சனி, ஜனவரி 17, 2015

புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்கள்!.

38வது சென்னை புத்தகக் காட்சி இதோ முடிவுறும் தருவாயில் இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக புத்தகங்களை சுமந்து வெளியேறுகிறார்கள்!. சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்!. உங்களுக்கு(ம்) பயன்படும் என்றே இந்த பட்டியலைத் தருகிறேன்.

இனி....ஓவர் டூ புத்தக பட்டியல்.....!

மாவோ வாழ்க்கை வரலாறு - ஃப்லிப் ஷார்ட். விடியல் பதிப்பகம்.  விலை ரூ.350/- .

பொதுவுடமை லட்சியத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்று நூல். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களைப் பற்றி நிறைய நூல்கள் வந்துள்ளன. மாவோவைப் பற்றி அதிகம் தமிழில் வந்ததில்லை. அந்த இடத்தை நிரப்ப இன் நூல் வெளிவந்துள்ளது.
****
ஒரு பனங்காட்டு நரி-மு.சுயம்புலிங்கம். உயிர்மை பதிப்பகம். விலை ரூ.90
 
வெள்ளாந்தியா இருக்கிற மனுசன், வெள்ளாந்தியா ஒரு கத சொன்னா எப்படி இருக்கும்?. அப்படி இருக்கு இந்த கத!.
***

தமிழ் மண்ணின் சாமிகள்-மணா.துடியா இருக்குற நம்ம ஊரு சாமிங்கள, தேடி போயி எழுதியிருக்கிறாரு மணா. தமிழன் சாமிக்கு இப்பதான் வரம் கெடைச்சிருக்கு?.
உயிர்மை பதிப்பகம். விலை ரூ.40.
***

கரிச்சான் குஞ்சு- கே.ஜி. சேஷாத்ரி.
ஆடுதுறை ஸ்ரீ குமரகுருபாரர் சுவாமிகள் மேல் நிலைப் பள்ளியில் படித்தபோது, பள்ளி ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா 'கரிச்சான் குஞ்சு' வந்திருந்தார். மேல சட்டை போடாம பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வந்தார். அவரது பெயர்  கொஞ்சம் வினோதமக இருந்ததால ஆளை போலவே அந்த பெயரும் என் மனசுல ஒட்டிகிடுச்சி.  அவரது பெயருக்காவே அவரை எக்கி நின்று வேடிக்கை பார்த்தோம்.
சாகித்திய அகாதமி. விலை ரூ.25.
****

தமிழகப் பழங்குடிகள். பக்தவத்சல பாரதி.மானிடவியலில் தொல்குடிச் சமூகம் பற்றிய ஆய்வு முக்கியமானது. இந்த நூல் ஆதிசமூக நிலையிலிருந்து இன்றைய நவீன காலம் வரை பதிவு செய்திருக்கிறது.
அடையாளம் பதிப்பகம். ரூ.170
***

தியாகசீலர் கக்கன், முனைவர் இளைசை சுந்தரம்.காமராஜரைப் பற்றி நினைவு கூறும் போது, எப்போதாவது தியாகி கக்கனைப் பற்றியும் கூறுவார்கள். கக்கனைப் பற்றிய அறிமுகம், நம்மிடம் அம்மட்டுமே. அந்த குறையை போக்க வெளிவந்திருக்கிறது இன் நூல். கக்கனை பற்றிய மிக உயர்வான நூல். மதுரா பாலனின் பெரும் முயற்சியால் இன் நூல் வெளிவந்திருக்கிறது. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.
மதுரா வெளியீடு. விலை 150.
 ***

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம். தமிழில் ஞானி.
காவியின் பயங்கரம் பற்றிய சிறு கையேடு, ஞானியின் ஞானபானுவில் வாங்கியது.
 ***
அயோக்கியர்களும் முட்டாள்களும்- ஞானி.
சமூகத்தில் இருக்கும் அயோக்கியர்களையும் முட்டாள்களையும் பற்றிய ரசனையான அதே சமயத்தில் ரகளையான புத்தகம்.
அன்னம் வெளியீடு. விலை ரூ70.
***

கவிதையும் கத்திரிக்காயும்-விக்கிரமாதித்யன். 
நக்கீரன் வெளியீடு விலை ரூ.90

கவிதைக்கும் கத்திரிக்காயுக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள்?. கவிதையோடு எதையும் லிங்க் செய்துவிடலாம்.
சாம்பிளுக்கு ஒன்று!.

பொருநைவண்டல் பூராவும்
புதுமைபித்தன்
காவேரி தீரம்
கு.ப,ரா
அந்த கொங்குச்சீமைக்கு
ஆர்.சண்முகசுந்தரம்
கரிசலுக்கொரு
கி.ராஜநாராயணன்
விக்ரமாதித்யனை
வகைப்படுத்து பார்ப்போம்.
***
.
நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா.
அடையாளம் பதிப்பகம். ரூ.120

ஓராண்டுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் குழுமம் சென்னையில் நடத்திய கல்வி தொடர்பான ஒரு அமர்வில் காஞ்சா அய்லய்யா உறையாற்றினர். செக்குலரிசம் பற்றிய அவரது பேச்சு மிகுந்த வரவேற்பை பெற்றது. ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறை தலைவர். 'Why i am not a Hindu?' என்று ஆங்கிலத்தில் எழுதி பிரசித்துபெற்ற இன்னூல் தற்போது தமிழில் வெளிவந்துள்ளது. சாதிய பாகுபாடு மிகுந்த ஆந்திராவின் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தோன்றியவர். விளிம்பு நிலை மனிதர்களுக்கான இவரது ஆங்கில கட்டுரைகள் எப்போதும் கவனிக்கக்கூடியவை. 'நலுப்பு' என்ற தலித் பகுஜன் இதழின் நிறுவனர். கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
****

மசால் தோசை 38 ரூபாய். வா.மணிகண்டன். யாவரும்.காம். விலை ரூ.110/-
இணைய எழுத்தாளரான வா,மணிகண்டன் வளரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். தற்போதைய இணைய உலகில் பெரும் பட்டாளத்தை வாசகராக கொண்டவர்.

***
மெனிஞ்சியோமா- கணேச குமரன். யாவரும்.காம். விலை ரூ.80/-
யாவரும்.காமின் புதிய வெளியீடு என்பதால் வாங்கினேன். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முனைப்போடு செயல்படுகின்றது யாவரும்.காம். புதிய சிந்தனையோடு களம் இறங்கியிருக்கிறார் எழுத்தாளர். பாராட்டுவோம்!.
***
கார்காத்தார் இன வரலாறு. சுப்பிரமணியன் பிள்ளை. விலை ரூ.175/- சந்தியா பதிப்பகம்.
அன்றைய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தின் அதிகாரம் மிக்க ஒரு சமூகம் கார்காத்தார். நகரத்தார் பற்றி ஏகத்திற்கும் பதிவுகள் இருக்கிறது, அனால். கார்காத்தார் பற்றி எந்த பதிவும் இது வரையில் இல்லை. அக் குறையை போக்க வந்திருக்கிறது இப் புத்தகம். தமிழனி வரலாற்றை அறிந்துக் கொள்ள சமூகம் சார்ந்த புத்தகங்கள் வாசிக்கப்படவேண்டிய ஒன்று!.
***
பூனை எழுதிய அறை -கல்யாண்ஜி. விலை ரூ.50. சந்தியா பதிப்பகம்

கல்யாண்ஜியின் கவிதைகள் எப்போதும் கவனத்திற்கு உரியவை. பசாங்கற்ற ஒரு மனிதன்  நெரிசல் மிகுந்த சாலையில் சட்டதிட்டதிற்கு உட்பட்டு நடைபாதையில் நடப்பது போல் அமைந்து விடுகிறது அவரது கவிதைகள்!.
***

ஆதி திராவிடர்கள் மாநாடுகள்-தொகுப்பாசிரியர் வாலாசா வல்லவன். தமிழ் குடிஅரசுப் பதிப்பகம். விலை ரூ.175.

ஆதி திராவிடர்கள் மாநாடுகள் என்ற இன் நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகள் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பூர்வகுடிகளே இவ் உலகில் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகமாக அமைந்துவிடுவது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையாகும். அந்த பிழையை நீக்க ஆதி திராவிடர்களெடுத்த முயற்சிகள் அக் கால நடையில் பதிவு செய்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று!.
***

பொசல்-கவிதா சொர்ணவல்லி. நிலமிசை பதிப்பகம். விலை.ரூ.80/-.
மண் மனம் வீசும் கதை தொகுப்பு. பொசல் என்ற வார்த்தைக்காகவே இப் புத்தகத்தை எடுத்தேன். அது சரி.....பொசல் என்றால் என்ன.....?
***

பூமணி சிறுகதைகள்- பூமணி. நற்றினை பதிப்பகம். விலை.ரூ.400/-
சாகித்திய அகாடமி விருதுப்பெற்ற, எழுபதுகளில் ஆற்றல்மிக்க சிறுகதைக் எழுத்தாளர்களில் ஒருவரான பூமணியின் சிறுகதை தொகுப்பு!. பூமணி தனது சிறுகதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி.
***

தாத்தா பாட்டி சொன்ன கதைகள்-கழனியூரான். பாரதிபுத்தகலாயம். விலை ரூ.60.
இந்த காலத்தில் எந்த தாத்தாப் பாட்டியும் கதை சொல்வதில்லை. யாரும் தாத்தாவாக மாறுவதுமில்லை. பாட்டிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.  புத்தகத்தில் படித்தே குழந்தைகள் புரிந்துக் கொள்ளவேண்டு. என் மகள் தேர்ந்தெடுத்தப் புத்தகம்.
***

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...