திங்கள், ஜனவரி 05, 2009

சயாம் மரண ரயில்

காலம்தோறும் உலகம் பல்வேறு நிகழ்வுகளை எதிர் கொண்டு வந்துள்ளது; எதிர் கொண்டு வருகின்றது. பல நிகழ்வுகள் ஆதிக்கத்திற்கும் இன்னும் பல நிகழ்வுகள் அழிவிற்கும் வழி வகுப்பனவாக உள்ளன. அந்த வகையில் சமிபத்தில் என்கையில் தொலைந்து போனவர்களின் எழுத படாத வரலாறு கிடைத்தது. வாசிக்க வாசிக்க அதன் துயரம் இன்னும் என் இருதயத்தை இரு கரம் கொண்டு பிசைகிறது.

அது ! திரு சண்முகம் எழுதிய
"சயாம் மரண ரயில்"
தமிழோசை பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியிடு.
டிசம்பர் 2007 -இல் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது.
விலை Rs.150/-
304 பக்கங்களில் எடை குறைவாக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.
முகவரி,
1050, சக்தி சாலை, காந்திபுரம் , கோவை -641 012.

சரி இனி வரலாற்றை பார்ப்போம்....

வரலாற்று அடிப்படையில் தென்கிழக்காசிய மக்கள் எதிர் நோக்கிய மிக துயரமான நிகழ்வுகளுள் 'சயாம் - பர்மா இருப்புப் பாதை'முக்கியமானதாகும். இன் நிகழ்வினை தமிழர்கள் ' சயாம் மரண ரயில் பாதை ' என்கின்றனர். இதில் மரண ரயில் என்ற சொல் மிக பொருள் பொதிந்ததாகும். இந்த இருப்புப் பாதை போடுவதற்காக எண்ணிலடங்கா உயிர்கள் பலி கொடுக்கப் பட்டுள்ளது.

சயாம் மரண ரயில் பற்றி அறிய வேண்டும் என்றால், நீங்கள் இரண்டாம் உலகப் போர் காலத்திற்கு செல்லவேண்டு.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி,இத்தாலி, ஜப்பான் போன்ற பாசிச நாடுகள் ஓர் அணியில் இருந்தன. அதில் சிங்கப்பூர்,தாய்லாந்து, மலேசியா, பர்மா போன்ற நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது ஜப்பான். ஜப்பானின் அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலம் கொண்டு வருவது சிரமம். அத்துடன் நீண்ட காலம் பிடிக்கும். எனவே கடல் வழியாகக் கொண்டு வருவதை விட தரை வழிய அவற்றை கொண்டு வர எண்ணியது ஜப்பான் முடியாட்சி இராணுவம்.

எனவே சயாமி (தாய்லாந்து) லிருந்து பர்மா வரை இருப்புப் பாதை மூலம் அத்திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டது. ரயில் பாதை அடர்ந்த காடுகளிலும், சீறிப்பாயும் காட்டாறு களையும் கடந்து பாதை அமைக்கப்பட்டது. இதில் 16000 ஆயிரம் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய போர்க்கைதிகள் பயன்படுத்தப் பட்டனர்.

ரயில் பாதை அமைக்க அவர்கள் மட்டும் போதுமா? இளிச்சவாய் சுமுதயம் எதுவும் கிடைக்க வில்லையா? கிடைத்தார்கள்; அவர்கள் தமிழர்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலைசெய்ய மலேய கொண்டு செல்லப்பட்டுஇருந்தனர். இவர்களை அங்கு உள்ள கங்காணிகள் மூலம் ஏமாற்றி ரயில் பாதை அமைக்க இழுத்து சென்றனர். அதோடு தெருவில் நடுந்து சென்றவர்கள், பூங்காவில் அமர்ந்து இருந்தவர்கள், திருமணத் திற்கு வந்திருந்தவர்கள், தொழுகை முடிந்து தெருவில் நடந்தவர்கள், அழுத குழந்தைக்கு மிட்டாய் வாங்க கடையில் நின்ற தந்தை என்று ஜப்பான் இராணுவம் கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் பிடித்து சயாமுக்கு கொண்டுசென்றனர். தப்பியவர்களை அங்கேயே சுட்டுக் கொன்றது கொடிய வெறிப் பிடித்த ஜப்பான் இராணுவம்.



புத்தகம் முழுவது மரண ஓலங்கள் தான். இந்த வரலாறு முழுவதும் ஒரு கதை போல் சொல்லப்படுகிறது. கூடவே மனதிற்கு சற்றே இதமாஒரு காதல் கதையும் உண்டு.

வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போதுதான், புரிகிறது தமிழன் எப்படிப்பட்ட அறிவிலியாக இருகிறான் என்று! தனக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போன என்ன. என்ற மனோ நிலைதான் பெருவாரியான தமிழனின் நிலையாக இருக்கிறது. அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். கேட்டால் "நமக்கு எதுக்கு தம்பி வம்பு" என்கிறான்.



சயாம் மரண ரயில் பற்றி இணையத்தளத்தில் தேடினால் ஒரு இடத்தில் கூட தமிழர்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என்ற தகவல் இல்லை. மாறாக ஒரு பட்டியல் கண்ணில் படுகிறது. அது இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் இறந்தவர்களின் பட்டியல். அதில் பிரிடிஷ்காரர்கள், ஆஸ்திரேலியர்கள், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.



இதில் ஈடுப்படுதப் பட்டு, உயிர் துறந்த லட்சக்கணக்கான தமிழர்கள் பற்றி ஒரு இணைய தளத்திலும் தகவல் இல்லை. இப்படி வரலாற்றிலும் வஞ்சிக்கப்பட்ட இனம் இது. வரலாறு தானாகவே தங்களை பற்றி எழுதிக்கொள்ளும் என்று எண்ணிய அப்பாவிகள்.



இதற்கு நிகழ்கால உதாரணம் இலங்கை. ஆதிகுடிகள் தமிழர்கள் என்பது உலகு அறிந்த ஒன்று. ஆனால் இன்றைய சிங்கள அரசு "மகா வம்சம்" என்ற நூலை எழுதி சிங்களர்கள் தான் இலங்கையின் பூர்விக குடிகள் என்று உலகை நம்ப வைக்கப் பார்கிறது.

இனியாவது தமிழனின் தியாகத்தை உலகம் உணரட்டும். மலேஷியா,இலங்கை, சிங்கப்பூர் மொரிஷியஸ் போன்ற காடுகள் மண்டிய தீவை, மக்கள் வாழ வழி செய்து காடு திருத்தி கழனி ஏற்படுத்தியவன் தமிழன் என்பதை நமது பாட்டன் பூட்டன் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

இப்ப உள்ள இந்த பிலகா பசங்க தெரிஞ்சிகிட்டும்.

அந்த வகையில் "சயாம் மரண ரயில்" தமிழர்களின் துயரத்தை உலகிற்கு உணர்த்திய உயர்வான நூல். பாசிச ஜப்பானின் பிடியில் சிக்கித் தங்களது உயிரை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சோக வரலாறு.
-தோழன் மபா




1 கருத்து:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

Added this post at tamilish.com
link: http://www.tamilish.com/TamilnaduNews/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...