![]() |
தர்மேந்திர பிரதான் |
முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிருந்து
ருந்து கோத்தபய ராஜபக்சே. அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கிறார் ஒன்றிய கல்வியமைச்சர் பாஜகவின் தர்மேந்திர பிரதான் ?
புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் திட்டத்தையும் முன்னிலைப்படுத்தும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு ஏற்காவிட்டால், தமிழகத்துக்குத் தரவேண்டிய 2,152 கோடி கல்விக்கான நிதியை
கொடுக்க முடியாது என்று காட்டமாக கூறினார். தர்மேந்திர பிரதான்.
இவரது ஆணவப் பேச்சு, தமிழக மக்களிடையே கோபத்தைக் கிளறியிருக்கிறது.
தமிழகத்திலிருந்து பிரதானுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. கடந்தவாரம் சென்னையில் நடக்க இருந்த கூட்டத்திற்கு வரவிருந்த தர்மேந்திர பிரதான், நிலமை சூடாக இருப்பதை உணர்ந்து கடைசி நேரத்தில் தமிழகத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில்... இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக மக்களை மீண்டும் சீண்டியுள்ளார் தர்மேந்திர பிரதான். புதியக் கல்வி கொள்கைக்கு எதிராக முழக்கமிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து... "நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள்" என்றிருக்கிறார். இவரது பேச்சு மீண்டும் தமிழகத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
தர்மேந்திர பிரதானின் இந்த மிரட்டல் பேச்சுக்கு, தமிழக முதல்வர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள்
மத்திய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக.
தர்மேந்திர பிரதானின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக இவர் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக பேசிவருகிறார்.
"அரண்மனை நாயே, அடுக்கடா வாயை"
என்று மந்திரிகுமாரியில் கலைஞர் எழுதிய வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது.
தமிழை, தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசி...
தமிழர்களின் பொது எதிரியாக மாறி வருகிறாரா தர்மேந்திர பிரதான் ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக