ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

'தமிழனின் ரத்தம் வஞ்சம் தீர்க்கும்'

ஈழத்தில் தமிழன் படும் அவதி உலகில், சக தமிழன் பார்க்காதது. 'கல் தோன்றி மண் தோன்றா மூத்த மொழி தமிழ்' என்று கூறிவந்த நம் இனி என்ன பெருமை பேசி நம் இனத்தை வாழ வைக்கப்போகிறோம்?

இலங்கையை பூர்விக குடிகளாகக் கொண்ட இலங்கை தமிழர்கள், சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாக கொண்டு இலங்கையை ஒரு சொர்க்க பூமியாகப் படைத்தவர்கள். அப்படிப் பட்ட செல்வசீமான்கள் இன்று அதரவு இழந்து, சொத்து இழந்து, தனது உறவினர்களை பிரிந்து ரத்தம் சிந்தி இன்று சிங்களப் படைகளின் துப்பாக்கிமுனைகளில் கூனிக் குறுகி நிற்கின்றனர்.

ஏன் இந்த நிலை? இத்தனை ஆண்டுகாலமாக தொடர்ந்த போர் இன்று இறுதி நிலை வர யார் காரணம்?

ஒரே பதில் "இந்தியா"

சிங்கள போர் வெறியர்கள், தமிழர்களை வெறி கொண்டு தாக்க, பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்? புறமுதுகிட்டு ஓடிய சிங்கள இராணுவம் இன்று முன்னேறுவது எப்படி. இந்தியா என்ற ஒரு வல் ஆதிக்க சக்தி இந்த போரை புலிகளுக்கு எதிராக நடத்துகிறது என்பது தான் உண்மை.

இந்தியாவின் பரி பூரண அதரவு இருப்பதால், அமெரிக்க முதற் கொண்டு பல்வேறு உலக நாடுகள் வாய் திறக்க மறுக்கிறது. ராசிவ் காந்தியின் மரணத்திற்கு பழி வாங்கும் சோனியா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகு முறைக்கு நாம் நிட்சயம் நல்ல பதில் அடி கொடுக்கவேண்டு. ராஜிவின் மரணத்திற்கு பழி வங்கவேண்டு என்று எம் இனத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இந்திர காந்தியின் மரணத்திர்க்காக சீக்கியர்களை அழித்துவிடுவீர்களா?

இலங்கை தமிழனை கொள்ள தமிழ் நாட்டில் உள்ள விமான படைத் தளங்களை இந்திய அரசு பயன் படுத்துகிறது என்பதை நாம் அறிவோமா...? விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை இந்தியஅரசு, தமிழ் நாட்டின் கடற் கரையில் நின்று வேவூ பார்க்கிறது என்பதை நாம் அறிவோமா...? இவை எல்லாம் இங்கு உள்ள எல்லா அரசியல் நாய் களுக்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா ?

வோட்டுக்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கும் இந்த நாய்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டி அடியுங்கள். அது இன் நாளாக இருந்தாலும் சரி முன் நாளாக இருந்தாலும் சரி....

தமிழன் ஏமாளி அல்ல என்பதை வரும் தேர்தலில் நாம் உணர்த்தவேண்டும்.

தமிழ்நாட்டிலும் உலகிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் மனம் புழுங்கி, நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நித்தம் நித்தம் மனத் துயரில் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.

ஏய் ....உலகமே... இந்தியாவே....

எம் மக்கள் சிந்தும் ரத்தத்திற்கு ஒரு நாள் நீ பதில் சொல்லத்தான் வேண்டும்.

தமிழனின் ரத்தம் இந்தியாவை வஞ்சம் தீர்க்கும்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...