புதன், மே 04, 2011

கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.

                                            அஞ்சலி                                         

முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி  இலக்கிய இதழின் நிறுவனருமான கஸ்தூரிரங்கன் இன்று காலமானார். அவருக்கு வயது 78.    சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்துவந்த அவர், சிறிதுகாலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.



முதுபெரும் பத்திரிகையாளரும் சமூக  ஆர்வலருமான கஸ்தூரிரங்கன் இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார். 

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 ல் கணையாழி இதழை தொடங்கினார்.  கணையாழியில்  அரசியலை முதன்மைப்படுத்திய கட்டுரைகள் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன கணையாழியில் வெளியாகியது.  கணையாழியை தனது உயிர் மூச்சாக நினைத்து நடத்தி வந்தார்.

பின்னர் 1992 வாக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இனைந்து பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு தினமணியின் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு ஆண்டுகள் அவர் தினமணியின் ஆசிரியராக இருந்து முத்திரையைப் பதித்தார்.  அதுவே அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பத்திரிகை உலகில் பெற்றுதந்தது எனலாம்.

சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கணையாழியை  நடத்திய பெருமை கி. கஸ்தூரிரங்கனுக்கு உண்டு.  இதோ இப்போதும் கூட....  நின்று போன கணையாழியை உயிர்பித்தப் பின்னரே தனது  மூச்சை நிறுத்தி உள்ளார் கஸ்தூரிரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.


**********

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...