திங்கள், ஆகஸ்ட் 04, 2025

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !


ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன்று சென்னையில்  நடைபெற்றது. நிகழ்வுக்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.  விழா சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது.

ஆங்கிலத்தில் வெளிவந்த ஜோய் ஆலுக்காஸின் 'ஸ்ப்ரெடிங் ஜோய்' ( Spreading Joy)  தமிழ் பதிப்பை "தங்க மகன் ஜோய்" என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.

விழாவில் பெருந்திரளான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கேரளத்தில் பெரும் பணக்கார குடும்பத்தில்  பிறந்த ஜோயை குடும்பத்தினர் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  15 குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில் இவர் 11 ஆவது குழந்தை.  தனக்கான தனிமையை உணர்ந்த ஜோய் தனது பால்யத்தில்  முழு கவனத்தையும் வியாபாரத்தில் செலுத்தினார். அவரது தீவிரமான வியாபார நுணுக்கம் உலக அளவில் தங்க நகை விற்பனையில் அவருக்கு பேரும் புகழையும் வாங்கித் தந்திருக்கிறது.
 
"கேரளம் தாண்டி எனது முதல் கடையை சென்னையில்தான்  தொடங்கினேன். அதனால் சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான நகரம்" என்றார் ஜோய் ஆலுக்காஸ்  தனது ஏற்புரையில்.

சென்னை தி நகரில்  இருக்கும்  பிரசாந்த கோல்டு டவரில்  இயங்கும் ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரிதான் இந்தியாவின் பெரிய நகைக் கடை  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பார்க்க  தங்க நகைக்கென பிரத்யேக மால் போலவே இருக்கிறது பிரசாந்த் கோல்டு டவர்!
**

விழா முடிந்ததும், விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போல ஒரு அட்டை தந்தார்கள். அதில் க்யூ ஆர் கோடு இருந்தது. அந்த க்யூ ஆர் கோர்டை நமது மொபைலில் ஸ்கேன் செய்ததும்... நம்மை ஒரு   தற்படம் (செல்ஃபி) எடுக்க சொல்கிறது,   இல்லை மொபைலிலிருந்தும் நமது புகைப்படத்தை பதிவேற்றமும் செய்யலாம்.

பதிவேற்றம் முடிந்ததும், நமது புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன்  முக அடையாளம் (Face    Recognitions) தரவுகளை  வைத்து,  நாம்  நிகழ்வில் எங்கெங்கு இருந்தோமோ அந்தப் புகைப்படங்களை  தேடி எடுத்து,  சடுதியில் நமது வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பிவிடுகிறது.  

புகைப்படங்களை பார்க்கவே பிரமிப்பாக, ஆச்சரியமாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு எந்தளவிற்கு நமது வாழ்க்கையில் ஊடுறுவி இருக்கிறது பாருங்கள் ?!!!

பி.கு: நல்ல வேளையாக கையில் கிளாசு இருக்கும் புகைப்படத்தை அனுப்பவில்லை  என்று நினைத்துக் கொண்டேன். விழாவில் காக்டெயில் இருந்தது.😍 இனிவரும் காலங்களில் இந்த AI என்னென்ன ரகளை செய்யப் போகிறதோ....??!!!

#AI
#joyallukas

கருத்துகள் இல்லை:

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன்று சென்னையி...