ஊடக ஊடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடக ஊடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 22, 2015

சன் டிவியை கை மாற்றத் துடிக்கும் பாஜக அரசு?

               ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பார்கள், ஊடக குரல்வளையை நெரிப்பது  என்றால் ஆளும் கட்சிகளுக்கு எப்போதும் அல்வா சாப்பிடுவது போல்தான். அதுவும் தனக்கு எதிரான ஊடகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதை ஒழித்துக் கட்டிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். இதில் காங்கிரஸும் ஒன்றுதான் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பில் ஏறியதுமே சன் டிவி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நமது எதிர்பார்ப்பின்படியே சன் குழுமத்தின் மீது தனது கோர பார்வையை திருப்பியுள்ளது பாஜக அரசு.

சன் டிவியின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடகங்கள் மீதான ஆளும் பாஜக அரசின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. சன் தொலைகாட்சிக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொடுக்கும் விஷயத்தில் மத்திய உள் துறையும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறையும் மறுத்துள்ளது. இது ஊடகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி வருகைக்கு முன்னர், சன் டிவி வருகைக்கு பின்னர்  (சமு சபி) என்று தமிழக தொலைகாட்சி வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். சன் டிவியின் வருகைக்கும் முன்னர், அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் வைத்ததுதான் சட்டம். மத்திய அரசின் விருப்பத்திற்கு இனங்க செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தனர். ஆளும் கட்சியின் குரலாகவே தூர்தர்ஷன் செயல்படும். ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் என்று நிகழ்ச்சி தயாரித்து மக்களை பதம் பார்த்துவந்த தூர்தர்ஷனின் சக்தி (?) எப்படிப்பட்டது என்று இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஞாயிறுகளின் மதியத்தில் ராஜேஷ் கண்ணாவும் டிம்பிள் கபாடியாவும் 'கியா பியா' என்று ஹிந்தியில் ஆடி பாடி நடித்ததை நம் மக்கள் ஒன்றும் புரியாமல் கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தனர். சினிமா பாடல்கள் பார்க்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை 'சித்திரகார்' வரை காத்திருக்க வேண்டும்.

அதுவும் நாடகம் என்று ஒன்று போடுவார்கள், பார்க்கவேண்டுமே....?!. காத்தாடி ராமமூர்த்தி வகையறா டிராமாவை மொத்த குத்தகை எடுத்ததுபோல், சென்னை தூர்தர்ஷனில் வீட்டு தயாரிப்பு டிராமாக்களே ஆக்கிரமித்து இருக்கும். செட்டுக்குள்ளேயே மொத்த  நாடகத்தையும்  நடத்தி காட்டிவிடுவார்கள். வந்த விமர்சனத்தை படிப்பதற்கென்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை திட்டி கழுவி கழுவி ஊத்தியதை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பாராட்டி எழுதிய கடிதத்தை மட்டுமே இரெண்டு பேர் மெனக்கெட்டு படிப்பார்கள். இந்தக் கன்றாவியெல்லாம் இந்த தலைமுறை பார்க்காமல் போனது அவர்களது அதிஷ்டம். நமது துரதிஷ்டம்.

சன் டிவியின் வருகைக்கு பின்னர்தான் இந்திய தொலைகாட்சி வரலாற்றில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனலாம். கலாநிதி மாறன் தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் 'தமிழ் மாலை' என்ற வீடியோ பத்திரிகையை நடத்திவந்தார். வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து அதை கேஸட்டில் பதிவு செய்து ஒரு வீடியோ மேகஸினாக நடத்திவந்தார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள்  மாற்றப்பட்டு வெளிவரும். இந்த வீடியோ கேசட்டுகளே வார இதழ்கள் போல் விற்கப்படும். முந்தின வார காஸட்டை பெற்றுக் கொண்டு புதிய காஸட்டை தருவார்கள். அப்போதெல்லாம் தூர்தர்ஷன் டிவி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தது. அதனாலயே கலாநிதி மாறனின்  வீடியோ மேகஸினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளையும் உலக நிகழ்ச்சிகளையும் தயாரித்து வெளியீட்டு வந்தார். அதுவே பின்னர் தனியாக தொலைக் காட்சி தொடங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்.

எப்படி செட்டுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை பாரதிராஜா அவுட்டோருக்கு கொண்டுவந்தாரோ.....அப்படி ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த டிவி நாடகங்களை வெளியுலத்திற்கு கொண்டுவந்தது சன் டிவிதான். இதன் மூலம் 'சின்னத்திரை' என்ற உலகமே தோன்றியது. இதனால் நிறைய நடிகர் நடிகைகள் வாழ்வு பெற்றனர். பொருளாதார ரீதியாக சின்னத்திரை நடிகர்களை உயத்தியது சன் டிவி. மக்களின் பொழுது போக்கு ரசனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

()()()

பொதுவாக இந்திய அளவில் ஒரு நிறுவனம் பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் அது வட இந்தியாவை சேர்ந்த நிறுவனமாகத்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் என்று வட நாட்டு கம்பெனிகளின் பெயரை சொல்லித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து ஒரு நிறுவனம் இந்திய அளவில் பெயர் எடுப்பதிலோ....அல்லது தென் இந்தியாவை  தனது ஊடக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையோ வட நாட்டு அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் விடுவார்களா என்ன....?. அந்த நெருக்கடிதான் இப்போது மத்திய அரசு மூலம் சன் குழுமத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏதோ.... அரசியல் பின் புலம் இருந்ததால் சன் டிவி இத்தனை நாள் தப்பித்து வந்திருக்கிறது. அரசியல் பின்புலம் மட்டும் இல்லையென்றால் இன்னேரம் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

சன் டிவி அதிபர்கள் மீது வழக்குகள் இருக்கிறது என்பதற்காக அந்த குழுமத்தின் டிவி சேனல்களுக்கு வழங்கப்பட்ட செக்கியூரிட்டி கிளியரன்சை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முயற்சிப்பது அபத்தமான செயலாகும். தனிப்பட்டவர் மீது இருக்கும் வழக்குகளை அவர் சார்ந்த நிறுவனத்தின் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை?. சன் டிவியை கை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு தரப்பில் பல் வேறு நெருக்கடிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பாஜக அரசுக்கு சகலவிதத்திலும் படியளக்கும் இந்தியாவின் ஆகச்சிறந்த மிகப் பெரிய நிறுவனம் சன் டிவியை விலை பேசுவதாக தகவல் கசிகிறது. .

அரசின் மற்றுமொரு நெருக்கடியாக சன் கூட்டுக் குழுமத்தின் 45 RED FM வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி புதுப்பிப்பதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது எப்எம் ரேடியோ ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் சேர்ந்துள்ளது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் சன் குழுமத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் எப்எம் இரண்டும் சன் குழுமத்தின் அங்கம் என்றாலும் அனுமதி மறுப்பு விஷயத்தை பொறுத்தவரை மத்திய உள்துறை தனித்தனியாகவே மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள்  வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

சன் தொலைகாட்சி மற்றும் எப்எம் ரேடியோக்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது.

()()()

தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் சன் டிவி மட்டுமே முதன்மையான தொலைக்காட்சியாக இன்றும் திகழ்கிறது.  கிராமத்தில் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பதை கூட,  மக்கள் சன் டிவி கனெக்சன் குடுங்கள் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சன் டிவியின் தாக்கம் கடை கோடி கிராமம் வரை பரவியிருக்கிறது. கிராமத்து வெள்ளாந்தி மக்களுக்கு டிவின்னா அது சன் டிவிதான்!. கிராமம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சன் டிவி ஒளிபரப்பாகிவருகிறது.

சன் டிவியை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு பொருளும் தமிழகத்தில் சந்தைப்படுத்த முடியாது என்பது விளம்பர உலகம் கண்ட  உண்மை. ஒரு விளம்பர பட்ஜெட்டில் முக்கால்வாசி பட்ஜெட்டையும் சன் டிவி இழுத்துக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் அதன் உலகம் தழுவிய வெற்றியே அபரிமிதமான கோடிகளை கரன்ஸியாக கொட்டச் செய்கிறது. இதுவே பிரச்சனைகளையும் இழுத்து வருகிறது. சன் டிவியின் ஆதிக்கத்தாலேயே வட இந்திய தொலைக்காட்சி ஜாம்பவான்களால் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைய முடிவதில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு  திராவிட மொழிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது சன் குழுமம். 25 வருடங்களுக்கு மேலாக தென் இந்தியாவில் 33 சேனல்களுடன் கோலோச்சி வரும் சன் டிவி, இந்தியாவின் முதல் தனியார் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யும்பட்சத்தில் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.   இதனால் ஜெயலலிதா மீது பாஜக காட்டி வரும் நெருக்கம், உள்துறை மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றச் செய்யலாம் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. அதன் விளைவே சன் டிவியை கை மாற்றத் துடிக்கிறது பாஜக அரசு.  சன் டிவி நிறுவனர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அவர்கள் நடத்தும் சேனல்களால்  நாட்டுக்கு எந்த வகையில் ஆபத்து இருக்கிறது என்பதை ஆளும் பாஜக அரசு விளக்கத் தவறிவிட்டது.
 
அரசியல் பின்புலத்திலிருந்து சன் டிவி தோன்றினாலும், அரசியல் மாட்சரியங்களை கடந்து தமிழகத்தின் பொதுவான டிவி என்ற பெயரை அது என்றோ பெற்றுவிட்டது. மக்கள் மன்றத்தில் சன் டிவிதான் தமிழகத்தின் டிவி என்பதையும் அது நிலை நிறுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்ததும்  இரவு ஏழரை மணிக்கு சன் டிவியில் தவறாமல் செய்தி பார்க்கும் குடும்பத் தலைவர்களே அதிகம் என்பது நிதர்சனமான ஒன்று. உண்மை இப்படி இருக்க... சன் குழுமத்தை முடக்குவது என்ற முடிவு பாஜக அரசுக்கு பெரும் பின்னடவைத்தான் ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் சன் டிவி மீதான அடக்குமுறையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆளூம் பாஜக அரசு உணர்ந்துக் கொள்ளவேண்டும். இத்தகைய அதிகாரதுஷ்பிரயோகங்கள் ஆளும் கட்சிக்கு என்றும் ஆபத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!.
தோழன் மபா.
சென்னை.

ஞாயிறு, நவம்பர் 13, 2011

தி ஹிண்டுவை வம்பிக்கிழுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விளம்பரம்.






 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியீட்ட  விளம்பரம் 'தி இந்து' நாளிதழை பகிரங்கமாக சண்டைக்கு இழுத்துள்ளது. 

சமீப காலமாக தமிழ் நாட்டில்  ஆங்கில பத்திரிகைகளிடையே 'யார் பெரியவன்' என்ற போட்டி கடுமையாக எழுந்துள்ளது.

அது நாள் வரையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிண்டு ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே தமிழ் நாட்டில்  கோலோச்சிவந்தன.  2005ம் ஆண்டு டெக்கான் கிரானிக்கலும்,  2008ம் ஆண்டு ஏப்ரல் தமிழ் வருடப் பிறப்பு அன்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவும்' சென்னையில் தொடங்கப்பட்டன.  அன்றிலிருந்து சென்னை பத்திரிகை உலகில் பரப்பரப்புத் தொற்றிக் கொண்டது.


சென்னையோடு மும்பையை ஒப்பிடும் போது, மும்பையில் நாளிதழ்கள் அதிகம். ஆனால் சென்னையில் அப்படி அல்ல. இங்கு ஆங்கில காலை நாளிதழ்கள் நான்கும்,  தமிழில் காலை நாளிதழ்கள் நான்கும், மொத்தம் 8 நாளிதழ்கள் மட்டுமே முக்கிய இடத்தில் உள்ளன.  சென்னையிலிருந்து இருந்து வெளியாகும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்து நாளிதழ்கள் தமிழர் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டே செய்திகளை வழங்கி வருகின்றன.


நகரின் பல பாகங்களில் ஐடி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, கடந்த 10 வருடத்தில் சென்னை பல்வேறு துறைகளில் வியப்புக்குறிய வகையில் முன்னேறி வருகிறது.  ஆங்கில கலாச்சாரத்தின் தாக்கம், தமிழக மண்ணில் அதி விரைவாக பரவிவருகிறது. இதன் அளப்பரிய வியாபார வாய்ப்பு சென்னையின் கதவுகளை சர்வதேச அளவில் திறந்துவிட்டுள்ளது.

இந்த காலக் கட்டத்தில் சென்னையில் காலுன்றிய தி டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்கள்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்துவை ஓரங்கட்டிவிடலாம் என்று எளிதாக கணக்கு போட்டன,   அவைகளுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தவுடன் நமக்கும் அப்படித்தான் தோன்றியது.

தி டெக்கான் கிரானிகல் சொல்லிக் கொள்ளும் அளவில் விற்பனை ஆனாலும், அதன் விளம்பர வாய்ப்புகள் அப்படி ஒன்றும் பெரிதாக  இல்லை.

ஆனால் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிலையோ வேறு. இந்தியா முழுவதும் பலமான நெட்வொர்க் உள்ள அந்த பத்திரிகை யாரையும் எதையும் வலைக்கும் ஆற்றல் படைத்தது. விளம்பரம் மற்றும் விற்பனைக்காக எந்த ஒரு நிலைக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக் கூடியது.

 எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து நாளிதழ்கள் நினைத்துப் பார்க்காத பரீச்சார்த்திரமான முயற்சிகளை கையாள்வதில் டைம்ஸ் எப்போதுமே முன்னனியில் இருக்கிறது. சென்னையில் லான்ச் ஆனபோதே தமிழில் விளம்பரம் வெளியீட்டு ஆங்கில பத்திரிகைக்கு தமிழில் விளம்பரமா? என்று புருவம் உயரச்செய்தது.

இன் நிலையில் இந்த (நவம்பர்)  மாதத் தொடக்கத்தில் டைம்ஸ் வெளியீட்ட விளம்பரம், பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஒரு ஆள் வேஷ்ட்டி  சட்டை அணிந்துக் கொண்டு, கையில் ஒரு நாளிதழை வைத்துக் கொண்டு பார்க்கும் இடத்தில் எல்லாம் தூங்கிக்கொண்டு இருக்கிறான்.
    
ஒரு கட்டிடத் திறப்பு விழாவின் போது, விருந்தினர் ரிப்பன் வெட்ட, அருகில் தூங்கிக் கொண்டு இருக்கிறான். விளம்பரத்தைக் காண இங்கே சொடுக்கவும்

பளுதூக்கும் வீரர்கள் இருக்கும் சபையில் தூங்கிக்கொண்டு இருப்பான்.

மக்கள் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்கும் போது அங்கு அமர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறான்.

காவல் துறை அணிவகுப்பின் போதும்...ஓட்டு சேகரிக்கும்  போதும்.... என்று பார்க்கும் இடத்தில் எல்லாம் அவனது தூக்கம் தொடர்கிறது.

இந்த விளம்பரங்கள் ஓடும் போது பின்னணியில் ஒரு பெண் குரல் கிழ்கண்டவாறு பாடுகிறது.

ஏ....ஆராரோ ஆரிரரோ......
எங்கண்ணே  ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு.  (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன்
தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன்
தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு.....   (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு


பின்பு இறுதியில்

STUCK WITH NEWS 

THAT PUTS YOU 

TO SLEEP? 

என்ற வாசகத்தோடு அந்த விளம்பரம் முடிகிறது.


இதில் எங்கே பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்?.  அந்த தூங்கும் மனிதன் தனது கையில் தி இந்து நாளிதழைதான்  மடித்து  வைத்திருக்கிறான், என்பது கடைசி காட்சியில் மிகத் தெளிவாக தெரிகிறது.  

'சவ சவன்னு தூக்கம் வரவழைக்கும் செய்திகளைத் தரும் இந்து நாளிதழ்,  இனி ஒரேடியாகத் தூங்கட்டும்' என்ற பொருள் வரும்படி, அந்த விளம்பரம் உள்ளதாக விளம்பர நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறனர். 

இதற்கு இந்துவின் பதில் என்ன....?





திங்கள், அக்டோபர் 03, 2011

குமுதத்திலிருந்து வரதராஜன் நீக்கம்: பதிலடித் தந்த ஜவஹர் பழனியப்பன்.

வரதராஜன் வெளியீட்ட அறிக்கை


 குமுதம் விவகாரம்: பதிவு 2

எனது முந்தைய பதிவின் கடைசி பாராவில் ஜவஹர் பழனியப்பனிடமிருந்து பதில் அறிக்கை வரப்போகிறது என்று தெரிவித்திருந்தேன். அது நடந்து விட்டது.   முந்தைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


குமுதம் பதிப்பாளர் வரதராஜன்  வெளியிட்ட விளம்பரத்திற்கு, பதிலடித் தந்து   'காஷன் நோட்டிசை' (எச்சரிக்கை அறிக்கை) வெளியீட்டார் ஜவஹர் பழனியப்பன்.

நேற்று அதாவது ஞாயிறு அன்று காலை வந்த ஆங்கில தினசரிகளில்குமுதம் பதிப்பாளர் வரதராஜன்,  குமுதம் நிர்வாக இயக்குனர் ஜவஹர் பழனியப்பனை நீக்கி ஒரு 'காஷன் நோட்டீஸ்' வெளியீட்டிருந்தார். இது தி ஹிண்டு நீங்களாக இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் மற்றும் டெக்கான் கிரானிககளில் வெளிவந்தது.

அதற்கு பதிலடித் தந்து இன்று காலை அதாவது 03/10/2011 திங்கள் அன்று அந்த விளம்பரம் வந்த அதே நாளிதழ்களுக்கு அதே அளவு விளம்பரம் ஒன்றை ஜவஹர் பழனியப்பன் தனது தாயின் பெயரில் எஸ்.ஏ.பி.கோதை ஆட்சி (நிறுவனர் எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்களின் துனைவியார்) என்ற பெயரில் வெளியீட்டிருக்கிறார்.

ஜவஹர் பழனியப்பன் வெளியீட்ட அறிக்கை
இதில் பி.வரதராஜன் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து, சென்னையில் 26/09/2011 அன்று நடந்த கம்பெனி போர்ட் மீட்டிங்கின் மூலம், சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து ஒரு மனதான தீர்மானத்துடன் நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தில் பெயரில் வாங்கிய கடனுக்கும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கும்   தமது தாயாருமான திருமதி கோதை ஆட்சிதான் உரிமையாளர்    என்று அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுளளது.

அதோடு, இனி வரதராஜனை யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம் என்றும், ஒரு படி மேலே போய்,  அவர் நியமனம் செய்த ஊழியர்களோடு  யாரும் தொடர்பு வேண்டாம் என்றும்  ஜவஹர் பழனியப்பன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரும்  அறிக்கைகளால்,  குமுதம்  ஊழியர்கள் சற்று கலக்கத்துடனே இருக்கின்றனர்.  இனி யார் பின் செல்வது. இனி நிர்வாகம் கை மாறுமா, அல்லது இப்படியே நீடிக்குமா...? என்பது தெரியாமல் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த அறிக்கைக்குப் பின்னர் வரதராஜனுக்கு ஆளும்கட்சி  ஆதரவு இருப்பதாகவும், அதனால்தான் அவர் தைரியமாக  ஜவஹர் பழனியப்பனுக்கு முன்பாக முந்திக்கொண்டு அறிக்கை வெளியீட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஜவஹர் பழனியப்பனுக்கு, மத்தியில் ஆளும் கட்சி ஆதரவு  இருப்பதாவும் நம்பப்படுகிறது. 

 .  இரு தரப்பும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால், இனி மோதல் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 அதுவரை குமுதத்தின் நிலை......?                                                                                         

 

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

குமுதத்தில் நடக்கும் குடிமிபிடிச் சண்டை?!







இன்றைய (02/10/2011) ஆங்கில நாளிதழ்களில் ஒரு 'காஷன் நோட்டிஸ்' விளம்பரம்,  குமுதம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு உள்ளது.  அதில்... இனி குமுதம் நிறுவனத்திற்கும்,  குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும்,   அவரது பங்குகள் அனைத்தும் உடனடியாக எந்தவித அறிவிப்பும் இன்றி ரத்துசெய்யப்படுகிறது. இனி குமுதம் நிறுவனம் தொடர்பாகவும் அதன் சஞ்சீகைகளோடும் அதன்  ஆசிரியர் கூழுவோடும்  அவருக்கு எந்தவித சம்மதமும் இல்லை. 

இனி குமுதம் நிறுவனம் தொடர்பாக அவரை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அப்படி மீறி தொடர்பு கொண்டால் அதற்கு அவர்களே முழு பொறுப்பு என்ற ரீதியில் அந்த விளம்பரம் உள்ளது.  அதோடு, ஜவகர் பழனியப்பன் ஒரு வெளிநாட்டு பிரஜை என்றும்,  அவர் NRI என்றும்  விளம்பரத்தில் இரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது, குறிபிடத்தக்கது.

விளம்பரத்தை  குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன் தந்திருக்கிறார்.

பல வருடங்களாக புகைந்த ஒரு விஷயம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குமுதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர போட்டி?

குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜனுக்கும் குமுதம் நிறுவனத்தை யார் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்வது என்று  பெரும் போரட்டமே நடந்துவருகிறது.  அதன் விளைவாகவே இந்த விளம்பரம்   கொடுக்கப்பட்டுள்ளது,

குமுதத்தை நிறுவிய ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன்தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.  இவர்தான் குமுதம் உள்ளிட்ட அதன் குழும இதழ்களின் நிறுவன நிர்வாக ஆசிரியர்.   குமுதம் குழும இயக்குநராகவும் உள்ளார்

குமுதம் நிறுவனத்தின் பதிப்பாளராக இருந்த மறைந்த பிவி பார்த்தசாரதியின் மகன்தான் வரதராஜன். குமுதத்தின் மேலாளராக இருந்து, பார்த்தசாரதி மறைவுக்குப் பின்னர் பதிப்பாளரானார்.

அமெரிக்காவில் பிரபல இதய நோய் நிபுனரான டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,   ஒங்கியோ மாகானத்தில் மவுண்ட் வெர்னாவில் வசித்து வருகிறார்.  அமெரிக்காவில் வசித்து வருவதால், குமுதம் மற்றும் ரிப்போர்டர் இதழ்கள் தயாரானதும் அவரது ஒப்புதலுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அனுமதிபெறப்பட்டு வந்தது.


குமுதம் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு அனைத்தையும் நிர்வாக இயக்குனர் வரதராஜனே கவனித்து வந்தார்.

இன்னிலையில் குமுதத்தில் அவரது பிடி அதிகமாக  அதிகமாக, கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் ஒரங்கட்டப்பட்டார்.  குமுததிற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று விளம்பரம் கொடுக்கும் அளவிற்கு விஷயம் விபரீதமாக முடிந்திருக்கிறது.



நிதி மோசடி:  வரதராஜன் கைது!



இன்னிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள் போன்ற குற்றங்களின் அடிப்படையில், ஜவஹர் பழனியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.

.

குமுதத்தை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வரதராஜன் முயற்சித்ததாகவும், அதற்காக ஆசிரியர் குழு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குமுதம் நிறுவன உரிமையாளர் என்ற வகையில் குற்றச்சாட்டை அளித்திருந்தார் ஜவஹர் பழனியப்பன்.

அன்று  இரவு கைது செய்யப்பட்ட வரதராஜன், காரில் வைத்து பலமணி நேரம் அலைகழிக்கப்பட்டர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்டார்.

அவர் மீது  நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள்  போன்ற குற்றங்களின் அடிப்படையில், 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.


விசாரிக்க குழு  அமைத்த கலைஞர்.

குமுதம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்கும் என அன்றைய முதலமைச்சர்  கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.  இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் கூறியதாவது....



குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் புகாரின் பேரில்தான் வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்று கூறிய முதல்வர்  கருணாநிதி, தமது அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதித்தே நடக்கும் என்றும், தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான குமுதம் நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத்  சுமுக தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.


நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்ச ரூபாய் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாக திருத்தி, பல கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்தார் என்று வரதராஜன் மீது பழனியப்பன் புகார் கூறியிருந்தார்.

ஆனால் வரதராஜனோ, தன்னிடமுள்ள பங்குகள் அனைத்தையும் தன்னிடம் விற்றுவிடுமாறு பழனியப்பன் தன்னை வற்புறுத்தினாரென்றும் அதற்கு தான் மசியாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் அப்போது அவர் கூறினார்.



ஆட்சி மாற்றம் காரணமா....?


கடந்த திமுக ஆட்சியின் போது டாக்டர் ஜவஹர் பழனியப்பனின் 'கை' ஓங்கியிருந்தது. குமுதம் விவகாரத்தில் அன்றைய திமுக அரசு,  ஜவஹர் பழனியப்பன் பக்கம் இருந்து செயல்பட்டதாக  பதிப்பாளர் வரதராஜன் நினைத்தார்.  அதுவுமில்லாமல்,  அப்போதைய காவல் துறை, வரதராஜனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தாமல் அங்கும் இங்கும் அலைகழித்தது. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் கூட சொல்ல மறுத்தது போலீஸ்.

இதனால் கடுப்பான வரதராஜன்,  ரிப்போர்ட்டரில் திமுக அரசை கடுமையாகச் சாடி எழுத... ஆசிரியர் குழுவை முடிக்குவிட்டார்.   நடந்த  சட்டமன்றத்  தேர்தலில் திமுகவிற்கு எதிராகத்தான் இருந்தது குமுதம் நிர்வாகம்.

அதோடு... ஜவஹர் பழனியப்பனை குமுதத்திலிருந்து வெளியேற்ற நல்ல நாள் பார்த்த வரதராஜனுக்கு, வசமாக வாய்த்தது ஜெயலலிதா தலைமையிலான புதிய  அரசு.  அதனால் நிர்வாகக் குழு(?)வை கூட்டி ஜவஹர் பழனியப்பனை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதுவே இப்போது விளம்பரமாக வெடித்திருக்கிறது.


 மனமாற்றம் வேண்டும்.
  • ஜவஹர் பழனியப்பன் மருத்துவத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், குமுதம் நிர்வாகத்தில் அவர் அவ்வளவாக தலையிடுவதில்லை. அதுவே அவருக்கு எதிராக போய்விட்டது என்கிறார் விஷயம் தெரிந்த ஒருவர்.
உட்கார்ந்திருப்பது எஸ்.ஏ.பி. நிற்பது பி.வி.பி.


  • குமுதம் இந்தளவிற்கு வளரக் காரணம் எஸ்.ஏ.பியும் அவரது நண்பர் (பி.வி.பி) பார்த்தசாரதியும்தான்.  இருவரது நட்பும்  அயராத உழைப்பும்தான் குமுதத்தை உயரத்தில் ஏற்றிவைத்தது.  இருவரும் விட்டுக் கொடுத்து வழிநடத்தி சென்றனர். 9 லட்சம் பிரதிவரை விற்பனையாகி குமுதம் உச்சம் தொட்டு நின்றபோது, இருவரது நட்பும் உலக பிரச்சித்தமானது. 
  • ஆனால் இப்படி இருவரது வாரிசுகள்,  மோதிக் கொள்வது குமுதம் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்கிறார் குமுதத்தின் நீண்ட வருட வாசகர் ஒருவர். 

இன்னிலையில் ஜவஹர் பழனியப்பனும் தனது  தரப்பு நியாயத்தை  சொல்ல.... விரைவில் ஒரு விளம்பரத்தைத் வெளியீடுவார் என்கிறது விஷயம் அறிந்த ஒரு பட்சி!?


திங்கள், ஏப்ரல் 25, 2011

தி இந்து நாளிதழில் குடுமிபிடிச் சண்டை!




"வீதிக்கு வந்தது மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவின் அவதாரம்!!"

"சவுக்கு இணைய தளத்தில் இந்துவுக்கு சவுக்கடி!!!"

 என்.ராம்                                 என்.ரவி



இந்து பத்திரிக்கை தான் இப்படி கருணாநிதியால் அன்போடு மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று அழைக்கப் பட்டது. இந்து பத்திரிக்கைக்கு, ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. வீரப்பனைப் பற்றி புத்தகம் எழுதிய கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி ஒரு நபர் இறந்த செய்தியை மூன்று நாள் கழித்து, அந்த நபரின் வீட்டுக்கே தெரியப் படுத்தும் தந்தியைப் போன்றது என்று இந்து நாளிதழை வர்ணித்திருந்தார்.

இந்து நாளேடு அப்படி சில நேரங்களில் செய்திகளை தாமதாக வெளியிட்டாலும், இந்து நாளேட்டில் ஒரு செய்தி வந்து விட்டால், அந்தச் செய்தி 100% உண்மை என்று எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, அந்த நாளிதழுக்கு ஒரு நம்பகத் தன்மை உண்டு. படித்த வர்க்கத்தின் மத்தியில் இந்த நாளிதழுக்கு, மிகுந்த ஆதரவு உண்டு.



ஈழப் போரின் போது, இந்த நாளிதழ் எடுத்த நிலைபாடுகள், நேரடியான தமிழின விரோத நிலைபாடு. இந்த நாளிதழின் ஆசிரியர், என்.ராமின் புலிகள் விரோத கொள்கையின் காரணமாகவே, பல்வேறு சமயங்களில் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நிலைபாடுகளை எடுத்தது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்து எடுத்த தமிழின விரோத நிலைபாடுகளின் காரணமாகவே, சிங்கள அரசு, என்.ராமுக்கு லங்கா ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.



யார் இந்த ராம் ? இந்த ராம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்பவர். இடது சாரிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் தொடர்பான செய்திகளுக்கு இந்துவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படுகின்றன என்பது உண்மையே. ஆனாலும் தன்னை கம்யூனிஸ்ட், அழைத்துக் கொள்ளும் இந்த லங்கா ரத்னா, செய்து கொண்டிருக்கும் காரியங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

அதற்கு முன், இந்து பத்திரிக்கையின் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்,

20 செப்டம்பர் 1878ல் இந்து பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவருகிறது. தஞ்சை மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த சுப்ரமண்ய அய்யர் வீரராகாவச்சாரியார், டிடி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், கேசவராவ் பந்துலு, மற்றும் சுப்பாராவ் பந்துலு ஆகியோராடு சேர்ந்து, ஒரு ரூபாய் 12 அணா முதலீட்டில் தொடங்கப் பட்டது.



பின்னாளில் மற்றவர்கள் விலகிக் கொள்ள, வீரராகவாச்சாரியார் மற்றும் சுப்ரமண்ய அய்யங்கார் மட்டும் இந்துவை தொடர்ந்து நடத்தினர்.



முதலில் வார இதழாக ஒவ்வொரு புதனன்றும், மாலையில் வெளி வந்தது. சென்னை மின்ட் தெருவில் தான் அச்சடிக்கப் பட்டது. வாரத்திற்கு 80 காப்பிகள் மட்டுமே அடிக்கப் பட்டன. 1 அக்டோபர் 1883 முதல், வாரத்திற்கு மூன்று இதழ்கள் வெளி வந்தது.   அப்போது இந்த பேப்பரின் சைஸ், இப்போது வரும் பேப்பரில் கால் பாகம். 1 ஏப்ரல் 1889 முதல், நாளிதழாக வெளி வரத் தொடங்கியது.



அக்டோபர் 1898ல் இந்து நாளிதழின் சர்குலேஷன் பெருமளவில் குறையவும், சுப்ரமணிய அய்யர் விலகிக் கொள்கிறார். பிறகு சில நாள், வீரராகவாச்சாரியார் மட்டும் நாளிதழை தொடர்ந்து நடத்தகிறார். அவருக்கும் கட்டுப்படயாகாததால், இந்துவை விற்க முடிவெடுக்கிறார்.



அப்போது, இந்த பத்திரிக்கையின் சட்ட ஆலோசகராக இருந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த கஸ்தூரி ரங்க ஐயங்கார், இந்து நாளிதழை விலை கொடுத்து வாங்குகிறார்.



இந்து நாளிதழ் கஸ்தூரி & சன்ஸ் என்ற பெயரில், ஜி.நரசிம்மன், எஸ்.பார்த்தசாரதி, எஸ்.ரங்கராஜன், ஜி.கஸ்தூரி, ஆகியோரால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது.



எண்பதுகளில், இவர்களின் வாரிசுகள் பொறுப்பேற்கிறார்கள். நரசிம்மனின் பிள்ளைகள், என்.ராம், என்.ரவி மற்றும் என்.முரளி.   பார்த்தசாரதியின் வாரிசுகள், மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், மற்றும் நளினி கிருஷ்ணன்.   ரங்கராஜனின் வாரிசுகள், ரமேஷ் ரங்கராஜன், விஜய அருண் மற்றும், அகிலா அய்யங்கார். கஸ்தூரியின் வாரிசுகள், கே.பாலாஜி, கே.வேணுகோபால் மற்றும், லட்சுமி ஸ்ரீநாத். (அது எப்டி கரெக்டா எல்லாரும் மூணு பிள்ளை பெத்துருக்காங்க ?)



இப்போது இந்த வாரிசுகளுக்குள் உள் குத்து உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரிசு மோதலில், முக்கிய பங்கை வகிப்பவர், என்.ராம். இவரை இந்து நாளேட்டின் கருணாநிதி என்று தாராளமாக வர்ணிக்கலாம். ஏனென்றால், 87 வயதிலும், அடுத்த முதல்வர் நான் தான் என்று பெற்ற பிள்ளைகளுக்குக் கூட வழி விடாமல், அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பது போலத்தான் என்.ராமும் பண்ணிக் கொண்டிருக்கிறார்.



இந்த நாளேட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60.   ஆனால், என்.ராம் மட்டும், 65 வயது வரை ஆசிரியராக தொடர்ந்தார்.   நிர்வாகக் குழுவில் இதற்குத் தகுந்தார்ப் போல, விதிகளை மாற்றிக் கொண்டார்.



இப்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், 65 வயது முடிந்தும் கூட, ராம் ஓய்வு பெற மறுப்பதுதான்.   என்.ராம், இந்து நாளேட்டின் கருணாநிதி தானே ?



இப்போது ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் என்.ரவியை அந்தப் பதவியில் இருந்து நீக்க ராம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இந்த முயற்சியை ஒட்டி, ராமின் சகோதரரும், இந்து பத்திரிக்கையின் மற்றொரு ஆசிரியருமான ரவி, இந்து பத்திரிக்கையின் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இதோ.

அன்பார்ந்த சக பணியாளர்களே,                     

 என்.ரவி



நாம் இப்போது நுழையும் அடுத்த விநாடியிலிருந்து, மிக நீண்டதொரு போராட்டமும், பிரச்சினையும் மிகுந்த ஒரு தருவாயில் நுழையப் போகும் சூழலில், உங்களின் புரிதலை வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மோசமான நடத்தையின் காரணமாக என்னைக் கவலையடையச் செய்யும் வகையில், என்.ராம் மற்றும் சில நிர்வாக இயக்குநர்கள் கடந்த 18 ஏப்ரல் 2011 அன்று கூடி, என்னை ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, 2004ல் இந்துவில் சேர்ந்த சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக்க முடிவெடுத்தள்ளனர்.

 

இந்தப் பத்திரிக்கையில் நிருபராகச் சேர்ந்த 1972ம் ஆண்டு முதல், நான் பல ஆண்டுகளாக, அனைவரின் நிறைவுக்கும் ஏற்ற வகையில் பணியாற்றி வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நாளிதழின் முன்னேற்றத்திற்காக, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் பணியாற்நி வருவதை நீங்கள் அறிவீர்கள். 1991ம் ஆண்டு நான் பொறுப்பேற்றதிலிருந்து, சென்னையை மையமாகக் கொண்டு வெளியாகி வந்த இந்த நாளிதழை, மாநிலத்தின் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்ததோடு, ஒரே பக்கமாக இருந்த உள்ளுர் செய்திகளை நான்கு பக்கங்களாக மாற்றியதோடு, தேசிய அளவுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு கவர்ச்சிகரமான பகுதிகளை அறிமுகப் படுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.   வாசகர்களின் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி, வாசகர்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி இச்செய்தித்தாளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்.   செய்தித்தாளின் நேர்மையான கொள்கை மாறாமல், பல்வேறு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள், நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அச்சமின்றி இச்செய்தித்தாள் செயல்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.



பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், நான் பொறுப்பேற்ற, ஜனவரி 1991ல் 4,52,918ஆக இருந்த இந்நாளேட்டின் விற்பனை, ஜுன் 2003 அன்று உள்ளபடி 9,33,458ஆக உயர்ந்துள்ளது.   குறிப்பாகச் சொன்னால், 4,80,540 காப்பிகள் (106%) விற்பனை உயர்ந்துள்ளது.   ஆனால், சமீபத்தில், இந்துஸ்தான் டைம்ஸுக்கு நிகராக இருந்த, இந்து பத்திரிக்கையின் விற்பனை, தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.   சமீபத்திய சந்தை ஆய்வின் படி, வாசகர்கள், இந்து நாளேட்டின் மீது கோபத்தில் உள்ளதாகவும், பத்திரிக்கையில் உள்ள செய்திகள், ஆர்வக் குறைவை ஏற்படுத்துவதாகவும், இடதுசாரி அரசியலின் மீது, காழ்ப்புணர்வோடு இருப்பதாகவும் வாசகர்கள் கருதுவதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 4 மே 2010 அன்று 65 வயதை அடைந்த ராம், தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, நான் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.   ஆனால், தீய எண்ணத்தோடு, ராம் இந்த ஒப்பந்தத்தை மீறியதால், தலைமை ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்கும் விவகாரம் அப்படியே நின்று போயுள்ளது.



ராமின் நம்பிக்கை துரோகத்தின் ஒரு பகுதியாக, இயக்குநர்கள் குழுமத்திலிருந்த என்.முரளியின் அதிகாரங்களை பறித்து அவரை நீக்கியதை, கம்பெனி லா போர்டு (தீர்ப்பாயம்) ரத்து செய்ததோடு, மோசமான, நியாயமற்ற நடவடிக்கை என்றும் தீர்ப்பளித்துள்ளது.   இவ்வாறு தீர்ப்பு வந்த நான்கே மாதங்களுக்குள், அதே போன்ற நியாயமற்ற மற்றொரு நம்பிக்கை துரோகத்தின் வடிவாக ராமும், அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இயக்குநர் குழு உறுப்பினர்களும், இந்நாளேட்டின் பாரம்பரியத்திற்கு எதிராகவும், கம்பெனி லா போர்டின் தீர்ப்புக்கு எதிராகவும், நான் ஆசிரியர் பொறுப்பேற்பதை தடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.



ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியான ஓய்வு தேதிக்கு ஒரு ஆண்டு கழித்தும், கம்பென் லா போர்டின் தீர்ப்புக்கு பிறகு, பதவியில் தொடர எவ்வித அருகதையும் இல்லாத ராம், ஐம்பதுகளில் இருக்கும் மற்ற ஆசிரியர் குழு உறுப்பினர்களை, அழிக்கும் உத்தேசத்தோடு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூட ஆசிரியர் பொறுப்புக்கு வரக் கூடாது என்ற நோக்கில் ஒரு தீய திட்டத்தை இயற்றியுள்ளார்.   அடுத்து யார் ஆசிரியர் என்பதை முடிவு செய்யும் திட்டத்திற்கு பதிலாக, ஒட்டு மொத்தமாக, எல்லோரையும் அழிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.   திடீரென்று, விதிகளை மாற்றி இந்து நாளிதழின் உரிமை வேறு, நிர்வாகம் வேறு, என்று பிரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, என்னோடு சேர்த்து, இணை ஆசிரியர் நிர்மலா லட்சுமணன் மற்றும் மற்றொரு ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி ஆகியோரும் பதவி விலக நிர்பந்திக்கப் படும் படி திட்டமிடப் பட்டுள்ளது.



இது போல பதவி நீக்கம் செய்வதைத் தவிர்த்து, 2003ல் தலைமை ஆசிரியராக பொறுப் பேற்றதிலிருந்து, ஆசிரியர் குழுவின் அமைப்பை மாற்றும் பல்வேறு திட்டங்களை எங்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி வந்துள்ளார்.



ஆசிரியர் குழுவின் விவாதங்களின் போது, சில அரசியல் சக்திகளுக்கு தேவையற்ற ஆதரவை தருவதும், சில இடது சாரித் தலைவர்களுக்கு கூடுதலாக கவரேஜ் தருவதும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராசாவுக்காக வக்காலத்து வாங்கியதும், இதே போல ஊழல் குற்றச் சாட்டுகளில் சம்பந்தப் பட்ட, சுரேஷ் கல்மாடி அஷோக் சவாண் மற்றும் எடியூரப்பாவை பதவி விலக வற்புறுத்திய அதே வேளையில் இதே போல ஊழலில் ஈடுபட்டு, ஏராளமான ஆதாரங்கள் குவிந்தும், ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லாமல் தவிர்த்தது, சீன நாட்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது, சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது, இவை எல்லாவற்றையும் விட எந்த தலைமை ஆசிரியிரும் செய்யாத வகையில், என்.ராம் ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்களின் படங்களை பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிட்டு தனக்கே விளம்பரம் தேடிக் கொண்டது, ஆகிய செயல்கள், பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நாளிதழ்களே வெட்கப் படக் கூடிய செயல்களாகும்.

இந்த நாளேடானது, மற்ற எல்லா விஷயங்களையும் விட, கொள்கையில் நேர்மையையே தனது முக்கிய குறிக்கோளாய் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சமீப காலமாக, இந்தக் கொள்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில், விளம்பரம் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடும் அளவுக்கு இந்து நாளேடு தரம் தாழ்ந்து விட்டது.   விளம்பரத்துக்கும், செய்திகளுக்கும் இடையே இருந்து வந்த மதில் சுவரை, மதில் சுவருக்கு பதிலாக ஒரு நூலாக மாற்றும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.



இது போல ஒரு தந்திரமான உடன்பாட்டின் வெளிப்பாடாக, 22 மே 2010 அன்று, ராசாவின் லைசென்ஸ் கொடுத்த செயல்களை நியாயப் படுத்திய ஒரு பேட்டி வெளி வந்தது. இந்தப் பேட்டியை பிரதம மந்திரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தப் பேட்டிக்கு கைமாறாக, அவசர அவசரமாக அதே நாளன்று, ராசாவால், தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளிக்கப் பட்ட தொலைத் தொடர்புத் துறையின் முழுப் பக்க வண்ண விளம்பரம் வெளியிடப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இது போன்ற நடவடிக்கைகளை தொடர்வதற்காகவே, ஆசிரியர் குழுவிற்கு இருக்கும் சுதந்திரத்தை மாற்றி, நாளிதழின் ஆசிரியர், வணிக பிரதிநிதிகள் உள்ள இயக்குநர் குழு சொல்வதைக் கேட்டு செயல்படும் கைப்பாவையாக ஆக்கும் வகையில், விதிகளை மாற்ற, முயற்சி நடைபெற்று வருகிறது. இந்துவின் மதிப்பீடு மற்றும் செயல்பாடுகளின் (Editorial function) மீது தொடுக்கப் பட்ட இது போன்ற நடவடிக்கைகள் இந்து நாளேட்டின் ஆன்மாவின் மீத தொடுக்கப் பட்ட தாக்குதலாகும்.   இது போல மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு விட்டு, இந்துவின் செய்திக் கொள்கை மிக அதிக மதிப்பீடுகளை கொண்டது என்று இப்போது அறிவித்திருப்பது வெற்று கோஷமேயன்றி வேறல்ல.



அனைத்து வகையான முதலீட்டாளர்களும் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரத் துடிக்கும் நேரத்திலும், ஊடகங்கள், பலப் பல கவர்சிகரமான விஷயங்களைக் கொண்டு வந்து வாசகர்களை கவர போட்டி போடும் நேரத்தில், இந்துவுக்கு இந்த நெருக்கடி, வந்துள்ளது.   பத்திரிக்கையாளர்களின் ஒரு அங்கம் என்ற முறையில், நீங்கள் அனைவரும் இந்து பத்திரிக்கையின் வளர்ச்சிக்கும், கடும் போட்டி நிலவும் ஒரு சூழலில் இந்துவின் கொள்கையை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறீர்கள்.   அரை குறை உண்மைகளோடு பரவும் வதந்திகளைத் தடுக்கும் பொருட்டு, என்ன நடக்கிறது என்ற உண்மைகள், இயக்குநர் குழுவின் அறையோடு நின்று விடாமல், இந்தப் பத்திரிக்கையின் ஒரு அங்கம் என்ற முறையில் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.



இந்த உத்வேகத்திலேயே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.   மேலும், இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று உறுதியையும் நான் உங்களுக்கு அளிக்கிறேன். நம் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான, இந்துவின் நேர்மையான கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற இந்தப் போராட்டத்தில், உங்களின் புரிதலையும், ஆதரவையும் வேண்டியே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.



என்.ராம் என்ற போலி கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் தெரிகிறதா ?   தன்னுடைய சொந்த நலன் காக்கப் பட வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்.



ராமின் இந்த முடிவை எதிர்த்து, மீண்டும் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக, ரவி தலைமையிலான டீம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 ந்து நாளேட்டின் 50 பங்குதாரர்களின் கூட்டம் மே 20 அன்று, கூட்டப் பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



உரிமை உள்ள மற்றவர்களை வீழ்த்தி, இந்து பத்திரிக்கையை சட்ட விரோதமாக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே ராம், 2006 முதலாகவே, கருணாநிதியின் கைப்பாவையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார் என்பதை, அவரது சொந்தத் தம்பி எழுதிய கடிதம் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.



ராசாவைக் காப்பாற்றுவதற்காக, ராசாவின் பேட்டியை வெளியிட்டதோடு, ராசாவுக்கும் மன்மோகனுக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தையும் முழுமையாக வெளியிட்டு, அனைத்து விவகாரங்களும், மன்மோகனுக்கு தெரிவிக்கப் பட்ட பின்னரே நடந்தது போலவும், செய்தி வெளியிட்டது என்.ராம் தான். 66 கோடி ரூபாய் ஊழலான போபர்ஸ் ஊழலை தொடர்ந்து வெளியிட்டு, ஒரு அராசாங்கத்தையே கவிழ்த்த ஒரு நாளேட்டை தனது சொந்த நலனுக்காக, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை மறைக்க பயன்படுத்துகிறார் என்றால், ராசாவை தலித் இனத்தின் “தகத்தகாய கதிரவன்” என்று அழைத்த கருணாநிதியை விட மோசமானவர் அல்லவா ?   இந்து என்.ராம் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் வலம் வரும், ஒரு மிக மோசமான தீய சக்தி என்றே சவுக்கு பார்க்கிறது.

நன்றி: சவுக்கு இணைய தளம்.
http://savukku.net/home/735-2011-04-24-12-16-08.html

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...