செவ்வாய், நவம்பர் 22, 2016

எனது முதல் கவிதை தொகுப்பு 'மறுதாம்பு'.




மறுதாம்பு  கவிதை தொகுப்பு    


         டந்த ஞாயிறு  அன்று தினமணியில் (13.11.2016)  'இந்த வாரம்' பகுதில், வெளிவரப் போகும் எனது 'மறுதாம்பு' கவிதை தொகுப்பிலிருந்து 'நந்தி' என்ற கவிதையை வெளியீட்டு எனது கவிதை தொகுப்பை முன் மொழிந்திருக்கின்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

என்றோ தொடங்கப்பட்ட எனது பயணம், இன்றுதான் ஒரு இலக்கை அடைந்திருக்கிறது.
எனது கவிதை தொகுப்பு 'மறுதாம்பு' வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 6 மாதமாகிவிட்டது. இதோ முடிவுற்று புத்தகமாய் வெளிவர இருக்கின்றது. அச்சு வேலை முடிந்தப்பின் கவிதை புத்தகத்தைப் பற்றி முக நூலில் அறிமுகம் செய்யலாம் என்று இருந்தேன், ஆனால் அதற்கு முன்னர் தினமணியே எனது கவிதை தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்திருப்பது, நான் பெற்ற பேறு!.
தினமணியில்  வந்த அறிமுகம் 
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை சொல்லக் கூடிய மிகச் சிறிய, மிக எளிமையான கவிதைதான் 'நந்தி'. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குறையத் தொடங்கினால், அணையிலிருக்கும் நந்திச் சிலை வெளியே தெரிய ஆரம்பிக்கும். நந்தி சிலை வெளிய தெரிய ஆரம்பித்தால், காவிரி ஆற்றை நம்பி வாழும் விவசாயி கவலைக் கொள்ள ஆரம்பித்துவிடுவான். இதை பின்னணியாக வைத்தே இக் கவிதையை எழுதினேன்.


நந்தி


மேட்டூரில்

நந்தி தெரிந்தால்

கீழையூரில் 
எங்கள் 
தொந்தி காயும்.


                                      ()()()
ஜனவரி சென்னை 

புத்தகக் காட்சிக்கு ரிலீஸ்!. 

      

     தில் கீழையூர் என்ற ஊர், காவிரி ஆறு கடல் புகும் பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது. மறுதாம்பு வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வெளிவரயிருக்கிறது. இக்கவிதை தொகுப்பை 'மேய்ச்சல் நிலம்' பதிப்பகம் வெளியீடுகிறது.

அதென்ன 'மறுதாம்பு' என்று நீங்கள் கேட்கலாம்?. அறுவடை முடிந்தப் பின்னரும், மீண்டும் கிளைத்து எழும் நெற்கதிரே மறுதாம்பு. அதையே எனது கவிதைப் புத்தகத்திற்கு பெயராக வைத்துவிட்டேன். அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நமக்கு இதுவே சாஸ்வதம்!.

தினமணி ஆசிரியருக்கு எனது நன்றியும் அன்பும்!.
அன்புடன் 
தோழன் மபா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...