ஞாயிறு, டிசம்பர் 27, 2009

"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"


பொதுவாக நான் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட திரைப்படங்களையே பார்க்கும் வழக்கமுள்ளவன். வருடத்திற்கு 4 அல்லது 5 படம் பார்த்தாலே பெரிய விஷயம். அப்படி சமிபத்தில் பார்த்த படம்

'அவதார்'. (சென்னை சத்தியத்தில் டிக்கெட் வாங்கியது தனி கதை)


300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பே,ரோலண்ட் எம்ரிச் வரிசையில் டைட்டானிக்,ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கிய கனடியன் இயக்குநரான ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட படமே இந்த 'அவதார். 'இப்படத்தில் முப்பரிமாண தோற்றத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைக் கவரும் நோக்குடன் எடுக்கப்பட்டிருப்பதுடன் படத்தின் கதையும் மிகுந்த சுவாரசியமாக இருப்பது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.

22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். ஸ்பான்சர்கள் மூலமாக (அங்கேயுமா?) படைபலத்துடன் பண்டோரா கிரகத்திற்கு செல்கிறார்கள்.
ஆனால் அங்கு வாழும் நவி எனும் மனித இனத்திலிருந்து திரிபு பட்ட ஆனால் புத்திசாலித்தனமும் நீண்ட வாலும் மிகுந்த போர்த்திறனும் மிக்க நீல நிற மனிதர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது. நவிக்கள் 10 அடி உயரம் உடையவர்கள். கதையின் நாயகனாக வரும் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து(?) பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. ஆனால் பண்டோரா கிரகத்தில் மனிதனால் சுவாசிக்க முடியாது என்பதால் அந்தக் கிரகத்துக்குப் போக நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும்.

அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல நிற மனிதர்கள் தான் அவதார் என அழைக்கப் படுபவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக (மறு முனையில் அவர் தூக்கத்தில் இருப்பார் !?) பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இதனால் ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் கதைக் கருவாகும்.

உண்மையில் இதுவும் ஒரு விடுதலை போரட்ட படம்தான். பூமியில் மனிதன் பிறறது இடங்களை ஆக்கிரமித்தது போக... இப்பொது வெளி கிரகத்தையும் ஆக்ரமிக்கும் காலம் வந்து விட்டதையே இந்த அவதார் படம் உணர்த்துகிறது.

இலங்கையின் பூர்வீக குடிகளான ஈழத் தமிழர்களை, எப்படி வந்தேறிகளான சிங்களவன் வளைத்து பிடித்து கொன்று வருகின்றானோ அதைப் போலவே, பூமியிலிருந்து சென்ற மனிதர்களும் அங்குள்ள பூர்வீக குடிகளான நவிகளை ஆக்கிரமித்து அவர்களின் வளங்களை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அனால், மனித இனத்திலிருந்து நவியாக மாறிய கதாநாயகன், அந்த நவி இனத்தையே காப்பாற்றுகிறான்.

அது! ஒரு பெறும் விடுதலைப் போராட்டம்.

மனிதர்கள் தாங்கள் கண்டுப்பிடித்த மனித அழிப்பு ஆயுதங்களைக் கொண்டு நவிக்களை அழிக்கிறார்கள். அவர்களின் குடியிருப்புகளைச் சின்னா பின்னமாக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் தூக்கிக் கொண்டு நவிக்கள் இடம் பெயருகிறார்கள். துன்பத்தின் வாசலில் அவர்கள் தோரணம் கட்டி துயரம் சுமந்த போது... ஈழத் தமிழா உன் ஞாபகம் தான் எனக்கு வந்தது.

சிங்களவனும் அப்படித்தானே செய்தான். சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தாங்களிடம் பெற்ற ஆயுதங்களை ஈழத்தமிழர்களை எதிராகத்தானே பயன்படுத்தினான். உறவுகளை அழித்து மிஞ்சிஉள்ளவர்களை முள்வேலியில் தானே அடைத்து வைத்திருக்கிறான்.

உணர்வால் மனிதனாக இருந்துக் கொண்டு உருவத்தால் நவியாக மாறிய கதாநாயகன், அவர்களுக்காக போராடுகிறான் என்றால், ஒரு இனத்தின் விடுதலை என்பது எத்தனை தியாகம் வாய்ந்தது, எத்தனை வீரம் மிக்கது என்பதை இந்த உலகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

கதாநாயகன் -ஜேக் தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டன் என்று தெரிந்த ஆக்கிரமிப்புகாரர்கள் ஜேக்கைக் கொல்ல படையொடு வருகின்றனர். போர் உக்கிரம் அடைந்து வரும் வேளையில், சுந்திரப் போரை தொடர்ந்து நடத்த ஜோக் ஒர் ஒப்பற்ற தியாகம் செய்கிறான். மனித உடலிலிரிந்து நவியாக மாறுகிறான். இனி என்ன செய்தாலும் ஜோக்கால் மனிதனாக மாறமுடியாது. அப்படி இருந்தும் அந்த தியாகத்தை ஜோக் செய்கிறான்.

சுதந்திரப் போராட்டம் என்பது எத்தகைய சக்தி வாய்ந்தது!. அதற்கு இடம், இனம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும்.

அந்த-அந்த இனத்தில் இருந்து வந்தவன் தான் அந்த இனத்திற்காக போராட வேண்டும் என்பது இல்லை. சக மனித இனத்தின் துயரை துடைக்க, அவன் எங்கிருந்து வேண்டுமானலும் வரலாம். எங்கிருந்து வேண்டுமானலும் குரல் கொடுக்கலாம். உலகம் சுருங்கி விட்ட வேளையில் உங்கள் ஆதரவு ஈழத்தமிழன் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்













ஓ... உலக மக்களே! இனியாவது ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும். யாம் இழந்த குருதிக்கு நீதி கிடைக்கட்டும்.

நீதி வெள்ளட்டும்.

தமிழ் ஈழம் மலரட்டும்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Well said..My heart also feels the same..after watching the movie

TamilRadios சொன்னது…

John Rambo என்ற திரைப்படமும் ஈழ காட்சிகளை தான் தோற்றுவிக்கும்

பெயரில்லா சொன்னது…

நண்பர் மாபாவிற்கு,
அவதார் கட்டுரை படித்தேன்..மிக அருமையான உருவாக்கம்..
அடிமனதில் உள்ள சிந்தனைகளின் வீழ்படிவை வெளிபடுத்துகிறது. தொடர வாழ்த்துகள்..

அன்புடன்

ச.மகேஷ்

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...