வெள்ளி, ஜூன் 20, 2014

தினமணி நடத்தும் இரண்டு நாள் இலக்கியத் திருவிழா!. சென்னையில் நாளை தொடங்குகிறது!.


அப்துல் கலாம் தொடங்கி வைக்கிறார்!.

                தமிழ் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் தினமணி நாளிதழ்,  தமிழ் மீதான தனது காதலை வெளிப்படுத்த எப்போதும் தவறியதில்லை. தமிழ் மொழிக்கான தனது வழமைகளிலிருந்து என்றுமே அது பின் வாங்கியதில்லை. தலையங்கம், தினம்தோறும் சமூகம்/ இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், துணை கட்டுரைகள்,  ஞாயிறு தோறும் ஒரு பக்கம் தமிழ் மணி, செம்மொழி சிறப்பு மலர், தில்லியில் தமிழ் இலக்கிய மாநாடு என்று முன்னெப்போதையும் விட இப்போது  தமிழ் மீது பித்துப் பிடித்துக் கிடக்கிறது தினமணி நாளிதழ்.

வரும் 21 (சனிக் கிழமை) மற்றும் 22ம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பிரமாண்டமான தமிழ் இலக்கிய திருவிழாவினை தினமணி நடத்துகிறது. 32 அறிஞர்கள் பங்கேற்கும் 8 அமர்வுகளில் ஆய்வு அரங்கம், இலக்கிய பேருரைகள், எழுத்தாளர்களின் நினைவலைகள், அரசியல் தலைவர்களின் இலக்கிய பேச்சு, என்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நல்லதொரு தமிழ் இலக்கிய திருவிழா தொடங்க இருக்கிறது.

முதல் நாள் (21/06/2014)
முதல் அமர்வு

'இன்றைய தேவையும் இலக்கியமும்'          
        தலைமை: அவ்வை நடராஜன்.       
        பேராளர்கள்: வீ,அரசு,எஸ்.ராமகிருஷ்ணன், நா.கண்ணன் (மலேஷியா).


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: பழ.நெடுமாறன்.

இரண்டாவது அமர்வு

 'காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்'.
         தலைமை: ஞானராஜசேகரன்,
        பேராளர்கள்: எஸ்.பி.முத்துராமன், கே.பாரதி, ரோகிணி.


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: திருச்சி சிவா.


மூன்றாவது அமர்வு

 'தகவல் ஊடகத்தில் தமிழ்'
              தலைமை: மாலன்.
             பேராளர்கள்; ஆ.இரா,வேங்கடாசலபதி,சுபாஷிணி ட்ரம்மல் (ஜெர்மனி),
             'காலச்சுவடு' கண்ணன்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: தமிழருவி மணியன்.

நான்காவது அமர்வு
மொழியும் பெயர்ப்பும்'
             தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்.
             பேராளர்கள்: நா.குறிஞ்சி வேலன், கா. செல்லப்பன், 'வயல்' சி. மோகன்.

கலை விருந்து: ஜாஹிர் உசேனின் 'தசாவதாரம்' நாட்டிய நாடகம்.


இரண்டாம் நாள் (22/06/2014)

ஐந்தாவது அமர்வு
 'சமயமும் தமிழும்'.
                  தலைமை: சுதா சேஷய்யன். 
     பேராளர்கள்: அரங்க. ராமலிங்கம், திருப்பூர் கிருஷ்ணன், சங்கர. சீத்தாராமன்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: பழ.கருப்பையா.

ஆறாவது அமர்வு
 'வாசிப்பும் பழக்கமும்'
   தலைமை: ம.இராசேந்திரன்.
   பேராளர்கள்: சு.வெங்கடேசன், நா.முத்துக்குமார், பாரதி.கிருஷ்ணகுமார்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: திருமாவளவன்
.

ஏழாவது அமர்வு

    'வேர்களைத் தேடி-இலக்கியம்'.     
தலைமை: இ.சுந்தரமூர்த்தி. 
பேராளர்கள்: கி.நாச்சிமுத்து, மு.மேத்தா, க.நெடுஞ்செழியன்.


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: வைகோ.

எட்டாவது அமர்வு

 'வேர்களைத் தேடி- கலைகள்'.    
 தலைமை: இரா.நாகசாமி.
பேராளர்கள்: ட்ராட்ஸ்கி மருது, சே.இராமானுஜம், பி.எம்.சுந்தரம்.


மாலை 6 -7.30 மணிக்கு

சொர்ணமால்யா கணேஷ் குழுவினரின் 'ராஜராஜன் நாட்டிய நாடகம்'
.


தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் தொடங்கி வைத்து சிறப்புறை ஆற்றுகிறார்.  விழா நிறைவுரையை ஆற்றுகிறார் தமிழக ஆளுனர் ரோசைய்யா. இரண்டு நாள் விழா நிகழ்ச்சிகளை தினமணி இணையதளத்தில் நேரலையாகவும்  நாம் காணலாம். தொடக்க விழாவில் இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் நாதஸ்வர நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதோடு பபாபிசியின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் விற்பனையும் விழா அரங்கில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு!.

அனைவரும் வருக! தமிழ் அமுதம் பருக!!.

தொடர்புக்கு:
98405 98008, 98411 43048.
98404 54062, 99416 14411.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பேச்சாளர்களின் பட்டியலைப பார்த்தாலே கலந்து கொள்ள வேண்டும்
செவி மணக்க கேட்க வேண்டும் என்று
தோன்றுகிறது ஐயா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...