செவ்வாய், மே 19, 2009

தமிழ் தாய் தனது வீர மகனை இழந்து இருக்கிறாள்

தமிழ் தாய் தனது வீர மகனை இழந்து இருக்கிறாள். செவ்வாய் மதியம் ஆங்கிலசேனல்களில் பிரபாகரனின் உடலை காட்டினார்கள். தலைவன் தப்பிவிடுவான் என்று நினைத்து இருந்த எமக்கு அந்தக் காட்சி இடியென தலையில் இறங்கியது. அய்யகோ ... எம் தலைவன் தானா அது? கண்கள் பணித்து நெஞ்சு அடைத்தது எனக்கு.

தலைவர் பிரபாகரனை ஒரு ஓடைக்கருகில் கிடைத்தி இருந்தார்கள். சயனைடு குப்பி அருந்தி தனது இன் உயிரை தனது மண்ணுக்காக விதையாக விட்டு இருக்கிறன் எம் தலைவன்.

தலையில் காயம் இருக்கிறது. இறந்த பின் அவரை சுட்டு இருப்பார்கள் அந்த கோழைகள். தப்பி ஓடும் போது சுட்டோம் என்று பொய் உரை பரப்பிவருகிறது இலங்கை இராணுவம். எம் தலைவன் இறுதிவரை களப் பணி ஆற்றியவன். போர் வீரர்களோடு தோல் நின்று இலங்கை ராணுவத்தை துவசம் செய்தவன். போர்க்களத்தில் வீர மரணம் அடைந்துள்ளார் மாவீரன் பிரபாகரன்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...