கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 03, 2015

நஞ்சுண்ட நா! தமிழுண்ட நா!





நெஞ்சுக்கு நீதியாய் நின்று
எரிதழல் தன்னில் ஏந்தி
திருக்குவளை ஈன்றெடுத்த
தங்கமென தமிழுக்கு - நீ வந்தாய்.

நீ வந்ததிந்த நேரமோ...?
சூது மதியார் சூழ் நம் நிலத்தை
ஏதுமறியார் நம் தமிழர்
தலை நிமிறா நிலைகண்டு,

தமிழனை தடுத்தாட்கொண்டு
போர்களத்தில் - நீ முன்னின்றாய்.

கரகரத்த குரல் தமிழனின்  குறளாக..
முன்னின்று வழி நடத்த முக உன் பிறப்பு
காலத்தின் கொடையென்றோ...!
மழைக் காலத்தின் குடையன்றோ...!

அகவை தொன்னுற்றிரண்டாயினும்
முக'வை முன்னின்று வழி நடத்தும் முத்தமிழுக்கோர்
வயது மூவாயிரமாண்டுகள் மேலே
நனிதமிழுக்காற்றுவாய் நல் தொண்டினை அதற்குமேலே...!

நஞ்சுண்டநா வசை பாடும் -உன் மேல்
தமிழுண்டநா என்றும் இசைகொள்ளும் உன் பால்
பகுத்தாராய்ந்தால் நாங்கள் உன் பக்கம்
பகுத்தறிவற்றோர் என்றென்றும் நம் எதிர்பக்கம்!.

நீ இல்லாதுபோனால் அன்றுணருவார் -உன் பெருமை
இருக்கின்ற நாளெல்லாம் எய்துவார் உன் மேல் அம்பை
இதை நான் சொல்லாது போனால்
உன் காலத்தில் வாழ்ந்த எனக்கென்ன பெருமை!.

எம் தலைவனே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!.

-மகேஷ் பத்மனாபன்!.
3/06/2015


ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...