புதன், செப்டம்பர் 21, 2011

அமெரிக்காவை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்குத் தடை.



ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியூயா‌ர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அ‌திகா‌ரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.




நியூயா‌ர்‌க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சா‌ற்றுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்களுக்கு நியூயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.



அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியூயா‌ர்‌க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
 



அதே நேரத்தில் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. திருப்பதியில் பூரண கும்பம் வைக்கப்படுகிறது...? இந்தியா போன்று அமெரிக்காவில் ராஜபக்சே சகஜமாக நடைபோட்டால் அவர் பிணமாகத்தான் இலங்கை திரும்பமுடியும் என்பதை உணர்ந்தே அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது, என்பதை நம்மால் உணரமுடிகிறது.
.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...