புதன், டிசம்பர் 02, 2015

சென்னை வரலாற்றில் முதன் முறையாக பத்திரிகைகள் முடக்கம்!.



கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த பெரு மழை சென்னையை வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது. 

துண்டிக்கப்பட்ட சாலைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இதனால் பத்திரிகைகள் வெளி வெருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தி இந்து நாளிதழின் அச்சகம் சென்னை புற நகரான மறைமலை நகரில் இயங்கி வருகிறது. அச்சகத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பத்திரிகைகள் அச்சிடுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதோடு இ இந்து நாளிதழின் அச்சக ஊழியர்கள் அண்ணா சாலை அலுவலகத்திலிருந்து மறைமலை நகருக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். நேற்று நகரமே ஸ்தப்பித்ததால் இந்து நாளிதழின் பேருந்துகள் குறித்த நேரத்தில் மறைமலை நகருக்கு செல்ல முடியவில்லை. அதனால் பத்திரிகையை பிரிண்டு செய்ய முடியாத் இக்கட்டான நிலை ஏற்பட்டது. "நாளை தி இந்து ஆங்கிலம மற்றும் இந்து தமிழ இரண்டும் வெளிவராது" என்று நேற்று இரவே அறிவித்துவிட்டார்கள். தி இந்துவின் வரலாற்றில் இது முக்கியமான செய்தியாகும்!.

சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கள் பகுதியில் இயங்கி வரும் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில பத்திரிகையும் வெளி வரவில்லை. அதன் அச்சுக் கூடத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பத்திரிகை வெளிவரவில்லை.

அதேபோல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழும் இன்று நிறைய இடங்களில் வெளிவரவில்லை. பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் இன் நாளிதழின் அச்சுக் கூடத்திலிருந்து பிரிண்ட் செய்யப்பட்ட நாளிதழ்களை நகரின் பல பகுதிக்கு எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி, தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமலர் நாளிதழ்கள் விநியோகம் சீராக நடைபெற்று இருக்கிறது. அம்பத்தூர் அண்ணா நகர், மத்திய சென்னை, வட சென்னை போன்ற பகுதிகளில் சீரான விநியோம் நடைபெற்றது. அம்பத்தூர் வாசிகள் தினமணி அலுவலகத்திற்கு நேரிடையாக வந்து பத்திரிகைகளை வாங்கி சென்றனர்.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பத்திரிகைகள் வெளிவெருவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினந்தந்தி, தினகரன் நாளிகழ்களில் விநியோகத்திலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எத்தகைய இயற்கை இடற்பாடுகள் ஏற்பட்டாலும் பத்திரிகைள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த பெரு மழை அதை தவிடுபொடியாக்கி வரலாறு படைத்துவிட்டது.

இது 02/12/2015 புதன் கிழமை கள நிலவரம்.

‪#‎chennaiRains‬ ‪#‎Dinamani‬ ‪#‎Thenewindianexpress‬ ‪#‎TOI‬ ‪#‎dailythanthi‬ ‪#‎thehindu‬ ‪#‎dinakaran‬ ‪#‎DC‬ ‪#‎chennaimemories‬
‪#‎சென்னைபெருமழை‬

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...