திங்கள், ஏப்ரல் 22, 2013

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்.



'புத்தகமே 
உலகை உளி கொண்டு செதுக்கும் சிற்பி
அன்பை வெளிப்படுத்தும் கருவி!'



     உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புடனே பிறக்கிறது. அது நினைவூட்டல் போன்றோ அல்லது முந்தைய அனுபவத்தின் மீள் தொடர்ச்சியாகவோ அன்றைய தினம் நினைவில் கொள்ளப்படுகின்றது. இது ஒரு வகையில் நாம் இயங்குவதற்கான சூழலை எளிதாக்குகிறது.  இன்றைய தினமும் அப்படியே.   இன்று உலகம் முழுவதும் "உலக  புத்தக தினம்" கொண்டாடப்படுகிறது.


ஒரு சமூகத்தை நல்லதொரு சமூகமாக மாற்றும் திறன் கொண்டது புத்தகங்கள்.  புத்தகங்கள் இல்லையென்றால் நாம் எப்படிபட்ட ஒரு மனித சமூகமாக இருந்திருப்போம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.  புத்தகங்களே இவ் உலகை உளி கொண்டு செதுக்கும் சிற்பியாக இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

இவ் உலகை இயக்க அந்த புத்தகங்களிலிருந்துதான் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களே மகா மனிதர்களாக இப்பூ உலகை  மான்புற செய்திருக்கின்றனர்.  ஒப்பற்ற தலைவர்களையும், ஞானிகளையும், தொழிற் நுட்ப வியாளர்களையும்,  மருத்துவர்களையும்,விஞ்ஞானிகளையும் மேதைகளையும், மக்கள் தலைவர்களையும் இந்த புத்தகங்கள்தான் பிரசவித்திருக்கின்றன.

பத்து கட்டளைகள்.

உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சம நிலை ஏற்பட அறிவுசார் தகவல்களை பரவலாக்கும் முயற்சியில் 1972ம் ஆண்டு உலக புத்தக ஆண்டாக அறிவிக்கப்பட்டது.  அதற்கு முன்னர்  உலக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் இவர்களின் முயற்சியால் 1971 அக்டோபர் 22ம் தேதி மாநாடு ஒன்று நடைபெற்றது.  அதில் படிப்பாற்றலை பரவலாக்க 10 கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன.



  • அனைவருக்கும் வாசிக்கும் உரிமை.
  • புத்தகங்களின் இருத்தல் அவசியம்.
  • படைப்பாளியை உருவாக்கும் சமூகச் சூழல்.
  • பதிப்பகத் தொழில் வளர்ச்சி.
  • நூலகங்களின் வசதிகள்.
  • நூலகங்கள் நாட்டின் கருவூலம்.
  • பதிப்பாளர்- வாசகர் இணைப்பு.
  • புத்தகங்களை பராமரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • அனைத்து நாடுகளின் / மொழிகள் புத்தகங்கள் பரிமாற்றம்.
  • வாசிப்பு மூலம் உலக உறவு

இந்த பத்து கட்டளைகளின் தொடர் விவாதம் விளைவாக 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகத் தினம் அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்தே அனைத்து நாடுகளும்  ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகத்தினமாக கொண்டாடப்பட்டது.

இந்த உலக புத்தகத் தினத்தை மேற்கத்திய நாடுகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.  குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த பல்வேறு  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.   அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டு பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பல்வேறு விற்பனை திட்டங்களை அறிமுகப்படுத்தினர்.  சிறப்பு தள்ளுபடி, பரிசுப் பொருட்கள், பிரபல எழுத்தாளரின் கையொப்பம் என்று புத்தக விற்பனையில் நவீன உத்திகள் புகுத்தப்பட்டது.

இதனால் வருடம்  தோறும்  'உலக புத்தக தினம்' ஏப்ரல் 23ம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  உலக புத்தக தினத்தன்று சிறுவர் சிறுமியர்களுக்கு   புத்தகங்களை பரிசாக அளிப்போம்.  நாளைய நவீன உலகை  கட்டமைக்கப் போகும் சிற்பி அவர்கள்தானே....?!


 தகவல் உதவி:   தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 'உலக புத்தகத் தின' அழைப்பு மடல்.  

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பத்து கட்டளைகளும் எல்லா ஊர்களிலும் சிறப்பாக நடக்கட்டும்...

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...