திங்கள், ஜூன் 28, 2010

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

நடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும். மற்றபடி ரோஜா, டேரிப்பூ, லில்லி, போகன்வில்லா, டிசெம்பர், பட்ரோஸ் போன்ற பூக்களின் பெயர்கள் அத்துப்படி. தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களை கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பாடியிருப்பார். அதைதான் நடிகர் சிவகுமார் மனனம் செய்து மேடைதோறும் முழங்கினார். அதனாலேயே தமிழர்களுக்கு நமது மண்ணின் பூக்கள் பற்றி விழிப்புணர்வு வந்திருக்கிறது.



நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு வெளியிட்ட 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' மலரில் அந்த தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்களை படங்களோடு வெளியிட்டுள்ளது.



இனி தமிழ் மண்ணின் பெருமை மிகு பூக்களின் பெயர்கள்....





  1. செங்காந்தாள் (விடுதலை புலிகளின் தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)


  2. ஆம்பல்


  3. அனிச்சம்


  4. குவளை


  5. குறிஞ்சி


  6. வெட்சி


  7. செங்கோடுவேரி


  8. தேமா


  9. மணிச்சிகை (செம்மணி)


  10. உந்தூழ் (பெருமூங்கில்)


  11. கூவிளம் (வில்வம்)


  12. எறுழம்


  13. கள்ளி


  14. கூவிரம்


  15. வடவனம்


  16. வாகை


  17. குடசம் (வெட்பாலை)


  18. எருவை (கோரை)


  19. செருவிளை (காக்கணம், சங்கு)


  20. கருவிளை


  21. பயினி


  22. வாணி (ஓமம்)


  23. குரவம்


  24. பசும்பிடி (இலமுகிழ்)


  25. வகுளம் (மகிழம்)


  26. காயா


  27. ஆவிரை


  28. வேரல் (சிறு மூங்கில்)


  29. சூரல்


  30. பூளை


  31. கன்னி (குன்றி மணி)


  32. குருகிலை (முருங்கிலை)


  33. மருதம்


  34. கோங்கம்


  35. போங்கம்


  36. திலகம்


  37. பாதிரி


  38. செருந்தி


  39. அதிரல் (புனலி)


  40. சண்பகம்


  41. கரந்தை


  42. குளவி (காட்டுமல்லிகை )


  43. கலிமா


  44. தில்லை


  45. பாலை


  46. முல்லை


  47. குல்லை


  48. பிடவம்


  49. மாறோடம்


  50. வாழை


  51. வள்ளி


  52. நெய்தல்


  53. தாழை (தென்னம்பாளை)


  54. தளவம்


  55. தாமரை


  56. ஞாழல்


  57. மொவ்வல்


  58. கொகுடி


  59. சேடல் (பவளமல்லிகை)


  60. செம்மல்


  61. செங்குரலி


  62. கோடல்


  63. கைதை (தாழை)


  64. வழை (சுரபுன்னை)


  65. காஞ்சி


  66. நெய்தல்


  67. பாங்கர்


  68. மரா (கடம்பு)


  69. தணக்கம் (நுணா)


  70. ஈங்கை


  71. இலவம்


  72. கொன்றை


  73. அடும்பு


  74. ஆத்தி


  75. அவரை


  76. பகன்றை


  77. பலாசம்


  78. பிண்டி


  79. வஞ்சி


  80. பித்திகம்


  81. சிந்துவாரம் (நொச்சி)


  82. தும்பை


  83. துழாய் (துளசி)


  84. தோன்றி


  85. நந்தி ( நந்தியாவட்டம் )


  86. நறவம்


  87. புன்னாகம்


  88. பாரம் (பருத்தி)


  89. பீரம் (பீர்க்கு)


  90. குருக்கத்தி


  91. ஆரம் (சந்தனம்)


  92. காழ்வை (அகில்)


  93. புன்னை


  94. நரந்தம் ( நாரத்தம்)


  95. நாகம்


  96. நள்ளிருள் நாறி (இருவாட்சி)


  97. குருந்து (காட்டு எலுமிச்சை)


  98. வேங்கை


  99. புழகு (மலை எருக்கு)


மேற்கண்ட தகவல்களை தினமணி நாளிதழ் தனது செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் படத்தோடு வெளியிட்டுள்ளது.



பி கு : தினமணியின் 'செம்மொழி கோவை' புத்தகம் விரிவான விமர்சனம் விரைவில்.















வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...