புதன், ஆகஸ்ட் 19, 2009

ஒரு ஏப்ரல் மாதத்தில்...! (எனது கவிதை)

ஒரு
ஏப்ரல் மாத
பகல் பொழுதில்
அவளை- மீண்டும்
சந்திக்க நேர்ந்தது,


நடந்து முடிந்துவிட்ட
துயரங்களுக்கு-பின்
எதன்
மீதும் நம்பிக்கை
கொள்வதில்லை,


நூலிழையாய்
தொடர்ந்த... அன்பின்
வெளிப்பாடு...


பிரிவின்-பார்
பட்டதும்,


துன்பங்கள்
தோரண
வாயிலாய் மாறின,


நேருக்கு நேர்
பார்த்ததில்...


விழிகளுக்குள்
வெளிச்சம்
பறவினாலும்...


இதயம்
இறந்துவிட்டப்பின்,
விழிகளும்
குருடுதான்,
செல்லும்
வழிகளும்
கரடுதான்.


-19/04/97 இல் நான் எழுதிய கவிதை. நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் அப்பொது காதல் வயப்பட்டு இருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...