திங்கள், மார்ச் 05, 2012

பைக் பின் சீட்டில் அமர்ந்து சென்ற நாய்!



              சென்னை நீயூ ஆவடி சாலையில் மதியம் வந்துக் கொண்டு இருந்தபோது, அருகில் சென்ற பைக்கில் யாரோ வித்தியாசமாக அமர்ந்து சென்றது போல் தெரிந்தது.   ஒருவர் நல்ல பெரிய நாயை தனது பின் இருக்கையில் அமரவைத்து அழைத்துபோனார்.  அது தனது இரண்டு பின்னங்கால்களால் சீட்டின் நுனியைப் பிடித்துக் கொண்டது.   இரண்டு முன்னங்கால்களை அவரது தோள்பட்டையில் வைத்துக் கொண்டு, முகத்தை அவரது தோளில் சாய்த்துக் கொண்டு பிரயாணம் செய்தது.  என்ன வகை நாய் என்று தெரியவில்லை...? 
 


பொதுவாக பொமெரியன் வகையைச் சார்ந்த நாய்களை பைக் டாங்கில் உட்காரவைத்து அழைத்துப் போவார்கள். பார்த்திருக்கிறேன்.  இவர் என்னடாவென்றால்  இவ்வளவு பெரிய நாயை யாருடைய துணையுமின்றி பின் இருக்கையில் அமரவைத்து  தனியாக ஓட்டிக் கொண்டு போனார். மனிதன் போன்றே இந்த நாயும் ஜம்மென்று உட்கார்த்துக் கொண்டு போனது.

அதுசரி... நாய்ன்னு சொன்னதுக்கு அந்த 'நாய்' கோவிச்சுக்காதே....? 
 
 


 

4 கருத்துகள்:

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

இது தான் உலகம்....


பகிர்ந்தமைக்கு நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி ஜோசப்!

SURYAJEEVA சொன்னது…

kalakkal

Rathnavel Natarajan சொன்னது…

அவரிடம் கார் இல்லை. கார் இருந்தால் முன்னால் உட்கார வைத்திருப்பார்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...