செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை சுற்றுலாத்தளமாக மாற்ற இலங்கை அரசு முயற்சி!?

                                                                                              தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வசிப்பிடத்தை விரைவில் சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு எடுத்துவருகிறது.   


தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு
 

  முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு சந்திப்பிலிருந்து  ஒட்டுசுட்டான் செல்லும் வழியில் முக்கிய வீதியில் இருந்து சுமார் 4கிலோ மீட்டர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது இந்த வீடு. அடர்ந்த காட்டுப் பகுதியில் மிகுந்த பாதுகாப்பு அரண்களோடு அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.  வெளியில் இருந்து பார்ர்க்கும் போது ஒரு விவசாயின் வீடு போல் காட்சி அளிக்கும் அந்த வீடு, எளிதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் ஏற்படாதவன்னம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீட்டிற்கு அண்மைக்காலமாக அதிகளவில் தென்னிலங்கை சிங்கள மக்கள் வந்து செல்கின்றனர். பெருமளவில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கூட வந்து செல்கின்றனர். அவர்கள் வீட்டின் காட்டுமான அமைப்பைப் பார்த்து வியந்து போகின்றனர். அந்தளவிற்கு உயர் மட்ட பாதுகாப்போடு அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.  

முன்புறத்தில் பாதுகாப்பு அரண்


வெளியில் சாதாரண வீடுபோன்று தோற்றமளிக்கும் இந்த வீடு எத்தகைய தாக்குதலுக்கும் சிதைவுறாத வகையில் உள்ளே பாதுகாப்பான ஆழமான பதுங்குகுழிகளைக் கொண்டுள்ளது.
சுற்றிப்பார்க்கும் சிங்கள இரானுவத்தினர்




பதுங்கு குழி



இரும்பிலான ஏணிப்படி


கதவில் சிங்கள எழுத்து


மேலும் ஒவ்வொரு பதுங்குகுழிப் பாதைக்கும் கனமான இரும்புக் கதவுகள் போடப்பட்டுள்ளது. பதுங்கு குழியிலிருந்து மேலே ஏறிவர உறுதியான இரும்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்போடு இருக்கும் இந்த வீட்டில் நிச்சயம் தலைவர் தங்கியிருப்பார் என்று இலங்கை அரசு நம்புகிறது.   அதனாலேயே இந்த வீட்டை சுற்றுலாத்தளமாக மாற்றி காசு பார்க்க நினைக்கிறது சிங்கள அரசு.

ஆனால் இங்கு பிரபாகரன்தான் தங்கினார் என்பதற்கான எந்த ஆதாரமும் இது வரை இலங்கை அரசுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படையினர் காவலிருக்கும் இடத்தை பார்வையிடும் இலங்கை போலீஸ்




2 கருத்துகள்:

RaThi Mullai சொன்னது…

ஹ்ம்ம்ம்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

ரதி முல்லை; ஏன் இந்த சலிப்பு?

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...