புதன், ஜூன் 03, 2015

நஞ்சுண்ட நா! தமிழுண்ட நா!





நெஞ்சுக்கு நீதியாய் நின்று
எரிதழல் தன்னில் ஏந்தி
திருக்குவளை ஈன்றெடுத்த
தங்கமென தமிழுக்கு - நீ வந்தாய்.

நீ வந்ததிந்த நேரமோ...?
சூது மதியார் சூழ் நம் நிலத்தை
ஏதுமறியார் நம் தமிழர்
தலை நிமிறா நிலைகண்டு,

தமிழனை தடுத்தாட்கொண்டு
போர்களத்தில் - நீ முன்னின்றாய்.

கரகரத்த குரல் தமிழனின்  குறளாக..
முன்னின்று வழி நடத்த முக உன் பிறப்பு
காலத்தின் கொடையென்றோ...!
மழைக் காலத்தின் குடையன்றோ...!

அகவை தொன்னுற்றிரண்டாயினும்
முக'வை முன்னின்று வழி நடத்தும் முத்தமிழுக்கோர்
வயது மூவாயிரமாண்டுகள் மேலே
நனிதமிழுக்காற்றுவாய் நல் தொண்டினை அதற்குமேலே...!

நஞ்சுண்டநா வசை பாடும் -உன் மேல்
தமிழுண்டநா என்றும் இசைகொள்ளும் உன் பால்
பகுத்தாராய்ந்தால் நாங்கள் உன் பக்கம்
பகுத்தறிவற்றோர் என்றென்றும் நம் எதிர்பக்கம்!.

நீ இல்லாதுபோனால் அன்றுணருவார் -உன் பெருமை
இருக்கின்ற நாளெல்லாம் எய்துவார் உன் மேல் அம்பை
இதை நான் சொல்லாது போனால்
உன் காலத்தில் வாழ்ந்த எனக்கென்ன பெருமை!.

எம் தலைவனே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!.

-மகேஷ் பத்மனாபன்!.
3/06/2015


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்க பல்லாண்டு...

பெயரில்லா சொன்னது…

அற்புதம்.. அற்புதமான வரிகள்.

KILLERGEE Devakottai சொன்னது…


கவிதையை ரசித்தேன் நண்பரே அருமை
(நான் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவன்)

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...