சனி, மார்ச் 02, 2013

இது சேவலை கோழியாக்கிய கதை!!!



அண்ணாச்சி சொன்ன  கொக்கரக்கோ கதை !
                        
வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார், மற்ற  தொழில் அதிபர்களில் வித்தியாசமானவர். மிக எளிதாக சந்திக்கக் கூடிய மிக எளிமையான மனிதர்.  அவரது அறையில் அவர் இருந்தால் எப்போதும் சிரிப்பு சத்தம்தான் கேட்டுக் கொண்டு இருக்கும்.  அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு சுவரை ஏற்படுத்திக் கொள்ளாத மனிதர். டிவி, மாத பத்திரிகை, தொழில் அதிபர், அரசியல் வாதி என்று பன்முகத் திறன் படைத்தவர்.         



அன்னாச்சியோடு எனக்கு 15 வருடங்களுக்கு மேல் பழக்கம். என்னை  "என்ன  தாடி?" என்றுதான் கூப்பிடுவார்.  சென்ற வியாழன் அன்று அவரை சந்திந்தப்போது  டேபிளில் இருந்த ஒரு கண்ணாடியிலான சேவல்  பொம்மையைக் காட்டி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

****

               னது அரசவையில் இருந்த பீர்பாலை எல்லோரும் அறிவாளி என்று சொல்வதை மன்னர் அக்பர் விரும்பவில்லை.   பீர்பாலை எப்படியாவது மட்டம்தட்ட  நினைத்தார் அக்பர்.   மன்னரை  சூழ்ந்த இருந்த மந்திரிகளும் அதற்கு  தூபம் போட்டனர். 

எல்லோரும் சேர்ந்து பீர்பலை  முட்டாளாக்க ஒரு திட்டம் தீட்டினர்.    தனது அமைச்சரவையில் இருந்த முக்கியமான மந்திரிமார்களை  அழைத்த அக்பர்  எல்லோர் கையிலும் ஒரு முட்டையை தந்து "இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.  நாளை நாம்  எல்லொரும் தோட்டத்தில் கிணற்றடியில் கூடுவோம்.  அப்படியே பீர்பாலையும் அங்கே அழைத்து வாருங்கள்" என்றார்.

அடுத்த நாள்  காலை எல்லோரும் தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் ஆஜரானார்கள்.  பீர்பாலும் வந்த சேர்ந்தார். மன்னர் முட்டையை ஒளித்து  வைத்திருந்த மந்திரிகளை அழைத்து, "கிணற்றில் குதித்து முட்டை எடுத்து வாருங்கள் " என்றார்.  அவர்களும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்து முட்டையோடு மேலே வந்தனர்.  

பீர்பாலுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் வெறும் கையேடு குதித்து முட்டையை எடுத்து வருகிறார்களே என்று  குழம்பி போனார். கடைசியாக பீர்பாலின் முறையும் வந்தது.  பீர்பாலை அழைத்த மன்னர்,  "நீங்களும் கிணற்றில் குதித்து முட்டை எடுத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

"கிணற்றில் குதித்த பீர்பால் மேலே வந்து என்ன சொல்லி தப்பித்து இருப்பார்...?"  என்றார் வசந்த் அண்ணாச்சி.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.....

அண்ணாச்சி  "கொக்கரக்கோ..."  என்றார்.

நான் விழிக்க.... சேவல் பொம்மையை உருட்டியபடியே என் பதிலுக்காக காத்திருந்தார்.

சற்றென்று பொறி தட்ட  "அண்ணாச்சி....  'நான் சேவல் கோழி  அதனால் முட்டை போட முடியாது' என்று கூறி இருப்பார் " என்றேன்.

"கரைட்யா.... பீர்பால் கொக்கரக்கோ கொக்கரக்கோன்னு கூவிகிட்டே கிணற்றில் இருந்து மேலே ஏறினார்" என்றார். 

"மன்னா.... நான் சேவல்.  அவுங்க எல்லாம் பொட்டை கோழிங்க. அதனாலதான் முட்டை போட்டாங்க என்னால முட்டை போடா முடியல! என்று மந்திரிகளை சுற்றி கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவிகொண்டே ஓடினார் பீர்பால்.

ஆண்கள் என்ற சேவலை கோழியாக்கிய கதை தானே இது. 

பீர்பாலின் சமயோசித அறிவைக் கண்டு மீண்டும்  மிரண்டு போன மன்னர் அக்பர், அவருக்கு பரிசுகளை அளித்து கொளரவித்தார். பீர்பாலின் சமயோசித அறிவு அத்தகையது என்றார்.  


"எனது வாழ்விலும் அத்தகைய  சமயோசித நிகழ்ச்சி ஒன்று நடந்தது அண்ணாச்சி..."  என்றேன்.

அது....?!

அடுத்தப் பதிவில்.


1 கருத்து:

சென்னை பித்தன் சொன்னது…

என்ன சொல்லுங்க!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...