செவ்வாய், ஜனவரி 12, 2016

நாளை தொடங்குகிறது சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா!,


         ந்த முறையாவது பொங்கலுக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நிறைய பதிப்பகத்தார் நினைத்துக் கொண்டு இருந்தனர். இந்த பொங்கலுக்கும் அந்த கொடுப்பினை கிடைக்காமல் போய்விட்டது. 

வழக்கமாக பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) இந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோய்விட்டது. வெள்ளத்தால் தி நகரில் உள்ள பெரும்பான்மையான பதிப்பகங்கள் பாதிப்படைந்துள்ளன. அதனால் சென்னை புத்தகக் காட்சியை ஏப்ரலுக்கு தள்ளி வைத்துவிட்டது பபாசி. 

இன்னிலையில் நாளை தொடங்குகிறது 'சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா'. சென்னை நகரின் மையத்தில் ராயபேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி வரும் ஜனவரி 24ம் தேதி வரை இப் புத்தக் காட்சி நடைபெறுகிறது.  தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெருகின்றன. துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெருகிறது.

கடந்த 38 வருடங்களாக பொங்கலை முன்னிட்டு சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பான்மையான பதிப்பகத்தார் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லமுடிவதில்லை.   இந்த வருடமாவது பொங்கலை ஊரில் மனுச மக்களோடு கொண்டாடலாம் என்று நினைத்திருந்தவர்கள் எல்லாம்,  கண்ணை துடைத்துக் கொண்டு  புத்தகத்தை அடுக்கத் தொடங்கிவிட்டனர். 

அடுத்த இரண்டு வாரங்கள் சென்னை ராயப்பட்டை விழா கோலம் பூண போகிறது.  ரொம்ப வருஷத்திற்கு பிறகு சென்னை மவுண்ட் ரோடு பக்கம் சென்னை புத்தகக் காட்சி நடைபெறுவது குறிபிடத்தக்கது. 









ஞாயிறு, ஜனவரி 10, 2016

தமிழில் 'இனிஷியல்' ஆசிரியர்களுக்கு உத்திரவு!.



 

   சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது தமிழக பள்ளி கல்வித் துறை. இதுகாறும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடியிருக்கிறது. தமிழில் நமது பெயரை எழுதும் போது, நமது இனிஷியலை ஆங்கிலத்தில் எழுதுவோம் இத் தவறு பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில் நடந்து வருகிறது. இதை தொடங்கி வைத்தவர்கள் பள்ளிகல்வி தொடக்க  ஆசிரியர்கள்தான். அவர்கள் அன்று செய்த தவறு இன்றும் பல தலைமுறை தாண்டி, தவறு என்று தெரியாமலேயே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழ ஆர்வலர்கள் இது தொடர்பாக பல முறை குரல் கொடுத்தும் தற்போதுதான் தமிழக கல்வி துறை தனது தவறை சரி செய்துள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாணைகள், உத்திரவுகள் அனைத்தும் தமிழிலேயே வெளியிட வேண்டும் என, தமிழக அரசு  உத்திரவிட்டது. அதேபோல், கல்வி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தமிழில் கையெழுத்து போட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்  துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால் தமிழில் பெயரை எழுதும் போது, ஆங்கிலத்தில் தங்களது இன்னிஷியலை எழுதுகின்றனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை  சேர்ந்த குணமால் என்பவர் பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம் அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும் அதையும் தமிழில் எழுதவும் உத்திரவிட்டுள்ளது.  இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். 

இனி இத் தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!. 

இது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை 07/01.2013 ல் தினமணியில் வெளிவந்துள்ளது. 

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...