ஞாயிறு, ஜனவரி 18, 2009

இனியும் தினமலரைப் படிக்கத்தான் வேண்டுமா?

"இருப்பது தமிழ் நாடு, தின்பது தமிழன் சோறு "ஆனால் எழுதுவது தமிழனுக்கு எதிராக.

தொடர்ந்து தமிழுக்கும், தமிழ் இன உணவுர்க்கும் எதிராக செய்திகளை வெளியிட்டு வருகிறது தினமலர் நாளிதழ்.

பக்கம் முழுவதும் விளம்பரங்களை அடிக்கி வாசகர்களின் முதல் பக்கத்தை திருடும் தினமலர் நாளிதழ், தமிழ் உணர்வாளர்களை கேலி செய்வது கண்டனத்திற்கு உரியது.

ஷாக், திமிர், அடங்கு, பொறு, பகீர், களி இவையெல்லாம் தினமலர் நாளிதழின் தலைப்புச்செய்திகள். மனநலம் பாதித்த இவர்கள் தமிழ் மொழியை, தொடர்ந்து கேவலப்படித்தி வருகின்றனர். இவர்கள் பாட்டன் வீட்டு மொழியா தமிழ் ? இந்த கழுதைகளுக்கு புரியுமா தமிழின் கற்பூர வாசனை?

கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஈழ விடுதலை புலிகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவருகிறது தினமலர். இலங்கை அரசின் கைக்கூலி கருணாவின் துணைக்கொண்டு கட்டுரைகளை எழுதிவருகிறது. என்னமோ இலங்கை அரசு தமிழர்கள்மேல் ராணுவத்தை ஏவ வில்லை என்பதுபோலும், விடுதலை புலிகள் தான் இலங்கை அரசின் மீது போர்த் தொடுக்கிறார்கள் என்பதுபோல் செய்திகளை பரப்பி வருகிறது தினமலர்.

கருணாவின் தூதுவர்கள், இலங்கை அரசின் நிதி உதவியோடு அந்தச் செய்திகளை வெளியீட முன்னணி நாளிதழ்களை தொடர்புக் கொண்டார்கள். ஆனால் எந்த பத்திரிகையும் செய்தியை வெளியீட மறுத்துவிட்டனர். ஆனால் தினமலர் நாளிதழ் மட்டுமே வெளியிட்டு தான் யார் என்பதை நிருபித்துள்ளது.

இலங்கை அரசின் நிதி உதவியோடுதான் தற்போது தினமலர் நடத்தப்படுகிறது என்ற சந்தேகம் நமக்குள் பலமாக எழுகிறது.


ஒரு மூன்றாம் தர பத்திரிகையாக தன்னை மாற்றி வரும் தினமலர், தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான செய்திகளை நாள் தோறும் வெளியீட்டு வருகிறது. இலங்கை அரசு மேற்கொண்டுஇருக்கும் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் உண்ணா நோன்பை, கிண்டலடித்து முதல் பக்கத்தில் எழுதுகிறார்கள். எப்படி? ' பொறு' 'இனி களிதான்' இதுதான் ஒரு தேசிய நாடு நிலை நாளேட்டின் (அப்படித் தங்களை கூறிக்கொள்ளும்) தலைப்புச் செய்தி.

பெரிய பெரிய அனுபவஸ்தர்கள் வாழ்ந்த தமிழ் பத்திரிக்கை உலகில் இப்படியும் சில கிறுக்கர்கள்.

ஒருவனைப் பற்றி பக்கம் பக்கமாக அவதூறு செய்திகளை எழுதிவிட்டு, அவர்களிடமே முழுப்பக்கம் விளம்பரம் வாங்கும் மோசடி ஆசாமிகள் தானே இவர்கள்.

'Real Journalism' என்பது இவர்கள் செய்தியில் இருக்காது. எந்த ஒரு செய்திக்கு பின்னும், அவர்களின் தனிப்பட்ட நலன் இருக்கும். சமுதாய நலன் என்பது துளியும் கிடையாது.

தினமலரின் கொள்கை என்ன? என்பதை அவர்களின் வாரமலரைப் பார்த்தாலே புரியும். எதை கலந்து குடித்தால் போதை வரும், எவன் பொண்டாட்டியோடு படுத்தால் அதிகம் சுகம் கிடைக்கும், இதுதானே இருக்கிறது. துத்...தேறி நாய்கள்.

தமிழனுக்கும், தமிழ் இன உணர்வுக்கும் எதிராக எழுதி வரும் தினமலரை இனியும் படிக்கத்தான் வேண்டுமா?

1 கருத்து:

ORGANIC ASIAN சொன்னது…

நன்றி கெட்டவன் தினமலர்
நல்லவனாக நாடக மாடுவான்
நயவஞ்சகன்
ஆதலால் தமிழரஹலெ
தினமலர் படிக்கவேண்டாம்
தமிழன் யாரோ அவன் நாளிதழ்
படிக்கவேண்டும்
என் அன்பு தமிழா
அன்புடன்
கெளதம்

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...