புதன், ஆகஸ்ட் 18, 2010

இதற்கும் உமாசங்கரே காரணமாக இருந்துவிடுவாரோ...!

அப்போது நான் மயிலாடுதுறையில் மன்னம்பந்தல்லில் உள்ள AVC  கல்லூரியில்  இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்றுக்  கொண்டு இருந்தேன்.  அப்போது சோழன் போக்குவரத்து ஊழியர்களுக்கும் கல்லுரி மாணவர்களாகிய எங்களுக்கும்  சண்டை மூண்டது.  சிறிய அளவில் தொடங்கிய சண்டை பல கல்லூரிகளுக்கும் பரவி பெரும் கலவரவமாக வெடித்தது.

தனியாக மாட்டிக் கொண்ட மாணவர்களை போக்குவரத்து ஊழியர்கள் வெளுப்பதும், மாணவர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து,  நடத்துனர், ஓட்டுனர்களை திருப்பி தாக்குவதுமாக,  கலவரம் ஒரு வாரமாக மயிலாடுதுறையின் சுற்று வட்டாரங்களில் நடந்துக் கொண்டு இருந்தது. கல்லூரிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டுவிட்டார்கள்.

புத்தகம் வைத்துக் கொண்டு ரோட்டில் எவன் நடந்தாலும் அடி, நானெல்லாம் போலீஸ் நிலையத்தில் நுழைந்து தப்பி வந்தது தனி கதை!.

அப்போது மயிலாடுதுறையில் சப் கலக்டராக இருந்தவர் உமாசங்கர்.  இந்திய ஆட்சி பணி முடிந்து, முதன் முறையாக துணை ஆட்சியராக அங்கு பதவியேற்றிருந்தார்.  குள்ளமான உருவம், சற்றே அரும்பிய தாடி என்று அவரும் ஒரு மாணவரைப் போல்தான் இருந்தார்.

கலவரத்தின் நிலவரத்தை  உணர்ந்த உமாசங்கர்,  மாணவர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களை அமைதி பேச்சு  வார்த்தைக்கு அழைத்தார்.  பேச்சு வார்த்தை  அவரது கலெக்டர் பங்களாவில்   நடைப் பெற்றது.  அப்போது இரு தரப்பும் ஆயுதங்களோடுதான் குழுமினார்கள். நாங்கள் எல்லாம் லாரியில்,  மாணவர்களை திரட்டி பேச்சு வார்த்தைக்கு சென்றோம்.

பேச்சு வார்த்தையின் போது முரண்டு பிடித்த இரு தரப்பையும் சமாதானம் செய்து,  சுமுகமாக பேசி,  பெரும் கலவரம் நடக்காமல் தடுத்தார்  உமாசங்கர்.   அதிலிருந்து மாணவர்களின் ஹீரோவாகிவிட்டார்.  அவரது முயற்சி, மற்றும் அணுகுமுறை மாணவர்களிடையே பெரும் தாகத்தை ஏற்படுத்தியது.

சுடுகாடு கொட்டகை ஊழலை வெளிகொணர்ந்து  அதிமுக ஆட்சியை வெளியேற்ற உதவியது. அதனாலேயே திமுகவின் ஆதரவு அவர் கேட்காமலேயே அவருக்கு கிடைத்தது.  இன்று அதுவே அவருக்கு எமனாகி விட்டது.

அவர் பதவி பறிப்பிற்கு சொல்லப்படும் காரணம் சிறு குழந்தை கூட எற்றுக்கொள்ளதது ஆகும் .

 பொதுவாக  திரைப் படங்களில் தான், இத்தகைய காட்சிகளை காண முடியும்.  நேர்மையான அதிகாரிகளை பழிவாங்க,  அவர்கள் மீது வீண் பழி சுமத்தி, அவர்களை பதவியைவிட்டே தூக்கி எறிவார்கள்.    அது இன்று நமது கண்முன்னே நடந்திருக்கிறது.

ஆளும் திமுகவிற்கு சில பல விழையங்களில் வளைந்து கொடுக்கவில்லை என்பதால், உமாசங்கர் சாதியின் பெயரால் பலி  கொடுக்கப் பற்றிருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்க் காரணம் கருணாநிதியின் குடுப்பத்தினர்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கலைஞர் எது செய்தாலும், கூக்கிரலிடும் ஜெயலலிதா உமாசங்கர் விசயத்தில் வாய் திறக்க மறுக்கிறார்.  அவருக்கு அப்படி ஒரு வலி!!(?).

அதிமுக ஆட்சியை அகற்ற உமாசங்கர் காரணமாக இருந்தார் என்பதால்,
உமாசங்கர்  மீது கலைஞர்  கருணாநிதிக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு.  அதனால்தான், தனது சொந்த மாவட்டம் திருவாரூர் உதயமானபோது கூட,  உமாசங்கரைதான்  கலைஞர் கலெக்டராக  போட்டார்.  அந்தளவிற்கு அவர் மீது நம்பிக்கை!. ஆனால், அவரால் கூட உமாசங்கரை காப்பாற்ற முடியவில்லை என்பது தான் ஒரு வரலாற்று கொடுமை.

அன்று அதிமுக ஆட்சியை அகற்ற  (ஒரு)  காரணமாக இருந்த           உமாசங்கர்,
இன்று திமுக ஆட்சியையும் அகற்ற  (ஒரு)  காரணமாக இருந்துவிடுவரோ என்னவோ...?! 

"யாம் அறியேன் பராபரமே."



 

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...