செவ்வாய், அக்டோபர் 30, 2012

கோவலன் தலையை புதைத்த இடம் 'கோவலன் பொட்டல்'










                                          மதுரையில் பழங்கனாதம் என்ற சிற்றூரில்தான் கோவலனின் தலை புதைக்கப்பட்டுள்ளது.


 
 இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர். அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்.          


சனி, அக்டோபர் 20, 2012

குமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)




                 குமுதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல்!. கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது.  வெகுஜன வார இதழில் ஏ ஜோக் வருவது கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும், அதை நேரடியாக படிக்கக் கொடுக்காமல் உட்டாலக்கடி செய்து, முகம் பார்க்கும் கண்ணடியில் காட்டித்தான் படிக்க முடியும் என்ற மிரர் இமேஜில் தந்திருக்கின்றனர்.

ஏ ஜோக் என்றாலும் குமட்டல் அளவில் இல்லாமல், விழுந்து விழுந்து சிரிக்கும் அளவில் இருப்பது இதன் சிறப்பு.

 
சாம்பிளுக்கு சில....     
     

      

கதை 1

இரவு 12 மணி.

அந்த டாக்டருக்கு போன் வருகிறது. 

"டாக்டர்... டாக்டர்.. என் பையன் காண்டத்தை முழுங்கிட்டான். பள பள காகிதத்தில் இருந்ததால், சாக்லெட்டுன்னு நெனைச்சி முழுங்கிட்டான் டாக்டர்.  கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர்" என்ற பதறல் குரல் எதிர் முனையில் கேட்டது.

டாக்டரும் கலவரமாகி,"சரி...சரி பயப்படாதிங்க இதோ வந்திடுறேன். பையன பத்திரமாக பர்த்துக்குங்க" என்றார்.

எதிர் முனையில் பேசியவருக்கு இவர்தான் குடும்ப மருத்துவர். அதனால் அரக்க அரக்க இடிக்கி மற்றும்  சில மருத்துவ கருவிகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகும் போது, மீண்டும் போன் மணி அடிக்கிறது.

முன்பு பேசியவனிடமிருந்தான் போன்.

" டாக்டர்....நீங்க வர வேண்டாம். நானே எடுத்திட்டேன்"

"சபாஷ்,  நீங்களே பையன் வாயில கைய விட்டு எடுத்திட்டுங்களா....? "

"இல்ல டாக்டர், பீரோ கீழே.... துணிகளுக்கிடையே இன்னொரு  காண்டம் இருந்துச்சி. அத எடுத்துட்டேன் டாக்டர்"

".............?!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கதை 2

ஆள் அரவம் அற்ற பாலைவனம்.

பல நாள் காஞ்சி கிடந்த அந்த ராணுவ வீரனுக்கு சுயேச்சையா நின்னு... நின்னு... போரடித்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையும் காணாத அவனுக்கு ஓட்டகம்தான் கண்ணில்  தென்பட்டது.

அதை பிடித்து இழுத்து வந்த அவனுக்கு  ஒட்டகத்தின் உயரம் பெரும்பாடாய் இருந்தது.

அதனால்,  ஒட்டகத்தின் பின் பக்கம் மணலை குமித்து வைத்து,  ஏறி நிற்கும் போது  ஒட்டகம் நகர ஆரம்பித்தது.

மீண்டும் மீண்டும் அதே மாதிரி முயற்சி செய்யும் போது, ஒட்டகம்  நகர்ந்துக் கொண்டே இருந்தது.

அப்போது...

தூரத்தில் ஒரு பெண் இவனைப் பார்த்து " காப்பாத்துங்க...காப்பாத்துங்க...." என்று   அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.  மூன்று பேர் அவளை  கற்பழிக்க துரத்திக் கொண்டு வந்தனர். 

இவன் அந்த மூன்று ரவுடிகளையும் சண்டைபோட்டுஅடித்து விரட்டிவிட்டு,  அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.

அந்த பெண், இவனிடம் கண்ணீர் மல்க " என்னை அந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை காப்பாத்துனதுக்கு பிரதிஉபகாரமா நீங்க என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கிங்க.   என் உடல் பொருள் எல்லாதையும் தர்ரேன் என்றாள்"

அதற்கு அந்த ராணுவ வீரன்.

"மேடம், ஒரு சின்ன ஹெல்ப்.
இந்த ஒட்டகத்த கொஞ்சம் ஆடாம பிடிச்சுக்குங்க?!" என்றான் கெஞ்சலாக!.

                                     

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

"சசிகுமாரு......என்னப்பு இப்டி பண்ணிப்புட்டியே.....???"





 
"அண்ணே வணக்கம்னே.... !"

"நேத்துதான் நம்ம அம்பத்தூர் ராக்கி தியேட்டர்ல சுந்தரபாண்டியன் படத்த பார்த்தேன்னே. பொண்டாட்டி புள்ளக்குட்டியோட படம் பாக்க போயிருந்தேன்னே. சும்ம சொல்லக் கூடாதுன்னே...அந்த போஸ்டர் ஒட்டுற சீன்லயே புரிஞ்சிடுச்சின்னே,  ஓ....இவிங்க... அவிங்கலான்னு?!". 

"நல்லவேளையின்னே, உள்ளாற போறப்ப யாரும் கேக்கல. "நீ எங்கிட்டேருந்து வர்றன்னு. இல்லேன்னா சூது வாது புரியாம நானும் தஞ்சாவூர்காரன்னுட்டு சொல்லிப்புட்டேன்னு வச்சிகீங்க, கொண்டே புடுவாய்ங்கள்ல.  அப்படி இருந்தன்னே தியேட்டரு.   பூரா உசிலம்பட்டிகாரயிங்க போலயிருக்கு...சசிகுமாரு வர்றப்பயெல்லாம் சும்மா  'விசிலு' தூள் பறக்குது.  சசிகுமாருக்கு அரசியல் ஆசை வந்திடிச்சின்னே. பாட்டு பில்டப்பும் படம் பில்டப்பும் அததான் சொல்லுது. பிரேமுக்கு பிரேமு அண்ணனோட அரசியல் ஆசை தெரியுதன்னே....?!".

"இப்படிதான்னே இரண்டு மூனு வருஷத்துக்கு முன்னாற, காமடி நடிகர் கருனாஸ், முத்துராமலிங்க தேவரோட இருக்குறாப்புல போஸ்டர் அடிச்சி ஒட்டினாருன்னே. அப்புறம் எஸ்.ஜே.சூர்யா வந்தாருன்னே. இப்போ நம்ம சசிகுமாரும் சொல்லிபுட்டாரும்னே". 

"இப்பாதான்னே பயலுவ, அக்கம்பக்கம் பக மறந்து, வேலு கம்பு, வீச்சரிவாள தூக்கி எரிஞ்சி, தாயாபுள்ளயா பழகிகிட்டு இருக்காங்க... இப்பம்போயி மறுபடியும் முதல்லேருந்தான்னே....? நல்லதா நாலு கருத்த சொல்லலாம்னே....?  அத விட்டுட்டு இப்படி சாதி பெரும ஏன்னே....? ஒன்னா மண்ணா சுத்திக்கிட்டு திரிஞ்ச பிரண்ஸ்ங்க,   கொலைவெறியோட அடிச்சிக்கிடறதான் சாதி பெருமையான்னே...?  நல்லா வெளங்கும்னே ....??" 

 "சசிகுமாரு அண்ணே... எல்லாம் நம்ம பயங்கதான்னு, பொத்தாம் பொதுவா படம் எடுங்க....?  இப்படி வேணாம்டியேய்!?"
.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...