திங்கள், மே 18, 2009

பிரபாகரன் சாகவில்லை.

திங்கள் மதியத்தில் இருந்தே மனது சரியில்லை. மா வீரன் வேலுபிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்று வந்த செய்திகளை கேட்டு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வந்திருக்கும் இவ் வேலையில் எம் தலைவனின் மரணசெய்தி திட்டமிட்டு பரப்பப் படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார், அப்படி இருக்க இலங்கையின் ஊடகங்களும், உலக ஊடகங்களும் மாவீரன் பிரபாகரன் இறந்து விட்டான் என்று பொய் பிரசாரம் செய்துவருகிறது.

எம் தலைவன் பிரபாகரன் இன்றும் சிங்கள பேரினவாத படைகளை எதிர்த்து தீரத்துடன் போர் புரிந்து வருகிறார் என்பதே உண்மை.

இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர் எனவும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்தார்.


சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர் எனவும் சூசை குற்றம் சாட்டினார்.
இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
"நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். இறுதிவரையில் நாம் அடிபணியப்போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்" எனவும் சூசை குறிப்பிட்டார்.


அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச்சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்" எனவும் சூசை தெரிவித்தார்.
இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர் எனவும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்றொழிப்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேவருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

அறுபது ஆண்டு கால இலங்கையின் போர் வரலாற்றில் புலிகள் பல முறை இத்தகையான முடுவுரும் தறுவாயில் உள்ள போர்களை சந்தித்துள்ளனர். புலி தலைவர் பிரபாகரனும் ஊடங்களால் பல முறை சாகடிக்கப் பட்டுள்ளனர். இதுவும் அத்தகையான ஒரு வீண் முயற்சியே.... யாரும் நம்ப வேண்டாம்.

மாவீரனுக்கு என்றும் மரணமில்லை.....

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...