சனி, அக்டோபர் 31, 2009
இந்த முறை முன்கூட்டியே வருகிறது சென்னை புத்தகக் காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைப் பெற்றது. சங்கத்தின் தலைவராக கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், செயலாளராக லெட்சுமணன் (உமா பதிப்பகம்), பொருளாளராக யுனிவர்சல் பதிப்பகத்தின் ஷாஜகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை தலைவர்களாக சண்முகம் (செண்பகா பதிப்பகம்) , சுப்பிரமணியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வருடமாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி, இந்த முறை பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் டிசம்பர் முப்பதில் தொடங்கி ஜனவரி பத்தாம் தேதி வரை இப் பள்ளி வளாகத்தில் நடை பெறுகிறது. இதனால் பொங்கல் விடுமுறைக்கு முன்பே புத்தகக் காட்சி முடிந்து விடும், என்பது சற்று வருத்தமான செய்தி
பெருவாரியான புத்தகப் பிரியர்களும், பொது மக்களும் புத்தகக் காட்சியை பார்ப்பதற்கும், புத்தகம் வாங்குவதற்கும் இந்த பொங்கல் விடுமுறையைதான் பயன்படுத்திக் கொள்வர். அப்படி இருக்க அந்த விடுமுறை தினத்திற்கு முன்பே சென்னை புத்தக் காட்சியை முடிப்பதேன்பது பொது மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வத்திருக்கு தடையாக இருக்கும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், சென்னை புத்தக காட்சியை பொங்கல் விடுமுறை வரை நீட்டிக்க வேண்டும் என்பது பெருவாரியான புத்தகப் பிரியர்களின் கருத்து.
செய்வார்களா....?
சனி, அக்டோபர் 24, 2009
திருமா செய்த தவறு...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmpGgNcn0Is8iA_gNmvyvngmojMU6_N8DGMDwnZkK37674wfboprVqcOtwTnxvzKoHsGIIIBI8uRcW9E3Y1yGXjCcR71G1p5F7aD_cYs4LgVmJaTaGMujhPzQMAofApXA-qVXi4eAnNpk/s320/2117thirumavalavan_j.jpg)
புதன், அக்டோபர் 21, 2009
23 செர்மனியில் தமிழ் இணைய மாநாடு
தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி செர்மனியில் நடை பெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள் . வல்லுனர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.
செர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடக்கும் இந்த மாநாடு, முதன் முறையாக ஐரோப்பா கண்டத்தில் நடைபுருவது குறிப்பிடத்தக்கது
'கணி வழி காண்போம் தமிழ் என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும். அதாவது அனைவரும் தமிழில் கணியியை பயன்படுத்தவும் இணைய வழி கல்வி கற்க வகை செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்' என்று சுவிசர் லாண்டில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழா அரசு சார்பில் அண்ணா பலகலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்த கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். மேலும் கணித் தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், தமிழ் இணையம் பல்கலைக் கழக இயக்குனர் நக்கீரன் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து கலந்து கொள்கின்றனர்.
செவ்வாய், அக்டோபர் 06, 2009
'விடுங்க பாஸு, இவிங்க எப்பவும் இப்படித்தான்'
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRxnYBMHqLAfohV-x2E7N0Xc553_9y7zfHg099ot3nRgr_1ABD2CyEl9VbhrXSDfR8_8HJB8yat_LtWclcEV7WF9ARJZqBO9Sc6PouP4wpnbRideR_d5kcZjM7VExj1KZlG4z6qERmp-k/s320/mathi.jpg)
"உண்மையைச் சொல்வதென்றால்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல்
ஒரே கூட்டணியில் இருந்தால், எங்கள் தலைவருக்கு தலைவலி, தலைசுற்றல், மயக்கம், குமட்டல், வாந்தி, (பேதி)... இதெல்லாம் வருகிறது! இதுதான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு காரணம்...! "
-இதுக்கு நான் வேற கருத்துச் சொல்லனுமாக்கும்....!
கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !
கவிஞர் ரவி சுப்ரமணியன் ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும் என்று நி...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxNaxh5ZHaTmDcNwY6HiVbjViUC-JD8Dg2z7P_G3aDvXGOSGuINt_P9kJCzVMeP7LBwQiizw4seQ8J76NY4b24ROQY2xYaTYj_9R9tTKHN44XDUtMaaWMYRq2y5ZaHtnhiM5Bhj6jUVa7M_ntLa4xK1poH1Xx60e3nsXmT6tuEoz46eayUPSwQjz22oec/w213-h400/ravi%20sub1a.jpg)