சனி, செப்டம்பர் 12, 2015

புரட்சியின் நிறம் - சே குவேரா!


எதார்த்தம் பேசும் நுழைவு வாயில்!
         ழக்கமாக ஓவிக் கண்காட்சி என்றால் பளபள பளிங்கு தரையும், ஓவியத்தின் மீது மட்டும் ஒளி உமிழும் விளக்குகள் போர்த்தப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். காலடி சத்தம் கூட காதில் விழாத ஒரு அந்தகாரத்தின் அமைதியில் அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மொளன நகர்வுகளில் பார்வையாளனுக்கும் ஓவியத்திற்குமான புரிதல் காலடியின் இடைவெளியில் கரைந்து போகும்.

ஆனால் புரட்சியாளன் சே குவேராவின் ஓவியக் கண்காட்சி அப்படி அல்லவே....?!.

ஒரு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையில்,  மாணவர்களின் கூக்குரலிக்கிடையே இவ் ஓவியக்காட்சி நடத்தப்படுவதே புரட்சிக்கான பிரத்யேக அழகுதான். 

இந்த நூற்றாண்டின் சின்னம் என்று போற்றப்பட்ட சே குவேராவை விதவிதமாக வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி!. 'சே குவேரா புரட்சியின் நிறம் ஓவியக் காட்சி' என்ற தலைப்பில் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

.இனம் மொழி கடந்து உலக விடுதலைக்காக போராடிய அந்த மனிதனை இன்றைய இளைஞர்கள் தங்களது தலைவனாக வரித்துள்ளனர்.

காங்கோ காடுகளில் ஜீப்பின் பாணட்டில் துப்பாக்கியுடன் அமர்ந்து செல்லும் சே குவேரா..... போர் முனையில் வீர நடை போடும் சே குவேரா, துப்பாக்கியை கையில் பிடித்தபடி கடைவாயில் கனன்றுக் கொண்டு இருக்கும் சுருட்டுடன் சே குவேரா என்று ஓவியங்களின் பின்னணியில் ஒரு நீர் கோடாய் விரவி இருக்கிறார் சே. அதுவே நம்மை அவரது படையில் சேர்க்க வைத்து வெற்றி கூச்சலிடவைக்கிறது. இத்தகைய புரிதல்கள் ஒரு கலைஞனின் வெற்றியாகவும் அமைந்துவிடுவது சிறப்பு!.

முன்னதாக இவ் ஓவியக் காண்காட்சிப் பற்றி தனது முக நூலில் பதிவிட்டிருந்தார் நண்பர் வேடியப்பன். அதனாலயே அங்கு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவருக்கு நன்றி!..

சென்னை வெங்கட் நாராயணா சாலையில், திருப்பதி தேவஸ்தானம் எதிரில் இருக்கும் சி.தெ. நாயகம் மேல் நிலைப் பள்ளியில் .இவ் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. வரும் ஞாயிறு (13ம் தேதி) வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. 

அவசியம் பார்க்கவும்!.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சே குவேரா
இன்றும் என்றும்
வாழ்ந்து கொண்டே இருப்பார்
நன்றி ஐயா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...