வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

375வது பிறந்த நாள்!. சென்னை புகைப்படங்கள்!.



          375வது பிறந்த நாளை கொண்டாடிவிட்டது சென்னை!.  ஆண்டுகள் முன்னுறைக் கடந்தாலும் இன்னும் முதுமை தட்டவில்லை சென்னைக்கு. என்றும் இளமை, என்றென்றும் புதுமை என்பது போல், இன்றும் தனது இளமையை காத்து வருகிறது. சென்னை என்றொரு நகரம் இல்லையென்றால் நானெல்லாம் எங்கே பிழைப்பு தேடி ஓடி இருப்பேன் என்று தெரியவில்லை. 1995ல் கல்லூரி முடிந்ததும் 20 நாட்களில் சென்னைக்கு பஸ் ஏறிவிட்டேன். அன்றிலிருந்து சென்னை என்னை அன்னையைப் போல் காத்துவருகிறது.

மிக உயர்வான மனித நேயம் கொண்ட ஒரு நகரம் சென்னை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வடக்கு கிழக்கு மேற்கு என்று பல திசைகளிலும் மனிதர்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். மார்க்கெட்டிங் மனிதனான எனக்கு சென்னையை சுற்றுவதுதான் வேலை. நான் அவ்வப்போது எடுத்த புகைப்படங்களை வீடியோவாக பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

பார்த்து மகிழுங்கள்!.  வணக்கம் சென்னை!.

-தோழன் மபா.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...