ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

"நினைவுகள் மடியும் பொழுது....?!"





"எவ்வளவோ மக்க(ள் )வர்றாங்க போறாங்க அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இருக்க மாட்டங்குது. நல்லா இருக்காங்க, திடீருன்னு  எப்படி இருக்காங்க என்னு, ஊருக்கு போறப்ப  கேட்டா, உனக்கு விசயமேதெரியாதா, அவரு போயி மாசம் இரண்டாகுதுன்னு ரொம்ப அசால்ட்டாக சொல்றாங்க."


ராமச்சந்திரன் நைனா, ஓங்குதாங்கா இருந்த நாராயணசாமி மாமா,  மேரி அக்கா, எங்க வூட்டுக்கு பால் ஊத்துன இருளாயி அக்கா, 'டகு' அண்ணன்னு எல்லாம் சட்டு சட்டுன்னு போறாங்க. அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இல்ல.  எவ்ளோ பேரு ஒன்னுமே இல்லாம செத்து போறாங்க. போனதடவ ஊருக்கு போறப்ப பாக்குறவுங்க அடுத்த தரவ போறப்ப இருக்க மாட்டாங்கறாங்க...?


நெனச்சி நெனச்சி மனசு ஆத்து போவுது...! இப்ப கூட எழுதறப்ப கண்ணுல தண்ணி முட்டுது. என்ன வாழ்க்கைடா சாமி!.


-தோழன் மபா

Thanks Photo: http://xavi.wordpress.com/net/

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...