சனி, மே 30, 2009

ஆங்கில செய்தி சேனல்களின் அரைவேக்காட்டுத்தனம்

பொதுவா குமுதத்தில் வரும் அரசு கேள்வி பதில் எனக்கு பிடிக்கும். எஸ்.எ .பி., எழுதும் காலத்திலிருந்தே அரசு பதில் படித்து வருகிறேன். அதில் நடிகையின் இடுப்பும் இருக்கும், தமிழனின் எதிர்காலமும் இருக்கும். நமக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். இதோ சமிபத்தில் வந்த ஒரு கேள்வியும் பதிலும்...

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?
ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.
சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.
இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

நன்றி
குமுதம் & புதினம்.கம

1 கருத்து:

venkat சொன்னது…

தோழர் மபா,

உங்கள் கோபத்திற்கு நன்றி.

'ரௌத்திரம் பழகு' என்று எனக்கு கற்றுதந்த இரண்டாம் வகுப்பு ஆசிரையையும், அன்று நான் வீட்டிற்கு சென்று முன்டாசாய் அணிந்து கொண்ட எங்கள் தாத்தனின் மேல் துண்டும் தான் நினைவில் வந்தது.

'இன்று தணியும் இந்த சுதந்திர தாகம்'!!

- அன்பன் வெங்கட ரமணன்

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...