கடிதங்களின் பிணங்கள் !
மிக நீண்டதொரு
இரவு
அதன்
வெளிச்சங்கள்
இருட்டினுல் அமிழ்ந்து
அழுகையை வெளியிட்டன...
இரவின் யாருமற்ற
தெருவெளியில்
குப்பைத் தொட்டிக்கருகில்
அழுகிய பிணங்களாய்
கடிதங்கள் இறைந்து கிடக்கின்றன.
தனிமையின்
இருக்கத்தின்...
சுவர்களெங்கும்
இரத்தச் சிதறல்கள்
எழுத்துகளாய்
சிதறியிருக்கின்றன
காடா விளக்கின்
வெளிச்சத்தில்-இம்முறை
அவன் வெளியே
நின்றிருந்தான்
அவன்
வருவதற்குள்...
கைமணிக்கட்டின்
வழிவந்த குருதி...
இம்முறை
அவன் கால்களை
நனைக்கும்,
காற்றின் அலைதலில்
பிணவாடை
இன்று அதிகம்தான்.
-தோழன் மபா
வெள்ளி, பிப்ரவரி 05, 2010
கடிதங்களின் பிணங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???
தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....?? தர்மேந்திர பிரதான் முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிர...

3 கருத்துகள்:
arumaiyaana karuththu. vaalththukkal .
நன்றி சரவணன்,
வந்ததற்கும் வாழ்த்து சொன்னதற்கும்.
Superb sir.. :)
கருத்துரையிடுக