புதன், அக்டோபர் 02, 2013

" அசையாத தசையையும் அசையவைத்த 'சிவாஜி'! -டாக்டர் கூப்பர்.



                          டிகர் திலகம் சிவாஜி இறந்த அன்று, எனது தந்தையார் எனக்கு போன் செய்து "டேய், சிவாஜி வீட்டுக்கு போயிட்டு வந்துடு." என்றார்.  ஒரு நடிகரின் இறப்புக்கு ஒரு சராசரி மனிதன் தான் செல்ல முடியாததால் தனது மகனை அந்த இறுதி ஊர்வலத்திற்கு அனுப்புகிறார் என்றால் அந்த நடிகர் எத்தகைய ஆற்றல்மிக்க நடிகராக இருந்திருப்பார்.  அப்படி மக்கள் கொண்டாடிய மகத்தான கலைஞன் அவன்.

ஒரு சிற்றிதழில் மலையாள இயக்குனர்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  அப்பப்பா....!, மனிதர் சிலேகித்து எழுதியிருப்பார்.  சிவாஜி யார், அவன் எத்தகைய மாகத்மியம் படைத்தவன் என்பதை மிக பிரமிப்போடு வர்ணித்திருப்பார்.  சிவாஜியை அவரது வீட்டு மாடியில் சந்தித்தையும், அந்த சந்திப்பின் இரவொன்றில் கிளாசில் அளவோடு 'ஸ்காட்ச்'  ஊற்றியதையும், கம்பீரமாய் நடந்து... அந்த தனித்துவமிக்க நாற்காலியில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அமர்ந்ததையும், தனது கணீர் குரலில் தன்னை நலம் விசாரித்ததையும்  என்று,  சிவாஜியை அனுஅனுவாக ரசித்து எழுதியிருப்பார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.  "கேரளாவில்   நடிகர் திலகத்தின் திரைப்படம்  வெளியாகும்போது  அறிவிப்பு  வண்டியில்அமர்ந்து சிவாஜின் பிரஸ்தாபங்களை மைக்கில் அளந்த குஞ்சன் நான். நான் அந்த மகா நடிகன் பக்கத்திலா....?" எனறு ஆச்சரியமும் பிரமிப்பும் கலந்து எழுதியிருப்பார்.

சிவாஜியைப் பற்றிய இப் பதிவு என்னை  பெரிதும் கவர்ந்தது. அந்த எழுத்து  பசுமரத்து ஆணி போன்று இன்றும் இன் நினைவில் இருக்கிறது.

பிற்பாடு இப் பதிவுப் பற்றி சாந்தி திரையரங்கின் வேணுகோபால் (சிவாஜியின் மைத்துனர்) அவர்களிடமும் கூறினேன். அவர் உடனடியாக கேரளாவில் தொடர்புகொண்டு அச் செய்தியை பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

இப் பதிவுப் பற்றி நண்பர் ஜே.ரங்கராஜனிடம் (தினமணி சிறப்பு நிருபர்) பேசிக்கொண்டு இருந்த போது, மருத்துவர் கூப்பர் என்ற உடலியக்கத் துறை பேராசியரர் (Professor of Anatomy)  சிவாஜியின் முகத்தில் சதையும் நடிப்பதைப் பற்றி கூறியிருந்ததை நினைவுக் கூர்ந்தார்.  உடலில் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத தசையையும் தனது நடிப்பாற்றலால் அசைய வைக்கும் ஆற்றல் பெற்றவர் நடிகர் சிவாஜி. இதை கூப்பர் 30ம் ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களிடம்  பகிர்ந்துக் கொண்டார். பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தினமணி சிறப்பு நிருபர் ரங்கராஜனிடம்,  மருத்துவர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் இச் செய்தியை பகிர்ந்து கொண்டார். இது நடந்தது சிவாஜி இறப்பதற்கு முன்பு.   
    
தினமணியில் வந்த 'இமையம் பதித்த சுவடுகள்'

நான்கு ஆண்டுகள் கழித்து, சிவாஜி இறந்த அன்று, 'இமையம் பதித்த சுவடுகள்' என்ற நினைவு கட்டுரை தயாரிக்கும்போது, சிவாஜி பற்றி மருத்துவர் கூப்பர் சொன்னதை செய்தியாக்க,   என்றோ தன்னிடம் இச் செய்தியை பகிர்ந்துக் கொண்ட  மருத்துவர்  ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் பிடித்து 'அசையாத தசையையும் அசையவைத்த 'சிவாஜி!' என்று அதை  தினமணியில் பாக்ஸ் செய்தியாக்கினார் ரங்கராஜன்.  அச்செய்தி பரவலாக பேசப்பட்டது.

நிருபர்கள் எப்போதுமே அலார்ட் ஆறுமுகமாகத்தான் இருக்கவேண்டுபோல....?!

இச் செய்தியை என்னிடம் பகிர்ந்துக் கொண்ட ரங்கராஜன். தினமணியில் வந்த அந்த பக்கத்தை  எனக்கு (PDF) பார்மெட்டில் அனுப்பினார்.
நான் அதை உங்களிடம் நான் பகிர்ந்துக் கொள்கிறேன். 
பார்க்க படம்!.
------------BOX NEWS!----------------
 இன்றைய தேதியில் தமிழகத்தில் மருத்துவம் தொடர்பான செய்திகளை தருவதில்  ரங்கராஜன் சூப்பர் என்றே சொல்லலாம்!  தினமணியில் கடந்த 16 ஆண்டுகளாக  வெளிவரும் 'மருத்துவ மலர்' இவரது கை வண்ணத்தில்தான் வெளிவருகிறது.  மருத்துவம் தொடர்பான செய்திகளை தருவதில் அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு.
------------BOX NEWS!----------------


-தொடர்ந்து பேசுவோம்.


4 கருத்துகள்:

Unknown சொன்னது…


பழைய செய்த் என்றாலும் இன்று
இது, பதிய செய்திதானே! நன்றி நண்பரே!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சிவாஜி அவர்கள் பற்றிய அற்புதமான பதிவுஐயா. எவ்வளவு பேசினாலும், படித்தாலும் அலுக்கவே அலுக்காத மனிதரல்லவா சிவாஜி கணேசன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்!

மிக்க நன்றி அய்யா!. சிவாஜி ஒரு சரித்திரம். அதனால்தான் மருத்துவ மேதைகள் அவரது நடிப்பு பற்றி இப்படிப்பட்ட உயர்வான கருத்துகளை சொல்லியிருக்கின்றனர்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...