் ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுக்கவில்லை.  சண்டயும் விட்டப்பாடில்லை.  அந்த பத்து சீடர்களும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஒரு பெரிய பனை மரத்தை வாங்கி, அந்த ஊசியை அதில் சொருகி, அந்த பத்து சீடர்களும் பனை மரத்தை தூக்கிச் சென்றனர்.   

இது எப்படி இருக்கு....?!

கதை: பரமார்த்தரும் பத்து சீடர்களும்.  


 oOo



கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...