வியாழன், டிசம்பர் 29, 2016

மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

       திசையறியாது திகைத்து நின்றவனுக்கு வழி காட்ட எத்தனையோ நல் உள்ளங்கள். சிக்கிக்கொண்ட ஆற்றுச் சுழலில் அதன் போக்குணர்ந்து போராடுபவனுக்கு நம்பிக்கையாய் கரை தெரிவதுபோல் இதோ 'மறுதாம்பு' எனது கவிதை நூல் வெளிவரத் தயாராக இருக்கிறது.


அழைப்பிதழ்

வரும் ஜனவரி இரண்டாம் தேதி மாலை 6 மணிக்கு கவிக்கோ மன்றத்தில்

 மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள் தலைமையேற்று நூலை வெளியீடுகிறார்கள்.

கவிதைகளின் சக்ரவர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சிறப்புரை.

நண்பர் அமிதம் சூர்யா மற்றும் சுகந்தி நாச்சியாள் வாழ்த்துரை.

நண்பர் வேல் கண்ணன் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

அனைவரும் வருக!. உங்கள் வருகையால்தான் இவ் விழா மேலும்
 சிறப்படையும்!.

உங்களுக்காக Iam waiting

#மறுதாம்பு

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...