திங்கள், ஏப்ரல் 27, 2009

'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை'

நகைப்புக்கிடமான இந்த உண்ணாவிரதம் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளது.

திங்கள் காலை ஆபீஸ் வந்தவனுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை, டிவியில் உண்ணாவிரத அரங்கேற்றம் நாடகமாக நடந்துக் கொண்டு இருந்தது. அரசியலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்த அரசியல் வாதிகள்.
இந்த தேர்தலில் காங்கிரசை கழட்டிவிட்டு ப ம க, வீ.சி , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தாலே தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை கலைஞர் பெற்றுஇருப்பர். அதை விட்டு இப்படி நாடகம் அடுவது நல்ல மனிதனுக்கு அழகல்ல.

ஒருபக்கம் தமிழ் ஈழம் அமைத்தே தீருவோம் என்கிறார் ஜெயலலிதா. இத்தனை நாள் எங்கு இருந்தார் இந்த அம்மையார். இந்த அரசியல் வாதிகள் விளையாட இலங்கை தமிழனின் உயிர் தான் கிடைத்ததா...?

அயிந்து மணி நேர உன்ன விரததாலே இலங்கை போரை கருணாநிதி முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் என்றால் இதை முன்பே செய்து இருக்கலாமே... அமெரிக்கா சொல்லியே கேட்காத இலங்கை அரசு கருணாநிதி சொல்லியா கேட்க போகிறது. இல்லை இலங்கை போரை சோனியா தலைமை ஏற்று நடத்துகிறாரா...?

இலங்கையின் போர் நிறுத்தம் 'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை' ஆகிவிட்டது. எப்படியோ எம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...