சனி, அக்டோபர் 31, 2009

இந்த முறை முன்கூட்டியே வருகிறது சென்னை புத்தகக் காட்சி

வருடம் தோறும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி பொங்கல் விடுமுறை வரை நடைபெறும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சியாக விளங்கும் 'சென்னை புத்தகக் காட்சி' இந்த முறை டிசம்பர் இறுதி வாரத்தில் தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைப் பெற்றது. சங்கத்தின் தலைவராக கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், செயலாளராக லெட்சுமணன் (உமா பதிப்பகம்), பொருளாளராக யுனிவர்சல் பதிப்பகத்தின் ஷாஜகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை தலைவர்களாக சண்முகம் (செண்பகா பதிப்பகம்) , சுப்பிரமணியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.


கடந்த இரண்டு வருடமாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி, இந்த முறை பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் டிசம்பர் முப்பதில் தொடங்கி ஜனவரி பத்தாம் தேதி வரை இப் பள்ளி வளாகத்தில் நடை பெறுகிறது. இதனால் பொங்கல் விடுமுறைக்கு முன்பே புத்தகக் காட்சி முடிந்து விடும், என்பது சற்று வருத்தமான செய்தி

பெருவாரியான புத்தகப் பிரியர்களும், பொது மக்களும் புத்தகக் காட்சியை பார்ப்பதற்கும், புத்தகம் வாங்குவதற்கும் இந்த பொங்கல் விடுமுறையைதான் பயன்படுத்திக் கொள்வர். அப்படி இருக்க அந்த விடுமுறை தினத்திற்கு முன்பே சென்னை புத்தக் காட்சியை முடிப்பதேன்பது பொது மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வத்திருக்கு தடையாக இருக்கும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், சென்னை புத்தக காட்சியை பொங்கல் விடுமுறை வரை நீட்டிக்க வேண்டும் என்பது பெருவாரியான புத்தகப் பிரியர்களின் கருத்து.

செய்வார்களா....?

சனி, அக்டோபர் 24, 2009

திருமா செய்த தவறு...


'பாதகனை கண்டால் பழி வந்து சேரும்' இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ.... கண்டிப்பாக திருமாவளவனுக்கு பொருந்தும்.


இலங்கை சென்ற தமிழக எம்.பிகள் குழுவில் திருமா செல்லாமல் தவிர்த்து இருக்கவேண்டும். லட்சக் கணக்கான தமிழர்களை கொன்ற, அவர்களின் உறவுகளை பிரித்து அவர்களின் வாழ்வை சிதைத்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை தமிழக எம்பிகள் சந்தித்ததே தவறு.


அவனை பார்த்தால் கை குலுக்க வேண்டும், சால்வை போர்த்த வேண்டும், சிரித்து பேசவேண்டும் என்பன போன்ற பல இடர் பாடுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிந்தே இந்த குழுவினர் எப்படி அங்கு சென்றனர்?


டி.ஆர்பாலு, அழகிரி,விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், ஆருன், ஹெலன் டேவிட்சன் போன்றோரை விட கனிமொழியும், திருமாவளவனும் தீவிர தமிழ் பற்றாளார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று. அங்கே சென்றால் அந்த நாயிடம் கை குலுக்க வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியாதா?


கனிமொழி, கலைஞர் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டு. அனால், திருமாவுக்கு எங்கே போனது புத்தி. மிகப் பெரிய சமுக மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் போராளியான திருமாவளவன், எது நல்லது எது கேட்டது என்பதை சீர் துக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.


காங்கிரஸ் நடத்திய இந்த நாடகத்திற்கு திருமாவும், தெரிந்தோ தெரியாமலயோ அரிதாரம் பூசிவிட்டார். அங்கு உள்ள தமிழர் முகாம்கள் , 'உலக துயரத்தின் வெளிப்பாடாக' இருக்கிறது என்று திருமா சொல்லப் போக... அது காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்து உள்ளது என்கின்றனர். விஷயம் தெரிந்தவர்கள்.


இதனால்தான் தி.மு.க. மத்திய அமைச்சர் ராஜாவின் துறையில் மத்திய புலனாய்வு துறை 'செப்க்ட்றோம் ஒதுக்கீடு' தொடர்பாக விசாரணை மேர்க்கொண்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.


தி.மு.க.கூட்டணியில் உள்ள திருமாவளவன், இலங்கயில் உள்ள அகதிகள் முகாமின் அவல நிலையை கூட்டம் போட்டு எடுத்து சொல்லியதும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியதையும் தி.மு.கவும், காங்கிரசும் விரும்பவில்லை.


இதற்கிடையே இலங்கை சென்றது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க, பிரதமரைப் சந்திக்கச் சென்ற எம்.பிகள் குழுவில் திருமா இடம்பெயரவில்லை. தி.மு.க. தலைமை, தற்போது திருமாவளவனை தவிர்த்து வருகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.


இது கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றத்தான் இந்த நடவடிக்கை என்கின்றனர் வி.சிகள்.


இதற்கிடையே, "நீங்களும் பிரபாகரனோடு இருந்திருந்தால் உங்களையும் கொன்று இருப்பேன்' என்று திருமாவளவனைப் பார்த்து ராஜபக்ஷே சொன்னதாக ஊடகங்களில் செய்திவந்துள்ளது. இதை மறுத்துள்ள திருமா, ' ராசபக்ஷி நகைசசுவை' யாகத்தான் சொன்னார் என்று எரியும் தீயில் நெய்யை ஊற்றிவுள்ளார். இது தற்போது வலை தளங்களில் பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. பலரும் திருமாவை 'குருமா' வைத்து வருகின்றனர்.


எது எப்படியோ....'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' யாகிவிட்டார் திருமாவளவன்.

புதன், அக்டோபர் 21, 2009

23 செர்மனியில் தமிழ் இணைய மாநாடு

தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி செர்மனியில் நடை பெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள் . வல்லுனர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.

செர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடக்கும் இந்த மாநாடு, முதன் முறையாக ஐரோப்பா கண்டத்தில் நடைபுருவது குறிப்பிடத்தக்கது

'கணி வழி காண்போம் தமிழ் என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும். அதாவது அனைவரும் தமிழில் கணியியை பயன்படுத்தவும் இணைய வழி கல்வி கற்க வகை செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்' என்று சுவிசர் லாண்டில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழா அரசு சார்பில் அண்ணா பலகலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்த கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். மேலும் கணித் தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், தமிழ் இணையம் பல்கலைக் கழக இயக்குனர் நக்கீரன் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து கலந்து கொள்கின்றனர்.

செவ்வாய், அக்டோபர் 06, 2009

'விடுங்க பாஸு, இவிங்க எப்பவும் இப்படித்தான்'


தினமணியில் வந்த மதியின் கார்ட்டூன்...

"உண்மையைச் சொல்வதென்றால்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல்
ஒரே கூட்டணியில் இருந்தால், எங்கள் தலைவருக்கு தலைவலி, தலைசுற்றல், மயக்கம், குமட்டல், வாந்தி, (பேதி)... இதெல்லாம் வருகிறது! இதுதான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு காரணம்...! "


-இதுக்கு நான் வேற கருத்துச் சொல்லனுமாக்கும்....!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...