சனி, ஜனவரி 25, 2014

அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்!





           கும்பகோணம் தஞ்சை சாலையில் இருக்கும் அய்யம்பேட்டையில் இருக்கிறது 'இத்தாலியன் பேக்கரி'.  தஞ்சை போகும் வழியில் எதேச்சையாக காரை நிறுத்தி பப்ஸ் வாங்க... "வேற என்ன இருக்கு என்றேன்?".
"எங்க கடை ஸ்பெஷல் 'டீ காபி பிஸ்கட்'  இருக்கு ட்ரை பண்ணி பாருங்க சார் " என்றார் அந்தக் கடையில் இருந்தவர்.

நீட்டு நீட்டாய் இருந்த  பிஸ்கட்டை கொடுத்தார்.

வித்தியாசமான முறையில் மூன்று கைவிரல் சைசில், வரி வரியாக  மொறு மொறு சுவையுடன் இருந்தது  பிஸ்கட். 1957ல் அய்யாச்சாமியால் தொடங்கப்பட்ட இத்தாலியன் பேக்கரியை,  தற்போது மூன்றாவது தலைமுறை நடத்தி வருகிறது.  "எங்களது தாத்தாதான் இந்த பிஸ்கட்டை கண்டுபிடித்தார். இந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு இந்த பிஸ்கட்டை பற்றித் தெரியும்" என்றார் கடையில் இருந்த பேரன்.

அய்யம்பேட்டை 'டீ காபி பிஸ்கட்டை' இவர்கள் மொத்தமாய் செய்து விற்பதில்லை. அன்னனைக்கு செய்துதான் விற்கிறார்கள். 'இது எப்படி தெரியும்' என்று கேட்கிறீர்களா...? 
 
இரவு பத்தரை மணிக்கு திரும்பி வரும்போது கடை திறந்து இருந்தது.  காரை நிறுத்தி பிஸ்கட் கேட்கும் போதுதான் அவர் சொன்னார்  "சொல்லியிருந்தா எடுத்து வச்சிருப்போமே சார்" என்று.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கர கர மொறு மொறு கிரவுன்ச் !'அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்' அறிமுகப்படுத்தப்படவேண்டிய ஒன்று!.

அந்தப் பக்கம் போனால் வாங்கி சாப்பிட்டுப்பாருங்க!.
கால் கிலோ ரூ.40/-

10 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

தகவலுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு (!) சொன்ன சுவையான தகவலுக்கு நன்றி...

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

நீ காண்டி பெத்துக்கின இன்பம் இந்த ஒயகத்துக்கும் கெடைக்கட்டும்பா...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அடுத்த முறை தஞ்சைக்கு வரும் பொழுது, தெரியப்படுத்துங்கள் ஐயா
தங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கின்றேன்.
அலைபேசி எண்.94434 76716

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

'கண்டு' பிடித்து சொன்னதற்கு, நன்றி!
கடையின் படமோ, முதலாளி (பேரன்) படமோ போட்டிருக்கலாமே?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@தி.தமிழ் இளங்கோ.

தங்கள் வருகைக்கு நன்றி !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன்.
நன்றி தித.
இனிய குடியரசுத் தின வாழ்த்துகள்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@முட்டா நைனா.

அதேதான்....நமக்கு கெடச்சது அல்லாத்துக்கும் கெடைக்கனும்!
நன்றி!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கரந்தை ஜெயக்குமார்.
அய்யா, திருச்சி சென்றுவிட்டு தஞ்சையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பும்போது இரவு ஆகிவிட்டது. அந்த நேரத்தில் உங்களை தொந்திரவு செய்யவேண்டாம் என்று இருந்துவிட்டேன். உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் அய்யா. நன்றி !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@முஹம்மது நிஜாமுத்தீன்.

நேரமின்மையால் அவரது புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. பிஸ்கட்டை மட்டும் வாங்கிக் கொண்டும், படம் எடுத்துக் கொண்டும் வந்துவிட்டேன்.

இனி அந்த கைங்காரியத்தை வேறு யாராவது தொடரக் கூடும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...