செவ்வாய், ஜனவரி 12, 2016

நாளை தொடங்குகிறது சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா!,


         ந்த முறையாவது பொங்கலுக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நிறைய பதிப்பகத்தார் நினைத்துக் கொண்டு இருந்தனர். இந்த பொங்கலுக்கும் அந்த கொடுப்பினை கிடைக்காமல் போய்விட்டது. 

வழக்கமாக பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) இந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோய்விட்டது. வெள்ளத்தால் தி நகரில் உள்ள பெரும்பான்மையான பதிப்பகங்கள் பாதிப்படைந்துள்ளன. அதனால் சென்னை புத்தகக் காட்சியை ஏப்ரலுக்கு தள்ளி வைத்துவிட்டது பபாசி. 

இன்னிலையில் நாளை தொடங்குகிறது 'சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா'. சென்னை நகரின் மையத்தில் ராயபேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி வரும் ஜனவரி 24ம் தேதி வரை இப் புத்தக் காட்சி நடைபெறுகிறது.  தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெருகின்றன. துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெருகிறது.

கடந்த 38 வருடங்களாக பொங்கலை முன்னிட்டு சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பான்மையான பதிப்பகத்தார் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லமுடிவதில்லை.   இந்த வருடமாவது பொங்கலை ஊரில் மனுச மக்களோடு கொண்டாடலாம் என்று நினைத்திருந்தவர்கள் எல்லாம்,  கண்ணை துடைத்துக் கொண்டு  புத்தகத்தை அடுக்கத் தொடங்கிவிட்டனர். 

அடுத்த இரண்டு வாரங்கள் சென்னை ராயப்பட்டை விழா கோலம் பூண போகிறது.  ரொம்ப வருஷத்திற்கு பிறகு சென்னை மவுண்ட் ரோடு பக்கம் சென்னை புத்தகக் காட்சி நடைபெறுவது குறிபிடத்தக்கது. 









3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனம் மகிழ்கிறது ஐயா
ஒரு முறையேனும் சென்னைப் புத்தகக் கண்காட்சியைக் காணவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது ஐயா
நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

அருமையான செய்தி தோழர் :)

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தகவலுக்கு நன்றி ஐயா! ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டாம் போலிருக்கிறது!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...