ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

இலங்கை தமிழர்களை இந்து மதமாவது காக்கட்டும் !





தண்ணிரிலும் கண்ணிரிலும் இலங்கை தமிழர்கள்.

இலங்கையில் தமிழர்கள் முள் வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தில்லியில் இலங்கைத் தூதரக அலுவலகத்தை இந்து அமைப்புகள் கடந்த திங்கள் (21/09/09) அன்று முற்றுகையிட்டனர்.

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைப்பெற்ற இப் போராட்டத்தில் 14 இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமை நசுக்கப்படுவதையும், தமிழர்களின் இந்து கோவில்கள் புத்த விகாராக மாற்றப்படுவதையும் கண்டித்து மனு ஒன்றை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளனர்.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பற்றி விவாதிக்கப் பட்டது. உள் நாட்டிளும், வெளி நாடுகளிலும் பாதிக்கப்படும் இந்துக்களையும் காப்பாற்ற வலியுறுத்தியும் இலங்கையில் இந்து விரோத நடவடிக்கைகளையும் தடுக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பொதுச் செயலாளர் அர்ஜுன் சம்பத், கொளரவத் தலைவர் தவன் போஸ் போன்றோர் கலந்துக் கொண்டனர்.

இது வரவேற்கவேண்டிய ஒன்று. இந்தியர்கள்; தமிழர்களை தமிழர்களாகா மட்டும் பார்க்காமல் இந்துவாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான், இலங்கை தமிழர்களை இந்துவாகக் கருதியாவது அவர்களை காப்பாற்றுங்கள். தமிழுக்கும் இந்து மதத்திற்கும் பல் வேறு நல்லது செய்தவர்கள் இலங்கை தமிழர்கள்.

இந்து மதத்தின்பால் பற்று, ஒழுக்க நெறியான வாழ்க்கை, தர்ம நெறிகள் என்று உயர்ந்த எண்ணங்களோடு செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள் இலங்கை தமிழர்கள்.

தலைவர் பிரபாகரன், தமிழர்கள் உயர்பண்புகள் என்று போற்றிப் பாதுகாத்த முக்கியமான எல்லா பண்புகளையும் கொண்டவர். ஒழுக்கமான வாழ்க்கை கொண்டவர்; கொண்ட கொள்கைக்காக உயிரைவிடவும் தயாராக இருந்தவர். அரசியல் தந்திரம் என்ற பெயரில் காட்டிக் கொடுக்காதவர், பொய் பேசாதவர், நாடகம்போடாதவர், மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்தவர்; தன் இலட்சியத்துக்காகத் தன் குடும்பத்தையும் இணைத்தவர்; தியாகத்துக்குத் தயங்காதவர்; எதிரிகளை அழிப்பதில் தயை தாட்சண்யமில்லாதவர். வீரமிக்கவர்.

சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பு உண்டு என்று ஜார்ஜ் ஹார்ட் ‘அணங்கு’ என்ற சொல்லை விளக்குவார்; அதாவது ஒரு தெய்வத் தன்மை தமிழர்களின் நிலம், இயற்கை, சிந்தனைசார்ந்து நின்றது என்றும் அதுதான் அணங்குக் கோட்பாடு என்றும் ஜார்ஜ்ஹார்ட் கூறுவார்.

முருகவணக்கம் தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகம். சைவத்தத்துவமும் அப்படித்தான்; இவை வீரம் சார்ந்த வழிபாடுகள். பிரபாகரன் காட்டிய வீரம் தமிழ்க்குடிக்கு அகில உலகப் பெருமையைத்தரும் முறையில் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று. உலகில் சிறுசிறு மக்கள் கூட்டங்கள் தங்களுக்கான நாட்டை உருவாக்குவது சர்வசாதாரணம். அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தை தனது அறிவுத்தோற்றவியலின் (Epistemology) அடிப்படையாக வைத்தார். சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு முதன்முதலில் அச்சானது 1894. அன்றிலிருந்து தமிழர்களுடைய வீரம் தமிழ்க் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு வருகிறது. எந்தப் பாடநூலிலும் தமிழர்களுடைய வீரம் பற்றிய செய்தி இல்லாமலில்லை


இன்று 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்பது இலங்கையில் அவதிப் படும் தமிழர்களின் நிலை. உலகம் அவர்களை கைவிட்டுவிட்டது, இங்கு உல்ல தமிழர்கள் போராடி ஓய்ந்து விட்டார்கள். இந்திய அரசு எல்லா கொடுமைகளுக்கும் துணை நின்று இலங்கை அரசின் துணையோடு தமிழர்களை அழித்து வருகிறது. இனி இந்து மதம் மூலமாகவாவது நாம் தமிழர்களை காப்பாற்றவேண்டும்.

இலங்கையில் இந்து மதத்தை காப்பாற்றியவர்கள் ஈழத் தமிழர்கள்; என்ற அளவிலாவது இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் ஈழத்தமிழர்களை காப்பாற்றட்டும். இந்து மதத்தலைவர்களோடு 'தமிழன் வீதி' கொள்கை அளவில் முரண்படலாம்; ஆனால் காப்பற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது என்பதை இந்து மதத்தலைவர்கள் மறந்து விடவேண்டாம்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...