வியாழன், அக்டோபர் 31, 2013

"நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க...?!"




கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தினமணி துணை கட்டுரைப் பகுதியில்  'சமூக வலைத் தளங்ளிலுமா சாதி....?'  என்ற எனது கட்டுரை வெளிவந்தது. இன்று இணைய தேடு பொறியில் ஏதோ ஒன்றை தேடும்போது  அக் கட்டுரைக்கு இணையத்தில் வந்த பின்னோட்டங்களை பார்க்க நேர்ந்தது.

அந்த பின்னோட்டமே உங்கள் பார்வைக்கு....

முந்தைய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(http://www.tamilanveethi.blogspot.in/2013/08/blog-post.html)

கருத்துகள்(4) 

வெங்கடேசன் 

நமது கலை பண்பாடு போன்றே சாதியும் பல நுற்றாண்டு தொன்மையுடையது. குருதியுடன் கலந்துவிட்டது. சாதியை  ஒஷிக்காமல் சாதியின் செல்வாக்கை தடுக்கமுடியாது.
பதிவுசெய்தவர்  08/12/2013 05:00.


பொறுப்புணர்வுடன் ஒரு நல்ல பிரச்சினையை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் கட்டுரை ஆசிரியர் .மிகப்பிரம்மாண்டமான வெளிப்படுத்தலுக்கான வாய்ப்பை திறந்துள்ள முகனூல் அல்லது இணையதளம் மலம் போன்ற கழிவுகளையும் ஆபத்தான வெடிகுண்டுகளையும் போடும் இடமாகவும் கொண்டுள்ளது .இதை கண்காணிக்க வேண்டியுள்ளது அவசியம் .ஒரு காலத்தில் அல்லது இப்போதும் திரைப்படங்களில் வானொலியில் ஊடகங்களில் தணிக்கை இருந்தது.ஒரு முத்தக்காட்சி போன்றவை கூட பெரிய கூக்குரலை எழுப்பும்.ஆனால் இப்போது 24 மணி நேரமும் வக்கிரமான உடலுறவுக்காட்சிகளை எந்த தடையுமின்றி பார்க்கும் வாய்ப்பு உள்ளது.பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் .ஆனால் இது குறித்து கடும் கண்டனம் எழாதது கண்டிக்கத்தக்கது.மேலும் அரசுகள் டாஸ்மாக் போலவே தங்கள் ஆட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விமர்சனகள் வராமல் தடுக்க உதவுகிறதுபோல் தெரிகிறது .எனவே அரசே இவற்றை வெளியிடுகின்றன என்றே கொள்வோம்.
பதிவுசெய்தவர்  08/12/2013 07:20



 


தமிழ் பேசும் ஒரே மொழிப்பிரிவினரிடையே, பல்வேறு சாதிக்குழுக்கள், தத்தம் அளவில் சிறுபான்மைக் குழுக்களாக மாறிப்போனது, உண்மையில் வருந்தத்தக்கது! ஒவ்வொரு முறையும், 'சாதி ஒழிப்பில் தமிழகம் பரவாயில்லை' எனத்தான், நாம் கருதிக்கொள்கிறோம்! ஆனால், உண்மை அதுவன்று என்பது, பிற மாநிலங்கள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது அல்லது பிற மாநிலத்தவர்கள் இங்கு வந்து சொல்லும்போதுதான் புரிகிறது! பிற மாநிலங்களில் வாழும் குடிமக்கள், சாதியைத் தங்கள் பெயரில் மட்டுமே சுமக்கிறார்கள்; இங்குள்ளதுபோல், தங்கள் நெஞ்சில் அன்று! ஒருவரின் சிந்தனையே, முதலில் பேச்சாகி, தொடர்ந்து எழுத்தாகிப் பின் முகநூலில் வெளியானதும் கலவரமாகிறது! இவை போன்ற நிகழ்வுகள், அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் நடக்கின்றன என்பது, உண்மையில் அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியவை!
பதிவுசெய்தவர்  08/12/2013 16:13


 


தமிழகத்தில் யாருக்கு இல்லை சாதி? எதில் இல்லை சாதி?அரசியலில்,இலக்கியத்தில்,சமயத்தில், ஊடகங்களில்,அரசுத்துறைகளில்...ஜனநாயகத்தின் அனைத்துத் தளங்களிலும் சாதி இருக்கும் போது,முகநூலில் மட்டும் சாதி இருப்பதை குறைகுறுவது நியாயம்தானா?
பதிவுசெய்தவர்  08/12/2013 18:14


 


செவ்வாய், அக்டோபர் 29, 2013

அப்பாடா ... ஒரு வழியா என் தளத்தில் இணையலாம்.




                தமிழன் வீதி  வலைத்தளம் தொடங்கி 5 வருடம் ஆகிறது. 'Join this site' என்ற 'சிறு பொறியமைப்பு' (Gadgetக்கு அதுதான் தமிழ் மொழிபெயர்ப்பு என்கிறது  அகரமுதலி) என்ற உபகரணத்தை தொலைத்து விட்டேன். எங்கே எந்த அசம்பாவித நேரத்தில் அந்த கேட்ஜட்டை தொலைத்தேன் என்று தெரியவில்லை.  நானும் தேடாத தளமில்லை, போகாத கூகுள் இல்லை. தேடிய இடமெல்லாம் 'ஆஆவ்வ்வ்தான். டாஷ்போர்ட், லேஅவுட்,ADD Gadget என்று என்னன்னவோ செய்து பார்த்தும், ஒரு பயனுமில்லை.

பார்க்கும் எல்லா வலைத்தளத்தில் 'Join this site' சிறு பொறியமைப்பு இருக்க எனது வலைத்தளம் மட்டும் அந்த Gadget இன்றி இருந்தது.  சிலர் கேட்கவும் செய்தனர். ஆனால் அதன் கேட்ஜட்டை சேர்ப்பதில் மட்டும் இழுபரி நிலை இருந்தது. அந்த பொறியமைப்பை எப்படி சேர்ப்பது என்ற தொழிற் நுட்பம் எனக்குத் தெரியவில்லை. அதை முழுமையாக சேர்ப்பதிலும் எனக்கு ஒரு சுனக்கம் இருந்தது.


இன்றைக்கு  எதேச்சையாக 'how to add join this site on blogger' என்று கூகுளில் கிளிக்கினேன். உடனடி பலன் கிடைத்தது. யானி ஃபிரேம் http://yaniframe.blogspot.in என்பவர் கேட்ஜட்டை இணைப்பது எப்படி என்று அழகாக  பதிவுவிட்டிருந்தார். புரியும்படி பதிவிட்டு இருப்பதுதான் இப் பதிவின் சிறப்பு.

நன்றி யானி பிரேம் .

இனி வழி முறைகள்:

1 Go to your Dash Board of your Blog. 

2  Click on Layout tab


3  Click on Add Gadget Button 


  
4 Now go to 2nd Option ie More Gadgets at left side you can see as blow 





 5 Now in search box type 'Join this site widget by google' and give enter. 




6 Select the Option




இப்படி செய்ததில் எனக்கு கேட்ஜட் வரவில்லை. அதனால் அந்த (5 வது பாயிண்டில் உள்ளது)  Search Boxல்  'Member' என்று டைப் செய்ய, இம் முறை 'Join this site' என்ற 'கேட்ஜெட்' வந்தது. 


 கிட்டத்தட்ட பிளாக் தொடங்கிய போது இருந்த கேட்ஜட் தற்போது மீண்டு(ம்)  வந்துவிட்டது.

இனி யாவரும் என் வலைத்தளத்தில் இணையலாம்.



திங்கள், அக்டோபர் 28, 2013

கோமல் சுவாமிநாதன் என்றோரு நீர்கோடு!



மாயவரம் பஸ்ஸாண்டில் உள்ள புத்தகக் கடையில், சொல்லி வைத்தால்தான் 'சுபமங்களா' கிடைக்கும். கல்லூரி காலங்களில் ஏதோ ஒன்றை தேடியலைந்த போது, நவீன இலக்கியங்களை எனக்குள் அறிமுகம் செய்துவைத்தது சுபமங்களாதான்.

எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது அச் சிற்றிதழ்.  அதன் இலக்கிய ரசனைக்காக சிற்றிதழ்  என்கிறேனே தவிர அது சிற்றிதழ் கிடையாது. மிகப் பெரிய சைஸில் வரக் கூடிய இதழ். ஸ்ரீராம் சிட்ஸ் நிதி பங்களிப்பில் வெளிவந்தது. அது வெகு ஜன பத்திரிகை இல்லையென்றாலும் 90களில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சொன்ற பெருமை சுபமங்களாவையே சேரும்.

எஸ் வைதீஸ்வரன், அசோகமித்திரன்,அம்பை,ந.பி., க.நா.சு., ப.முருகன் என்று பெரும் இலக்கிய கர்த்தாக்கள், மொழிபெயர்ப்பு இலக்கியம், 'நேர்காணல்' என்ற சொல்லாடல், கோவி.ஆனந்தின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என்று இந்த கழுதைக்கு கற்பூர வாசத்தை காட்டியது சுபமங்களாதான். 
 
 
இத்தகைய அரும் பணிக்கு பின்னால் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். அவர் கோமல் சுவாமிநாதன்.  சுபமங்களா என்றால் கோமல்தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு ஒரு 'நீர்கோடாய்' சுபமங்களாவில் விரவியிருந்தவர். எழுத்து, நாடகம், சினிமா என்று எங்கும் எப்போதும் பேசப்பட்ட ஒரு மனிதர் கோமல் சுவாமிநாதன். எங்கலூர் திருவாலங்காட்டிலிருந்து அப்படியே திருவாவடுதுறை, மேக்கிரிமங்களம், ஆனாங்கூர், தேரழந்தூர என்று பின்பக்கமாய் சென்றால் கோமல் என்ற ஊர்  வந்துவிடும். தனது சொந்த ஊரின் பெயரையே  தனது பெயருக்கு முன்னால் வைத்து ஊருக்கு பெருமைச் சேர்த்தவர் கோமல் சுவாமிநாதன்.

இவரது 'தண்ணீர் தண்ணீர்' நாடகம் கம் சினிமா, இன்றும் நமக்குள் கண்ணீரை வரவழைத்துவிடும்.  இன்றளவுக்கும் அது பேசப்படக் கூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது.  ஒரு படைப்பாளியின் வெற்றியே அதுதான். நாடகம், சினிமா, கதைகள் என்று தனது இலக்கிய ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய மனிதர் அவர்.  நாடக உலகில் அவர் விட்டுச் சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது. நாடக உலகில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் அவரது இடம் அப்படியேதான் இருக்கிறது எனலாம்.

 கோமலின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றும் நல்லதொரு பணியை,  அவரது மகள் லலிதா தாரணி செய்துக்கொண்டு இருக்கிறார்.

வாழ்ந்து  மறைந்தாலும் பலர் மனதில், இன்றும் நிறைந்து வாழ்கிறார் கோமல் சுவாமிநாதன்.

இன்று அவரது 18 வது நினைவு நாள்.

-தோழன் மபா.

வியாழன், அக்டோபர் 24, 2013

"தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா?" பாலியல் கட்டுரை.



                சன் நியூஸில் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு நேயரின் கேள்வி பின்வருமாறு இருந்தது.

"சார், உடலுறவின் போது 20 செகண்டிலேயே எனக்கு விந்து வெளியாகி விடுகிறது. இது எனக்கு மிகுந்த மனக் குழப்பத்தைத் தருகிறது. கல்யாணத்திற்கு முன்பு சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் இருந்தது அதனால்தான் என்று நினைக்கிறேன். இதற்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்க சார்" என்று அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம், நேயர் போனில் கேட்கிறார்.

அதற்கு அந்த நிகழ்ச்சி நடத்துபவர் "சுய இன்பம் பழக்கம் இருக்குன்னு சொல்லிறீங்க, அப்புறம் ஏன் கல்யாணம் பன்னிகிட்டிங்க?. தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா?" என்றார்.

இதைக் கேட்டதும் எத்தகையை  ஒரு முட்டாள்தனமான நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது.


 சுய இன்பம் செய்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்றால் உலகில் 99 சதவீத ஆண்களுக்கு திருமணமே நடைபெறாது. (மீதி 1 சதவீதம் என்னவென்று கடைசியில் சொல்கிறேன்.) சுய இன்பம் என்பது இயற்கையானது என்பது நவீன உலகில் நிறுபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதை வைத்து பிழைப்பு நடத்தும் உட்டாலக்கடி மருத்துவர்களுக்குதான் அது கொடிய பழக்கம். அந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் அவர்களை சந்தித்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று டீவிக்களிலும் பத்திரிகைகளிலும் பகிரங்கமாக விளம்பரம் தரக் கூடியவர்கள். 

இந்தியாவை பொறுத்தவரை பாலியல் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் சராசரி குடிமகனுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தவறான ஆலோசனைத் தரும் போலி மருத்துவர்கள்தான், செக்ஸ் தொடர்பான பிரச்சனைக்களுக்கு தீர்வு தருகிறார்கள். எனக்கு தெரிந்த மருத்துவரின் நண்பர் ஒருவர் தில்லி மும்பை என்று   பறந்து செக்ஸ் ஆலோசனை சொல்லி பெட்டி பெட்டியாய் பணம் அள்ளிக் கொண்டு வருவார்.

மருத்துவரோடு உதவிக்கு கூட சென்ற நண்பர், பிற்பாடு அவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக தொழில் (?) செய்ய தொடங்கினார். பல போலி செக்ஸ் மருத்துவர்கள் இப்படிதான் அனுபவத்தின் அடிப்படையில் தோன்றுகிறார்கள்.
()()()

                                                                                                                                                     போகட்டும்...
நாம் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு வருவோம்.

'கைமைதுனம்' தொடர்பான கேள்வியை கேட்ட, அதே நேயரிடம் டாக்டர் அடுத்த கேள்வியை கேட்கிறார்.

"உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடமாகிறது...?"

"நான்கு வருஷமாச்சி  டாக்டர்"

"செக்ஸ் எப்போல்லாம் வைத்துக் கொள்வீர்கள்?"

"15 நாளுக்கு ஒரு வாட்டி இல்லன்னா, மாசத்திற்கு ஒரு வாட்டி,  அதே நேரத்தில் கட்டிங் போட்டுட்டு செக்ஸ்ல ஈடுபட்டா கொஞ்சம் அதிகம் நேரம் செய்ய முடியுது டாக்டர் " என்றார்.

டாக்டருக்கு தலையே சுற்றிவிட்டது. எனக்கும் அப்படிதான் இருந்தது.

 மோட்டார் வண்டிகளுக்கு சர்வோ ஆயில் போட்டால் எக்ஸ்ட்ரா  மைலேஜ் உண்டு என்று  விளம்பரம் செய்வார்கள்.  அப்படி இருந்தது அவர் சொன்னது.


கட்டிங் போட்டால் செக்ஸில் எக்ஸாட்ரா மைலேஜ் உண்டா...?! என்ன....?

இதெல்லாம் ஒரு வகையான 'மனப்பிராந்தி' என்றுதான் சொல்லவேண்டும்.   வக்கிர செக்ஸ் உணர்வுகள் உச்சம் பெறவும் குடிபோதை ஒரு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் வந்தப் பிறகு இந்தமாதிரி அபத்தங்கள் அதிகமாகத்தான் ஆகிவிட்டது.
()()()

முருங்கை கீரை,காய்

செக்ஸில் அதிக நேரம் ஈடு பட மிக எளிதான இயற்கை மருந்துகள் இருக்கின்றன. கைக்கு கிடைக்கும் அதை படுக்கைக்கு பயன்படுத்த நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. அதில் ஒன்று முருங்கை மரம். முருங்கை கீரை, முருங்கைக்காய், முருங்கை விதை என்று எல்லமே செக்ஸின் வீரியத் தன்மைக்கு உதவி புரிபவை. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. பேரிச்சை, வெங்காயம் (ரொம்ப காஸ்ட்லி),லவங்கம், பெருங்காயம், பூண்டு,இஞ்சி, சாதிக்காய்,ஓமம்,பாதாம்  இதையெல்லாம் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் என்கிறது இயற்கை மருத்துவம்.

அதே போல் அமுக்கரான் கிழங்கு.  இதுவும் ஒரு சிறந்த செக்ஸ் ஊக்கி என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் நாம் இதை பயன்படுத்த வேண்டும்.

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்கிறார் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி. சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். 'இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்'. ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.  ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்தே செக்ஸ் உணர்வு மிகைப்படவோ, குறையவோ வாய்ப்பு உண்டு. நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபட்டால்தான் முழு வெற்றி என்பது நமது கற்பனையே என்கிறார் எரிக் கார்ட்டி. இத்தகைய புரிதல் இல்லாமல்தான் கட்டிங் போட்டு  எக்ஸ்ட்ரா மைலேஜ்ஜுக்கு ஆசைப்படுகிறார்கள்.


இங்கிலாந்து சுகாதாரத்துறையோ டீன் ஏஜ் யுவன் யுவதிகளை கைமைதுனத்தில் ஈடுபடச் சொல்லி அறிவுறை வழங்குகிறது . பிரிட்டிஷ் போன்ற மேலை நாடுகளில் டேட்டிங் கலாச்சாரம் என்பது சர்வசாதாரனம். மாணவப் பருத்திவத்தில் செக்ஸில் ஈடுபடும் மாணவர்கள் அதிகம். தேவையில்லா கர்பத்திற்கும், எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களை தடுப்பதற்கும் சுய இன்பம் பயன்படும் என்கிறார்கள்.   சிறுவயது கர்ப்பம், பால்வினை நோய் போன்றவைகள் ஏற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு நல்லதொரு வடிகாலாகவே கைமைதுனம்  பார்க்கப்படுகிறது.


 அதே நேரத்தில் இந்தியாவில் செக்ஸ் இன்னும் 'சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்ற நிலையில்தான் இருக்கிறது!. 
 ()()()
 கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு வருவோம்.

சுய இன்பம் செய்யும் நீங்கள் எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டீர்கள்?. ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி பாழடிக்கலாமா? என்ற ரீதியில் கேட்டுக் கொண்டு இருந்தார். அதற்கு அந்த மருத்துவரும் ஒன்றும் சொல்லவில்லை என்பதுதான் வேதனை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பல இள வட்டங்கள் தவறான புரிதலுக்கே ஆட்படுவார்கள். சுய இன்பத்தில் ஈடுபட்டால் நாம் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது போன்ற தவறான தகவல்களைதான் இந்த அரைவேக்காட்டு நிகழ்ச்சிகள் தருகின்றன. மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியம் என்பதை இவர்கள் உணரவேண்டும். .

"சரி, அந்த 1 சதவீதம் என்னாச்சி...?" என்ற கேள்விக்கு பதில் ....

"உலகில் 99 சதவீத ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். மீதி 1 சதவீத ஆண்கள் அப்படி இல்லை என்று பொய் சொல்கிறார்கள்!"
என்பது   உலகளாவிய கருத்து!.
()()()

.

சனி, அக்டோபர் 19, 2013

மூன்று ஆங்கில பத்திரிகைகள் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துகின்றன!.




                       சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் தி நியூவ்  இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற மூன்று ஆங்கில பத்திரிகைகளும்,  தனித்தனியே விதவிதமான கண்காட்சிகளை நடத்துகின்றன.

இது ஒரு அதிசயமான நிகழ்வு என்றே சொல்லாம்!.

பத்திரிகை விற்பனை மற்றும் விளம்பரங்களில் போட்டிக் போட்டுக் கொண்டு இயங்கி வரும் இந்த மூன்று நாளிதழ்களும் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துவது வித்தியாசமானதுதானே.....?!

தி நியூவ்  இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் 'எக்ஸ்பாண்டிங் மெட்ரோபாலிஸ்' என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்துகிறது.  இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி பிளாட் புரோமோட்டர்ஸ் கலந்துக் கொண்டு தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். அதோடு பெரிய மற்றும் நடுத்தர  பட்ஜெட் அடுக்குமாடி விற்பனையாளர்களும் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.

நிலத்தில் முதலீடு செய்யக்கூடிய வகையில், நமது பட்ஜெட்டில் வாங்கக்கூடிய மனை விற்பனையாளர்களும் தங்களது அரங்குகளை இக் கண்காட்சியில் அமைத்துள்ளனர். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உபயோகமான கண்காட்சி இது!.

தி ஹிண்டு நாளிதழ் தனது 'ஹோம் டெக்கார்' என்ற கண்காட்சியை இங்கு நடத்துகிறது. இதில் வீடு உள் அலங்காரம் மற்றும் ஃபர்னிச்சர் ஸ்டால்கள் இக் கண்காட்சியில் இடம் பெருகின்றன.

தி டைம்ஸ் ஆஃப் இண்டியா   ஹோம் அப்ளையன்ஸஸ்  மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ற ''கண்சுயூமர் குட்ஸ்'  கண்காட்சியை நடத்துகிறது.

இந்த மூன்று கண்காட்சிகளும் இன்றும் நாளையும் மட்டுமே நடைபெறுகிறது.

வாங்க.....போங்க....!

-தோழன் மபா.

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன்!.



இன்று (13/10/2013)  தி இந்து (தமிழ்) நாளிதழில் சென்னை பதிப்பில் 'கருத்துச் சித்திரம்' பகுதியில் வெளிவந்த எனது கார்டூன்.

புதன், அக்டோபர் 09, 2013

பொது இடத்தில் மூக்கு குடைய தடை?





           சீ
னாவிலிருந்து உலக சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்கள் உலக நாடுகளில் நடந்துக் கொள்ளும் முறை பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்துவிடுகிறதாம். இதனால் சீன அரசாங்கம் 64 பக்க கையேட்டை  தயாரித்து வழங்கியுள்ளது. இதில் வெளி நாடுகளுக்கு சீனர்கள் சென்றால் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்ற ஒழுக்க விதிகள் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.


பொது இடத்தில் மூக்கு குடைய தடை, மூக்கில் உள்ள முடியை ஒழுங்காக வெட்டி இருக்க வேண்டும், பொது கழிவரைகளில் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது, சூப் மற்றும் நூடுல்ஸ் சாப்பிடும்போது உறிஞ்சி குடித்து சத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்று பட்டியல் நீள்கிறது.

சரி, இந்த விஷயத்தில் இந்தியர்கள் எப்படி...?


 ஒருமுறை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார் இங்கிலாந்து பிரதமர்.  பிரதமர் நேரு அவருக்கு டெல்லியை சுற்றி காட்டினார். அப்படி காட்டும் போது, மக்கள் சாலை   ஓரங்களில் அமர்ந்து 'டூ டாய்லட்' போய்கொண்டு இருந்தனர். இதைக் கண்டு முகம் சுளித்தார் இங்கிலாந்து பிரதமர்.  நேருவுக்கோ முகம் அவமானத்தால் வாடிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்துக்கு செல்லக் கூடிய வாய்ப்பு பிரதமர் நேருவுக்கு கிடைத்தது. வழக்கம்போல் இங்கிலாந்து பிரதமர் நமது பிரதமரான நேருவை அழைத்துக் கொண்டு லண்டனை சுற்றிக் காட்டினார்.  அப்போது,  தேம்ஸ் நதிக்கரையோரம் ஒருவன் அமர்ந்து 'டூ டாய்லட்' போய்கொண்டு இருந்தான். பிரிட்டீஷ் பிரதமரை அவமானப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தே என்று நேருவுக்கு சந்தோஷமாகிவிட்டது.  "பாருங்க உங்க நாட்டிலும் இப்படிதான் இருக்காங்க" என்றார் நேரு . இங்கிலாந்து பிரதமருக்கோ தலை சுற்றிவிட்டது. கோபத்தில் முகம் சுளித்த அவர்,  டூ டாய்லட் போனவனை அழைத்துவரச் சொன்னார் "நீ யாரு எங்கேயிருந்து வர்ற, பொது இடத்தில் இப்படி செய்வது அசிங்கமில்லையா?"  என்றார்.

"சாரி...துரை,  நான் இந்தியாலேருந்து வர்றேன். இங்க இப்படி போகக்கூடதுன்னு எனக்குத் தெரியாது!" என்றான் அவன்.  மீண்டும் பல்பு வாங்கினார் நமது பிரதமர்.

இந்தியர்கள் பற்றி இப்படி நகைச்சுவையாக கதை சொன்னாலும், பெருவாரியான இந்தியர்கள் இன்றும் பொது வெளிகளில்தான் மலம் கழித்துக் கொண்டு இருக்கின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட இன் நிலை இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.   கிராமம் என்றால் ஆற்றாங்கரை, தோப்பு, வயல்வெளிகள்,திடல்கள் என்று இருக்கும். ஆனால் சென்னை பொன்ற நகரங்களில் பிரதான கழிப்பிடமே ரயில் பாதை ஓரங்களில்தான் நடக்கிறது.

பொது இடங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க விதிகளை இந்திய அரசாங்கமும் ஏற்படுத்த வேண்டும். வெளி நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு எந்தவித விதிகள் இல்லையென்றாலும் கூட, அட்லீஸ்ட் உள் நாட்டிலாவது சில பொது விதிகளை ஏற்படுத்த வேண்டும்.   'இந்தியர்களுக்கு பொது இடமும், அவர்களது வீட்டு கக்கூஸும் ஒன்றுதான்' என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.







                                     பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி.....?                                


  • பஸ்டாண்டு மூலை, குப்பை தொட்டி ஓரம், சுவர் ஓரம், ஓரமாய் இருக்கும் மரம் இதையெல்லாம் பார்த்தா சட்டுன்னு பேண்டு ஜிப்பை கழட்டிடுவான்.
  •  நடக்கிற வழியில எச்சில் துப்ப இவன விட்டா ஆள் இல்லை. 
  •  வெற்றிலை, பான்பராக் போடுறதே சுவர் மூலையிலும், மாடிப்படி ஓரத்திலும் துப்புவதற்காகத்தான்.
  • எதிரில் ஆள் இருப்பதையே மறந்து 'மூக்கை தூர்' வாருவதில் இவன் கில்லாடி.
  •  தனது 'வாய் துர் நாற்றம்' அடிப்பதைக் கண்டு பிறர் முகம் சுளிக்கிறார்கள், என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாது அறிவாளிகள்(?) இந்தியாவில் அதிகம்.
  •  ஒரு மனிதனுக்கும் இன்னோரு மனிதனுக்கும் உள்ள சராசரி இடைவெளி எது என்பது கூட சராசரி இந்தியனுக்கு தெரியாது.  எங்கு  நின்றாலும் சக மனிதனோடு ஒட்டிக் கொண்டுதான் நிற்பான். 
  •  பொது இடத்தில் மெதுவாய் பேச தெரியாத, வேகத்தில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவன். 
  •  ஹோட்டல்களில் தயிர் சாதத்தை முழங்கை வரையில் ஓழுக விட்டு, முழங்கையிலிருந்தே நாக்கால்சர்ரென்று பெரும் சத்தத்துடன் நக்கக் கூடிய சக்தி படைத்தவன்.
  •  சட்டை அது எதற்கு?  என்று கேட்கக் கூடியவர்கள் இருண்டு பேர் .ஒருவர் வயலில் வேலை செய்யும் விவசாயி.  மற்றொருவர் கோயிலில் வேலை செய்யும் குருக்கள். ரெண்டு பேருமே சட்டை போடாமதான் திரிவாய்ங்க. 
  •  தனது காதை குடைந்து, முகத்தை அஷ்டகோணத்தில் காட்டி மற்றவரை பயமுறுத்துவதில் இவன் எக்ஸ்பட். 
  •  கொஞ்சமும் யோசிக்காமல் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு இவன் சொறிய,  பார்ப்பவர்கள்தான் முகத்தை திருப்பிக்கொள்ளவேண்டும். 
  •  எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும், அருகில் சாப்பிடுபவர்களைப் பற்றி கவலைப்படாமல் 'சவக் சவக்'  என்று சத்தம்போட்டு சாப்பிடுவர்கள் பல பேர்.  சாப்பிடும் போது சத்தம் வராமல் சாப்பிடக் கூடிய குறைந்தப் பட்ச அறிவுக்கூட இவர்களிடம் இருக்காது. 
  •  ஹோட்டலில் கை கழுவும் இடத்தில் நின்றுக் கொண்டு 'புர்'ரெண்டு கொஞ்சம், சங்கோஜப்படாமல் மூக்கை சிந்துவதில் இந்தியவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்வார்கள். 
  • நைட்டு நைட்டியை பகலிலும் போட்டு, கடைக்கார அண்ணாச்சியை அலற விடுவதில்  வீட்டு அம்மணிகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்?. 
  •  காது குடைய பஞ்சு வைத்த பட்ஸைவிட, பைக் கீ, ஊக்கு, ஹேர் பின், தீக்குச்சி என்று கைக்கு கிடைத்தெல்லாம் பயன்படுத்தும் அதி புத்திசாலிகள் நாம்தான்.   
  •  20 லட்சம் பொறுமான காரில் சென்றாலும், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு,  காலி வாட்டர் பாட்டிலை ரோட்டில் வீசிச் செல்வதில், நமக்கு நிகர் நாமே?!
  •  என்னதான்  குப்பை தொட்டி பெரிய சைசில் இருந்தாலும், குப்பையை தொட்டிக்கு வெளியே விசிறிவிட்டு செல்வதில் உலகிற்கு நாம்தான் முன்னோடி.
(இன்னும் வேறு ஏதாவது மிச்சம் மீதி இருந்தா சொல்லுங்க நண்பர்களே....?!)

இப்படி பொது இடத்தில் கொஞ்சமும் சங்கோஜமின்றி  பொத்தாம் பொதுவாய் போட்டுத் தாக்குவதில் இந்தியர்கள் உலக பிரசித்தம். பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சீனாவைப் போன்றே நாமும் ஒழுக்க விதிகளை அமுல் படுத்தலாமே....?
செய்வார்களா......?!.

புதன், அக்டோபர் 02, 2013

" அசையாத தசையையும் அசையவைத்த 'சிவாஜி'! -டாக்டர் கூப்பர்.



                          டிகர் திலகம் சிவாஜி இறந்த அன்று, எனது தந்தையார் எனக்கு போன் செய்து "டேய், சிவாஜி வீட்டுக்கு போயிட்டு வந்துடு." என்றார்.  ஒரு நடிகரின் இறப்புக்கு ஒரு சராசரி மனிதன் தான் செல்ல முடியாததால் தனது மகனை அந்த இறுதி ஊர்வலத்திற்கு அனுப்புகிறார் என்றால் அந்த நடிகர் எத்தகைய ஆற்றல்மிக்க நடிகராக இருந்திருப்பார்.  அப்படி மக்கள் கொண்டாடிய மகத்தான கலைஞன் அவன்.

ஒரு சிற்றிதழில் மலையாள இயக்குனர்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  அப்பப்பா....!, மனிதர் சிலேகித்து எழுதியிருப்பார்.  சிவாஜி யார், அவன் எத்தகைய மாகத்மியம் படைத்தவன் என்பதை மிக பிரமிப்போடு வர்ணித்திருப்பார்.  சிவாஜியை அவரது வீட்டு மாடியில் சந்தித்தையும், அந்த சந்திப்பின் இரவொன்றில் கிளாசில் அளவோடு 'ஸ்காட்ச்'  ஊற்றியதையும், கம்பீரமாய் நடந்து... அந்த தனித்துவமிக்க நாற்காலியில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அமர்ந்ததையும், தனது கணீர் குரலில் தன்னை நலம் விசாரித்ததையும்  என்று,  சிவாஜியை அனுஅனுவாக ரசித்து எழுதியிருப்பார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.  "கேரளாவில்   நடிகர் திலகத்தின் திரைப்படம்  வெளியாகும்போது  அறிவிப்பு  வண்டியில்அமர்ந்து சிவாஜின் பிரஸ்தாபங்களை மைக்கில் அளந்த குஞ்சன் நான். நான் அந்த மகா நடிகன் பக்கத்திலா....?" எனறு ஆச்சரியமும் பிரமிப்பும் கலந்து எழுதியிருப்பார்.

சிவாஜியைப் பற்றிய இப் பதிவு என்னை  பெரிதும் கவர்ந்தது. அந்த எழுத்து  பசுமரத்து ஆணி போன்று இன்றும் இன் நினைவில் இருக்கிறது.

பிற்பாடு இப் பதிவுப் பற்றி சாந்தி திரையரங்கின் வேணுகோபால் (சிவாஜியின் மைத்துனர்) அவர்களிடமும் கூறினேன். அவர் உடனடியாக கேரளாவில் தொடர்புகொண்டு அச் செய்தியை பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

இப் பதிவுப் பற்றி நண்பர் ஜே.ரங்கராஜனிடம் (தினமணி சிறப்பு நிருபர்) பேசிக்கொண்டு இருந்த போது, மருத்துவர் கூப்பர் என்ற உடலியக்கத் துறை பேராசியரர் (Professor of Anatomy)  சிவாஜியின் முகத்தில் சதையும் நடிப்பதைப் பற்றி கூறியிருந்ததை நினைவுக் கூர்ந்தார்.  உடலில் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத தசையையும் தனது நடிப்பாற்றலால் அசைய வைக்கும் ஆற்றல் பெற்றவர் நடிகர் சிவாஜி. இதை கூப்பர் 30ம் ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களிடம்  பகிர்ந்துக் கொண்டார். பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தினமணி சிறப்பு நிருபர் ரங்கராஜனிடம்,  மருத்துவர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் இச் செய்தியை பகிர்ந்து கொண்டார். இது நடந்தது சிவாஜி இறப்பதற்கு முன்பு.   
    
தினமணியில் வந்த 'இமையம் பதித்த சுவடுகள்'

நான்கு ஆண்டுகள் கழித்து, சிவாஜி இறந்த அன்று, 'இமையம் பதித்த சுவடுகள்' என்ற நினைவு கட்டுரை தயாரிக்கும்போது, சிவாஜி பற்றி மருத்துவர் கூப்பர் சொன்னதை செய்தியாக்க,   என்றோ தன்னிடம் இச் செய்தியை பகிர்ந்துக் கொண்ட  மருத்துவர்  ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் பிடித்து 'அசையாத தசையையும் அசையவைத்த 'சிவாஜி!' என்று அதை  தினமணியில் பாக்ஸ் செய்தியாக்கினார் ரங்கராஜன்.  அச்செய்தி பரவலாக பேசப்பட்டது.

நிருபர்கள் எப்போதுமே அலார்ட் ஆறுமுகமாகத்தான் இருக்கவேண்டுபோல....?!

இச் செய்தியை என்னிடம் பகிர்ந்துக் கொண்ட ரங்கராஜன். தினமணியில் வந்த அந்த பக்கத்தை  எனக்கு (PDF) பார்மெட்டில் அனுப்பினார்.
நான் அதை உங்களிடம் நான் பகிர்ந்துக் கொள்கிறேன். 
பார்க்க படம்!.
------------BOX NEWS!----------------
 இன்றைய தேதியில் தமிழகத்தில் மருத்துவம் தொடர்பான செய்திகளை தருவதில்  ரங்கராஜன் சூப்பர் என்றே சொல்லலாம்!  தினமணியில் கடந்த 16 ஆண்டுகளாக  வெளிவரும் 'மருத்துவ மலர்' இவரது கை வண்ணத்தில்தான் வெளிவருகிறது.  மருத்துவம் தொடர்பான செய்திகளை தருவதில் அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு.
------------BOX NEWS!----------------


-தொடர்ந்து பேசுவோம்.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...