புதன், டிசம்பர் 15, 2010

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதிய ஆசிரியர். பிரபு சாவ்லா!




பிரபு சாவ்லா இந்தியாவின் குறிப்படத்தக்க அரசியல் புலனாய்வு  பத்திரிகையாளர்களில்  ஒருவர். ஆளும் ஆட்சியாளர்கள் கம் அரசியல்வாதிகளுக்கு   எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்துவரும் பிரபு சாவ்லா தற்போது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா டுடே வாசர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபு சாவ்லா, இந்தியா டுடே மாநில மொழிகளில் வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார். அதுநாள் வரையில் வழவழப்பான தாளில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்தது, இவரின் முயற்சியால் பிராந்திய மொழிகளிலும் வரத் தொடங்கி பெரிதும் வரவேற்பைப் பெற்றுது.


டெக்கான் கிரானிகல் எடிட்டர் இன் சீப் ஆக இருந்த எம் ஜே அக்பர் இந்திய டுடே க்கு தாவுவதால், அங்கிருந்த   பிரபு சாவ்லா இந்தியன் எக்ஸ்பிரசுக்கு வருகிறார்.


இதற்கு முன்பே எண்பதுகளில் இந்தியன் எக்ஸ்பிரசில் ஆசிரியராக இருந்துள்ளார். அதோடு தினமணி நாளிதழுக்கும் ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றிவுள்ளார் என்பதும்குறிப்படத்தக்கது.
1946 இல் பாகிஸ்தானில் உள்ள தேரா காசி கானில்  பிறந்தவர். தனது கூர்மையான எழுத்துகளால் அவப்போது அரசியல்வாதிகளைக் குத்திக்கொண்டு இருக்கும் பிரபு சாவ்லாவின் பேனா இன்னும் அதிக வேகத்துடன் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
 
இதில் கொஞ்சமமும் சளைத்தது அல்ல இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அரசியல் புலனாய்வுச் செய்திகளுக்கு  எப்போதும் பேர்போனது இந்தியன் எக்ஸ்பிரஸ். அதன் துடிப்பு மிக்க விமர்சனங்களின்  வீச்சுகளை தாங்கமுடியாத இந்திராகாந்தி போன்ற அரசியல்வாதிகள் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு எதிராக நெருக்கடி நிலையை அமல்படுத்தி அதை தடுமாறச் செய்தனர். ஆனால் இன்றும் அதே போர்குனத்தோடு, ஆட்சியாளர்களுக்கு எதிராக வாளை சுற்றுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

குழப்பமான இந்த அரசியல் சூழ்நிலையில்  இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பிரபு சாவ்லாவின் வருகை நிச்சயம் இந்திய அரசியலை ஒரு கைப்பார்க்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.




கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...