புதன், மே 11, 2011

மாற்று சக்தியை ஏமாற்றும் சக்தியாக காட்டிய 'கோ'!



ஒரு மாற்றம் வேண்டும்,  என்று தமிழ மக்கள் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில், தேர்தல் முடிந்து  வந்திருக்கிறது கோ.  முதல்வர்கள் பற்றிய கதை என்பதாலே என்னவோ...  இயக்குனர் கே.வி.ஆனந்த் 'கோ' என்று பெயர்  வைத்திருக்கிறார்.   ' கோ' என்றால் அரசன் அல்லது அரசு என்று பொருள் படும். ஸ்வஸ்திக் சின்னம் வாக்கு முத்திரையை குறிக்கிறது.

அடிப்படையில் பத்திரிகை புகைப்படக் கலைஞரான கே.வி. ஆனந்த், தனக்கு அதிகம் தெரிந்த 'பிரஸ் போட்டாகிராபர்'  கதையையே  களமாக எடுத்திருக்கிறார்.  அதற்கு வசதியாக இன்னாள் முதல்வர், முன்னாள் முதல்வர், வருங்கால முதல்வர் என்று 'பத்தி' பிரித்துக் கொண்டு எட்டு காலத்திற்கு 'கோ'வை  வெளியீட்டு இருக்கிறார்.

படத்தில் நிகழ்கால முதல்வராக  பிரகாஷ் ராஜ் .  நாட்டில் எங்கு பார்த்தாலும் லஞ்சம், கொள்ளை, கொலை என்று நாடே சீரழிந்து கிடக்கும் வேளையில் முதல்வராக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த நேரத்தில்தான் சட்டமன்ற தேர்தல் வருகிறது. 

'சிறகு' என்ற மாணவர் இயக்கம் தோன்றி தேர்தலில் போட்டியிடுகிறது.  பட்டி தொட்டி எங்கும் நடையாக நடந்து மக்கள் ஆதரவை திரட்ட, மக்களோ அவர்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. மக்களின் கவனத்தை திருப்ப 'சிறகு' போரடுகிறது... ஆடி படுகிறது!. 

 எதிர்க் கட்சி தலைவராக கேட்டா சீனிவாச ராவ்.  அவர் மீண்டும் அறியணை ஏற பல 'அகாசுகா' வேளைகளை செய்கிறார். அப்போதுதான் வயதுக்கு வந்த சிறுமியை மணந்து கொண்டால் மீண்டும் அறியணை கைக்கு வரும்,  என்று  மந்திரவாதி சொல்ல... காட்டில் மண்டை ஓடுக்கிடையே அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. (மறைந்த என்.டி.ஆர் போல கெட்டப் வேற...)அதை 'தின அஞ்சல்' புகைப்படக்காரர் அஷ்வின் (ஜீவா) படம் எடுத்து தின அஞ்சலில் வெளியீட...தேர்தலில் அவருக்கு பயங்கர பின்னடைவு எற்படுகிறது.

ஆளும் கட்சி முதல்வரோ   டிவி நிருபரை செருப்பால் அடித்துவிட...அதையும் போட்டா  எடுத்து தின அஞ்சலில்  போட்டு... அவரது விக்கட்டையும் காலிசெய்கிறார் ஜீவா. 

இதற்கிடையே பல சமூக சேவைகளால் சிறகுகள் அமைப்பு மக்களிடையே நற்பெயரை   பெறுகிறது. இந்த நேரத்தில் அந்த அமைப்பின் தேர்தல்  மாநாட்டில்  குண்டு வைக்கப் பட்டு பல உயிர்கள் பலி ஆக்கப்படுகின்றது. வெடி குண்டு இருப்பதை கண்டு பிடிக்கும் தின அஞ்சல் பெண் நிருபரும் கொல்லப் படுகிறார். தான் சாகும் முன்  பொது கூட்டத்தில் குண்டு இருப்பதை தெரிந்துக் கொண்ட அந்த பெண் நிருபர் ஜீவனுக்கு எஸ்ஸமஸ்  அனுப்புகிறார்.  அதற்குள் அவரும் கொல்லப்பட,  குண்டு வெடிப்பில் பொது மக்களோடு சில நிருபர்களும் சாகிறார்கள்.  இதற்கு ஆளும் கட்சியும் முதல்வரும்தான் காரணம் என்று  நம்ப வைக்கிறார்கள்.

தேர்தலில் மக்கள் ஆளும் கட்சி மீதும் எதிர்கட்சி மீது நம்பிக்கை இழக்கும் நேரத்தில், 'சிறகு' செமத்தியாக ஸ்கோர் செய்கிறது.  மக்கள் ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் புறக்கணித்து விட்டு... மாற்று சக்தியான 'சிறகு'க்கு ஆதரவு தர.. சிறகு மக்களின் அமோக ஆதரவுடம் ஆட்சி கட்டிலில் அமருகிறது.

அட நல்லா இருக்கே என்று நாம் சீட்டின் நுனிக்கு வர...... அங்கே இருக்கிறது ஒரு 'டுவிஸ்ட்'

நிற்க:

நிஜத்தில்  எல்லோரும் தமிழகத்தில் ஆளும் கட்சிமீது  ஒருவித வெறுப்பில் இருக்க... துணை முதலவரின் மகன் எடுக்கும் படமே ஆளும் கட்சியை சாடுகிறதா? இவர்களே எப்படி மாற்று சக்திக்கு   ஆதரவு தருகிறார்கள்?  

எப்படி முதல்வர் பலபேர் பார்க்க நிருபரை செருப்பால் அடிப்பார்?


அவருக்கு கொ.ப.செ ஆக எப்போதும்  அருகில்  ஒரு இளம் பெண். 

படத்தில் ஆளும் கட்சி,   மக்களுக்கு எதிரானது.  மக்கள் அவர்களை நம்ப வில்லை என்று காட்டுகிறார்கள்.
 
இப்படி ஆளும் கட்சி மீது அவதூறு பரப்பக் கூடிய ஒரு படைத்தை எப்படி உதயநிதி ஸ்டாலின் எடுத்தார்?. அதுவும் இந்த நேரத்தில்...?

மில்லியன் டாலர் கேள்வி...? !

அங்குதான் அவர்களின் சூட்சுமம் இருக்கிறது.

மேலே படியுங்கள்........

தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தோற்றுவிட... சிறகுகளின் தலைவர் அஜ்மல் மக்களின் ஆதரவுடன்  முதல்வராக பொறுப்பேற்கிறார். 

சிறகுகளின் பொது கூட்டத்தில் குண்டு  வைத்தவன்  பற்றிய துப்பு கிடைக்க... அதை தெரிவிக்க தின அஞ்சல் போட்டோகிராபர்   ஜீவா முதல்வரை (அஜ்மல்) பார்க்க முயலும் போது...கதையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படுகிறது.

இங்கே முடிச்சை அவிழ்த்துதான் ஆகவேண்டும்.

முதல்வர்  அஜ்மலோடு  அரசங்கம் தேடிக்கொண்டு இருக்கும்  நஸ்லைட் தலைவன் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறான்.  அவன் ஏற்கனவே ஒரு வங்கி கொள்ளையில் சம்பந்தப் பட்டவன் என்பது ஜீவாவுக்கு தெரியும். ஜீவா அவனைப் பார்த்துவிட அங்கே துவங்குகிறது ஜீவாவின் துப்பறியும் படலம்.

ஜீவா கண்டு பிடிக்க ....கண்டுபிடிக்க... நமக்கு தலை சுற்றுகிறது.

நடந்த அத்தனை களோபரத்திற்கும் காரணம் மாற்று சக்தியான,  சிறகுகளின் தலைவர் அஜ்மல்தான்.  இவரது இன்னொரு முகம் இவரது  சிறகு சகாக்களுக்கு  தெரியாதது வியப்புதான்.

அவர்தான் நக்ஸ்லைட்டுகளுடன் சேர்ந்து தான் நடத்தும் கூட்டதிற்கு குண்டு வைக்கிறார்.  குண்டு வெடிப்பில் பலர் கொல்லப் பட அஜ்மலுகு சிம்பத்தி 'சிறகு' முளைக்கிறது.

தன்னை அடியாட்களை விட்டு அடிக்க வைத்து பொதுமக்களிடம் பேர் வாங்குகிறார்.

சேரியில் குடிசைகளை  கொளுத்திவிட்டு அவர்களுக்கு உதவுகிறார்.

குண்டு வெடிப்பிற்கு பிறகு மனம் வெதும்பி (சும்மனாச்சிக்கும்) தேர்தலில் நிற்க போவதில்லை என்று அஜ்மல்  பேட்டி தட்ட.... பொது மக்களும் ஊடகங்களும்    நிற்கச் சொல்லி அஜ்மலுக்கு ஆதரவுகரம் நீட்டுகிறார்கள்  .

மாற்று சக்தியான அஜ்மல்;  முதல்வராவது சதிச் செயலால்தான் என்று காட்டுகிறது படம். 

முடிவில்... பதவி இழந்த முதல்வர் பிரகாஷ்ராஜை நல்லவராக காட்டுகிறார்கள்.

இப்படி மாற்று  சக்தியான இளைஞர்களை, திரையில்  ஏமாற்றும் சக்தியாக  காட்டிருக்கிறார்கள்.  இதன் மூலம் ஒரு உண்மை தெரியவருகிறது.

என்னதான் மாற்று சக்தி என்று நீங்கள்.... அவர்கள் பின்னால் போனாலும் அவர்கள்,  நீங்கள் நினைப்பது போல் நல்லவர்கள் இல்லை. 

அப்படியே ஆட்சி பொறுப்பு கிடைத்தாலும் அவர்களும் மாமுலான அரசியல்வாதியாக மாறிவிடுவார்கள் என்று காட்டுவது.


அவர்கள் எங்களை விட  மிகவும் கொடியவர்கள். அதனால் மாற்றுசக்தி என்று அலையாமல் எங்களையே மீண்டும் தேர்ந்தெடுங்கள்  என்று கூறுவது போல் படம் முடிகிறது.



அதானே....இவங்களாவது  மாற்று சக்திக்கு ஆதரவு தருவதாவது...?









1 கருத்து:

rajamelaiyur சொன்னது…

Try to Visit VALAISARAM

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...