ஞாயிறு, ஜூன் 21, 2015

காக்கா முட்டை இயக்குனரின் வீடியோ பேச்சு!

               



      
      காலத்தின் முட்டை! 

           காக்கா முட்டை இயக்குனரின் உடனடி நேர்காணலாகவே அமைந்துவிட்டது,  கடந்த வாரம் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. கா.மு இயக்குனர் மனிகண்டன் பேச பேச நமக்குள் பல்ப் எரிந்தது!. மனிதர் மிக இயல்பாக தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். எந்த பம்மாத்தும் இல்லாத அவரது பேச்சு நிச்சையம் சாதிக்க துடிப்பவர்களுக்கு உற்சாக டானிக்குதான்.

வாழ்க்கையில் வலி என்பது காசு பணத்தால் அளவிட முடியாதது.  வெற்றியோ விருதோ தொடாத மனிதனின் வலி என்பது உணர்வு ரீதியானது. சதா அவனை அது அரித்துக் கொண்டே இருக்கும். அவனது இலக்கை அடையும் வரை அந்த வலியை அவன் அடைகாத்துதான் ஆக வேண்டும். தான் அடைகாத்த அந்த வலியை அன்று மணிகண்டன் நமக்காக இறக்கிவைத்திருக்கிறார்.

இனி அவர் பேசிய வீடியோ தொகுப்பு....






புதன், ஜூன் 03, 2015

நஞ்சுண்ட நா! தமிழுண்ட நா!





நெஞ்சுக்கு நீதியாய் நின்று
எரிதழல் தன்னில் ஏந்தி
திருக்குவளை ஈன்றெடுத்த
தங்கமென தமிழுக்கு - நீ வந்தாய்.

நீ வந்ததிந்த நேரமோ...?
சூது மதியார் சூழ் நம் நிலத்தை
ஏதுமறியார் நம் தமிழர்
தலை நிமிறா நிலைகண்டு,

தமிழனை தடுத்தாட்கொண்டு
போர்களத்தில் - நீ முன்னின்றாய்.

கரகரத்த குரல் தமிழனின்  குறளாக..
முன்னின்று வழி நடத்த முக உன் பிறப்பு
காலத்தின் கொடையென்றோ...!
மழைக் காலத்தின் குடையன்றோ...!

அகவை தொன்னுற்றிரண்டாயினும்
முக'வை முன்னின்று வழி நடத்தும் முத்தமிழுக்கோர்
வயது மூவாயிரமாண்டுகள் மேலே
நனிதமிழுக்காற்றுவாய் நல் தொண்டினை அதற்குமேலே...!

நஞ்சுண்டநா வசை பாடும் -உன் மேல்
தமிழுண்டநா என்றும் இசைகொள்ளும் உன் பால்
பகுத்தாராய்ந்தால் நாங்கள் உன் பக்கம்
பகுத்தறிவற்றோர் என்றென்றும் நம் எதிர்பக்கம்!.

நீ இல்லாதுபோனால் அன்றுணருவார் -உன் பெருமை
இருக்கின்ற நாளெல்லாம் எய்துவார் உன் மேல் அம்பை
இதை நான் சொல்லாது போனால்
உன் காலத்தில் வாழ்ந்த எனக்கென்ன பெருமை!.

எம் தலைவனே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!.

-மகேஷ் பத்மனாபன்!.
3/06/2015


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...