திங்கள், ஆகஸ்ட் 17, 2009

கக்கூசுல உக்காந்து முக்குனா வரும் !



"விடுங்க பாஸ். இவனுங்க எப்போவுமே இப்படித்தான்" இப்படித்தான் நினைக்த் தோன்றுகிறது இந்திய அரசைப் பார்த்து.



உலகிலேயே தன் நாட்டு மக்கள் அயல் நாட்டில் அடி ,உதை பட்டாலும் இல்லை கொலையுன்டாலும் கவலைப் படாத அரசு இருக்கிறது என்றல், அது ! இந்திய அரசுதான்.


முன்னால் ஜனாதிபதியை அமெரிக்க விமான நிறுவனம் அவமானப் படித்தியப்போது இவர்கள் என்ன செய்தார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்? இவனுங்க சும்மா ஒரு (இந்திய ஆட்சியாளர்கள்) மொக்கப் பசங்க. இவர்கள் கல்லாபெட்டி நிரம்பினால் போதும் என்று நினைக்கூடிய சுயநல கிரிமிகள்.


எம் தமிழ் இனம் ;இலங்கை இனவாத அரசால் கூட்டம் கூட்டமாக, கொன்று குவித்தப்போது, அதற்கு வெண் சாமரம் வீசிய கருங்களிகள் தானே இவர்கள்?


இப்போவெல்லாம், நான் இந்தியன் என்ற வுணர்வே வரமாட்டேன்கிறது. சிலசமயம் கக்கூசுல உக்காந்து முக்கிக்கிட்டு இருப்போம் பாருங்க, அதைப் போலத்தான் இருக்கிறது என்னிடம் 'நான் இந்தியன் என்ற உணர்வு'.


ஈழத் தமிழர்களின் முப்பது வருட கனவு சில நாட்க்களிலே, கலைந்தது பாருங்க, அன்று என்னுள் கரைந்தது நான் இந்தியன் என்ற எண்ணம். 'நீங்கள் கேட்கலாம், இந்தியா பிடிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு போக வேண்டியதுதானே' என்று.


நான் ஏன் போக வேண்டு? இது எனது தாய் பூமி. எனது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த தேசம். அவர்களது ஆன்மா இங்குதான் சுற்றி இருக்கிறது. இப்போதுள்ள ஆட்சியாளர்களின் முடிவால் நான் இந்தியாவை ஆதிரிக்க வேண்டும் என்பதில் அர்த்தமில்லை. ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்கள், நடத்துவதெல்லாம் நல்லதாகி விடாது.



இன்று சாருக் கானை அமெரிக்கன் சுருக்கென்று, குத்தியவுடனே கோபம் கொப்பளிக்கிறது வட இந்திய உடகங்களுக்கு. தமிழன் குடும்பம் , குடும்பமாய் செத்தானே, அப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வரவில்லையா? ஒரு வட இந்தியன் பாதிக்கப் பட்டவுடன் இப்படி கூச்சல் போடுகின்றீர். இல்லை தமிழன் இந்தியனாகத் தெரியவில்லையா? இல்லை தமிழ்



கடலூர் தமிழன் ஒருவன் , ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப் பட்டப் போது, இந்த வட இந்திய ஊடகங்கள் எங்கே சென்று இருந்தார்கள்? மலேசியாவில் தமிழர்கள் அடிப்பட்டபோது, ஏன் வட இந்திய ஊடகங்கள் கண்டுக்கொள்ளவில்லை.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் பட்டத்திற்கு, இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?



இவர்கள் எப்போதும் தனது நட்டு மக்கள் பற்றி கவலைப்பட்டதில்லை, என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.


தங்கள் சொந்த நாட்டு மக்கள் அயல் நாடுகளில் அடி வாங்குவதையும், இந்திய வம்சாவழித் தமிழர்கள் அயல் நாடுகளில் கொன்றுக் கூவிப்பதையும் வேடிக்கைப் பார்க்கும் ஒரே அரசு இந்திய அரசுதான்(?)


இதில் எங்கேயிருந்து வரும் இந்தியன் என்ற எண்ணம்.


வாழ்க இந்திய ஜனநாயகம் !



2 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

தமிழருக்கு தமிழ் அரசியல்வாதிகளே உதவவில்லை ..இந்த லட்சணத்துல ஹிந்தி
காரன் மட்டும் உதவிடுவானா ?


Please Aviod English/Hindi TV Channels.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்... நன்றி...

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...