வெள்ளி, பிப்ரவரி 05, 2010

கடிதங்களின் பிணங்கள்!



  • கடிதங்களின் பிணங்கள் !

    மிக நீண்டதொரு
    இரவு

    அதன்
    வெளிச்சங்கள்
    இருட்டினுல் அமிழ்ந்து
    அழுகையை வெளியிட்டன...

    இரவின் யாருமற்ற
    தெருவெளியில்
    குப்பைத் தொட்டிக்கருகில்
    அழுகிய பிணங்களாய்
    கடிதங்கள் இறைந்து கிடக்கின்றன.

    தனிமையின்
    இருக்கத்தின்...
    சுவர்களெங்கும்
    இரத்தச் சிதறல்கள்
    எழுத்துகளாய்
    சிதறியிருக்கின்றன

    காடா விளக்கின்
    வெளிச்சத்தில்-இம்முறை
    அவன் வெளியே
    நின்றிருந்தான்

    அவன்
    வருவதற்குள்...

    கைமணிக்கட்டின்
    வழிவந்த குருதி...

    இம்முறை
    அவன் கால்களை
    நனைக்கும்,

    காற்றின் அலைதலில்
    பிணவாடை
    இன்று அதிகம்தான்.

    -தோழன் மபா

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

arumaiyaana karuththu. vaalththukkal .

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி சரவணன்,
வந்ததற்கும் வாழ்த்து சொன்னதற்கும்.

சிவாஜி சங்கர் சொன்னது…

Superb sir.. :)

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...