வியாழன், மார்ச் 08, 2012

'தோல் கொடுப்போம்'




     'தோள்' என்று எழுதுவதற்குப் பதிலாக 'தோல்' என்று எழுதிட்டேன்னு             
பாக்கிறீங்களா  
....?  உண்மையாகவே இன்று  காலையில் பத்திரிகையில் வந்த செய்தி  ஆச்சரியப்படுத்தியது!.      
 
கண் தானம், இரத்த தானம், இதய தானம், ஈரல் தானம் போன்றவற்றைத் தொடர்ந்து தோலையும் தானம் செய்யும் முறை தமிழகத்திற்கு வந்துவிட்டது.  
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் புதன்கிழமை திறக்கப் பட்ட 'தோல் வங்கி'   மருத்துவ மைய திறப்பு  விழாவில்சென்னை தோல் மருத்துவ மைய  இயக்குநர் எஸ். முருகுசுந்தரம்தான்  மேற்கண்ட  தகவலைத் தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறை.

கண். எலும்பு, இதயம் ஆகியவைகளுக்கு தனித்தனி ஆராய்ச்சி மையம் இருப்பதுபோல், இந்தியாவியல் முதல் முறையாக  சென்னையில் தோல் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.




இந்த மையத்தில் மனித தோல் வங்கிப் பிரிவு உள்ளது. மனிதர்கள் கண் தானம் செய்வதுபோல் இந்த வங்கியில் தங்களது தோலையும் தானமாக அளிக்க பதிவு செய்யலாம். இறந்த மனிதர்களின் உடலில் இருந்து 6 மணி நேரத்திற்குள் தோலை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கலாம்.   தோல் வங்கியில் பதப்படுத்தி வைக்கப்படும் மனித தோலை 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்கமுடியும்.  தீக்காயம் அடைந்தவர்களுக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் இயல்பான நிலையில் பொருத்த முடியுமாம்.

தீக் காயம் அடைந்து  தோல் பொசுங்கி, விகார தோற்றத்துடன்  தங்களது வாழ்வை இழந்தவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் இச் செய்தி மிகவும் ஆறுதல் அளிக்கக் கூடியது.

 பொதுவா ஆடு, மாடு,  பாம்பு போன்ற பிராணிகளின் தோலைதான் உரித்து நாம் பயன்படுத்துவோம். இன்று நம் தோலையே உரித்து பயன்படுத்தும் அளவிற்கு மருத்துவம் முன்னேறிவிட்டது.  அதிசயம்தான்.

"தோல் இழந்தவர்களுக்கு தோள் கொடுப்போம்.
துயரத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுப்போம்!"

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...