வியாழன், நவம்பர் 10, 2011

பப்பாசி புதிய நிர்வாகிகள் தேர்வு.




பப்பாசி புதிய நிர்வாகிகள்



தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியப் பதிப்பாளர்கள் சங்கமும், கடந்த
37  ஆண்டுகளுக்கும் மேலாக 'சென்னை புத்தகக் காட்சியை' வெற்றிகரமாக நடத்திவரும் சங்கமுமான 'தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள்
 மற்றும் பதிப்பாளர்கள் (BAPASI ) சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் சென்னையில் நேற்று (புதன் அன்று) நடைபெற்றது.

இதில் பபாசியின் தலைவராக ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  துணைத்  தலைவர்களாக  ராமலட்சுமணன் (உமா பதிப்பகம்) மற்றும் எம். சுப்பிரமணியன்  (டைகர் புக்ஸ்),   செயலாளராக எஸ்.வைரவன் (குமரன் பதிப்பகம்),
 துணை செயலாளர் ஏ.ஆர்.சிவராமன் (ஜெய்கோ), பொருளாளராக ஏ.ஆர். வெங்கடாசலம் (அறிவாலயம்).

செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ்)....

க.நாகராஜன் (பாரதி புத்தகலாயம்), எஸ்.கே. முருகன் (நாதம் கீதம்), பி.மயிலவேலன் (வனிதா பதிப்பகம்), எஸ். சுரேஷ் குமார் ( நக்கீரன் பதிப்பகம்),.

ஆங்கிலத்திற்கு....

எஸ்.பி.அசோக்குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்), டி.எஸ்.ஸ்ரீநிவாசன் (கிரி ட்ரேடிங்), ஆர்.மாசிலாமணி (ராம்கா புக்ஸ்), எம். சாதிக் பாட்ஷா (பார்வேர்ட் மார்க்கெட்டிங் ஏஜென்சி).

நிரந்தர புத்தகக்காட்சி குழுவிற்கு....

குழ.கதிரேசன் (ஐந்திணை பதிப்பகம்), எஸ்.டி.மெய்யப்பன் (மதிநிலையம்), எஸ்.தீபக் குமார் (ராஜலெட்சுமி பதிப்பகம்), நந்த கிஷோர் (டெக்னோ புக் ஹவுஸ்) 
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   

     

கவிதா பதிப்பகத்தின் தலைவரும் கணையாழியின் வெளியீட்டாளருமான சேது.சொக்கலிங்கம் முந்தைய பப்பாசி தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...