அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

வதந்தி பரப்புவர்கள் மீது கைது நடவடிக்கை; தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி!





        முன் எப்போதும் இல்லாத வகையில் முகநூல் மற்றும் ட்விட்டர்களில் எழுதுபவர்கள் கிலிப் பிடித்துக் கிடக்கின்றனர்.  முதல்வர் ஜெயலலிதா உடல் நிலைப் பற்றி தவறான தகவலைப் பரப்பினார்கள் என்று இதுவரை 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல் துறை. அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர்களை கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக காவல் துறையின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கை,  மக்களிடையே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது!.

முதல்-அமைச்சர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பியதாக ஏற்கனவே மாடசாமி, சதீஷ் குமார், பாலு, திருமணி செல்வம், ரமேஷ்குமார், சுரேஷ் குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஆண்டனி ஜேசுராஜ், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இத்தைகைய கைது நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதை தமிழக அரசு கவனித்ததா என்று தெரியவில்லை?. 

சமூகவலைத் தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸப் பயன்படுத்துவதுப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எத்தகைய தகவலை பகிரவேண்டும், எத்தகைய செய்திகளை லைக் செய்ய வேண்டும் என்ற குறைந்தப்பட்ச தெளிவு இல்லாமலேயே மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இணையத் தளங்களைப் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்ட வேளையில், இதற்கான சட்ட பூர்வ விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அதன் வாயிலாகவே இத்தகைய இக்கட்டுகளை நான் தவிற்க முடியும். பள்ளிக் கல்லூரிகளில் இதற்காண பாடத்திட்டத்தை வைத்தாலும் தவறில்லை. அந்தளவிற்கு மனிதன் குனிந்த தலை நிமிராமல் காலம் ஓட்டுகிறான்.

கடந்த 24 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. முதலில் சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் மன்றத்தில் கூறிய தமிழக அரசு, போக போக முதல்வர் உடல் நிலைப் பற்றி தெளிவான தகவலை வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. 

முதல்வர் ஜெயலலிதா மீது பற்றும் பாசமும் கொண்ட இரத்தத்தின் இரத்தமான அதிமுக உடன்பிறப்புகள்,  ஆயிரக் கணக்கில் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். அப்பல்லோ வாசலில் குவிக்கப்பட்ட காவல் துறையினராலும், அப்பல்லோவைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பரண்களாலும் ஒரு அசாதராண நிலை மாநிலம் முழுவதும் பரவத்தொடங்கியது. 

"இவ்ளோ போலீஸூ....... இவ்ளோ கெடுபிடி..... அப்ப அம்மாவிற்கு ஏதோ ஆயிடுச்சிடா" என்று சாதாரண அதிமுக தொண்டன் நினைக்கத் தொடங்கினான். விளைவு; முதல்வர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் விர் விர்ரென்று எட்டுத் திக்கும் பறக்கத் தொடங்கியது. உண்மை நிலை தெரியாத மக்கள், அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... யூகத்தின் அடிப்படையில் பேசியதே வதந்தியாக உருவெடுத்தது.   வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் தமிழ் நாட்டில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து "அம்மாவுக்கு என்னதான் ஆச்சு?" என்று கேட்கும் அளவிற்கு விஷயம் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. . 

முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலையே அவரது உடல் நிலைக் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதல்வர் உடல் நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம்பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும்.  ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே  முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வழக்கமான உணவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறிய மருத்துவமனை கம் தமிழக அரசுதான், அடுத்த சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. இன்னும் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாக மூலம் தெரிவித்தது. இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்தான், முதல்வர் உடல் நிலை குறித்து அரசு நிர்வாகம் தரும் தகவல் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது. 

நிலமை இப்படி இருக்க.... முதல்வர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பினார்கள் என்று, அப்பாவிகளை கைது செய்வது நியாயமான செயல் அல்ல. இத்தகைய கைது நடவடிக்கையால், அந்த அப்பாவிகளின் வாழ்க்கை முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.  இந்த கைது நடவடிக்கையால் அவர்களின் வேலை பறிபோகும், குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாகும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.   கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப எதிர்கால நலன் கருதி அவர்களை உடனே விடிவிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு. 

செய்யுமா தமிழக அரசு?.

-தோழன் மபா. 






 . 




செவ்வாய், பிப்ரவரி 11, 2014

'பிஜேபியால் பைத்தியம் பிடித்து நிற்கும் வைத்தியராமன் தெருவாசிகள்!'




                                            அதிரிபுதிரி அரசியல் ரிப்போர்ட்!                                 
             


                         தினம் ஒரு பிரஸ் மீட், தினம் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை என்று பரப்பரப்பு முகம் காட்டி வருகிறது தமிழக பா.ஜ.க.  முந்தையை தேர்தலில் பற்றிப்படர ஒரு கொழு கொம்பு இல்லாமல் அல்லாடிய பாஜக, இம் முறை  மோடியை சுற்றி படர்ந்திருக்கிறது.  குஜராத்தைவைத்து மோடிமஸ்தான் வேலை செய்து, தனக்கான தனி இமேஜை ஏற்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி, டீ ஆத்துவதை விட்டுவிட்டு இந்தியாவை நீள அகலத்தில் ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கொண்டு இருக்கிறார்.

சென்னை திநகர் வைத்தியராமன் தெருவில் இருக்கும் பிஜேபி தலைமை அலுவலகத்தின் வாசலில் வைத்துதான் ஊடகங்களுக்கு  பேட்டி தட்டுகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். ஒரு பக்கம் எல். கணேசன் மைக் பிடிக்க, மறுபக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுக்க, வாசலில் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டிக் கொடுக்க தயாராக காத்திருக்க... என்று அந்த ஏரியாவே அதிரிபுதிரியாகி கதிகலங்கி நிற்கிறது. 

தெருவின் திரும்பிய திசையெல்லாம் பத்திரிகையாளர்களும் டிவிக்காரர்களும் நிரம்பி வழிகின்றனர்.
ஒரு டிவி பேட்டி முடித்தால், மற்றோரு டிவி பேட்டியை தொடங்குகிறது.  தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று டம்பிங் பட வரிசைபோன்று ரகத்திற்கு ஒன்றாய் பேட்டி கொடுக்கின்றனர்.

இதற்கு முந்தைய எபிசோடில் பிஜேபிக்காக வரட்டு வரட்டுன்னு கத்திகிட்டு இருந்த தமிழறிவு மணியன், தற்போது தனது டெசிபலைக் குறைத்துக் கொண்டு தனியாவர்த்தனம் செய்ய போய் விட்டார்.  விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடாமல் இருக்க என்னன்னவோ செய்து பார்த்தார்.  தனது வேட்டியை அவுத்து,   கேப்டன் போகும் பாதையெங்கும் திமுக என்ற எழுத்து அவரது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளக் கூட முயன்றார்.  என்ன பிரயோசனம்.....கேப்டன் போடுவது கரன்ஸி கணக்கு என்று தமிழறிவு மணியன் என்ற தவளைக்குப் புரியவில்லை.  திமுகாவிற்கு எதிராக தினம் தினம் கொடுத்த பேட்டியும் வீணாகிவிட்டது.

தமிழறிவு மணியன் சொல்வதை கேட்க இவர் என்ன மச்சான் சதீசா.....?.

மோடியோடு மேடை ஏறுவேன் என்று சொன்ன நம்ம வைகோ, வாழ்த்து தந்தி மட்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு  தாயகத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். பிற்பாடு கூட இருந்தவர்கள் எடுத்துச் சொல்லப் போக....ரெண்டாம் சாமத்துக்கு மோடியை, தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சந்தித்திருக்கிறார் வைகோ.  அன்றைய தினம்  (மோடி வருவதற்கு முன்)  இரவு எட்டரை மணிக்கு கிளம்பிய ஒரு வதந்தி வைகோவை மேடை ஏறாமல் செய்துவிட்டது என்கிறார்கள் வைத்தியராமன் தெருவாசிகள்.


எட்டரை மணிக்கு கடையை (?) மூடிவிட்டு தலைவர்கள் காரில் ஏறி பறக்க இருந்த அந்த செகண்டில், எங்கிருந்தோ பறந்துவந்த ஊடகக்காரர்கள்  "உங்களுக்கும் திமுகவுக்கும் கூட்டணியாமே....?" என்ற வெடியை கொளுத்திப் போட, அது பொன்னார் முகத்தில் சரமாரியாக வெடித்தது.  வைகோவை மேடை ஏறாமல் செய்தது.

"உங்களுக்கு யாருங்க சொன்னா.....யாருங்க சொன்னா.....?" என்று பொன்னார் கோபத்தில் கத்த, "இங்கதாங்க தெரு முக்ல பேசிக்கிட்டாங்க...." என்று ரிப் போட்டர்கள் பொத்தாம் பொதுவாய்  பதிலளிக்க,   பொன்னார் மறுபடியும் மைக் பிடித்து பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.  அன்றைய இரவு மூடிய கடையை மறுபடியும் திறக்கும்படியாகிவிட்டது. 

 பிளாஷ் லைட் வெளிச்சம் பீய்ச்சு அடிக்க.....சீரியல் பார்த்துக் கொண்டு இருந்த வைத்தியராமன் தெருவாசிகள் சிலபல நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியஸ் மூடுக்கு வந்தார்கள். ஒரு கட்சி இருந்தாலே இப்படி இருக்க, அதே தெருவில் இன்னோரு   கட்சியும் இருக்கிறது.

அது சிபிஐ!.  சிபிஐயில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்கள் காம்ரேட்டுகள் என்பதால் கட்சி அலுவலகத்தில் அவ்வளவாக இருப்பதில்லை.  களப்பணியாற்ற சென்றுவிடுகின்றன்ர்.  செவப்பு கலர் உண்டு, அம்மா  தரும் தொகுதி உண்டு என்று காம்ரேட்டுகள் கம்முன்னு கிடந்து ரெண்டு மூனு வருஷமாச்சி. 

ஜெ எதுக்கு காம்ரேட்டுகளுக்கு ஒகே சொன்னார்ன்னு தெரிஞ்சா, எதுத்தாப்பல இருக்குறவுங்க மூக்கு மேல கை வைப்பிங்க.  தான் ஜெயிச்சு டெல்லிக்கு போனா.... கூட மாட கொரல் எழுப்ப ஆளு வேண்டாமா....?.. சைடு சப்போட்டுக்கு எப்படியும் இருபது முப்பது கம்யூனிஸ்ட்டு தேருவாய்ங்க!. 

தான் ஒரு சாமானியன் என்று கதை அளந்த மோடி எஸ்ஆர்எம்  பலகலைக்கழகத்திற்கு தனி விமானத்தில் வந்து போயிருகிறார். பூஷ்வாக்களின் நாயகன் என்ற முகமூடிதான் மோடிக்கு சரியாக பொருந்துகிறது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து இருக்கிறது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். 

தாங்கள் கூட்டணி வைக்கும் அளவிற்கு பச்சமுத்துவின் IJK ஒன்றும் பெரிய கட்சியல்ல என்ற முணுமுணுப்பு  பாஜகாவில் இப்போதே தோன்றிவிட்டது.

இரண்டு தவணையில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்த பாஜக இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை, என்பது நிதர்சனம். தனக்கு கிடைக்க இருக்கும் ஒரு வாய்ப்பை பறிகொடுக்கவே பாஜக இம்முறையும் முயலுகிறது.  பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால், ஏதோ.... இப்பவே மோடி பிரதமாராகிவிட்டார் என்ற கனவில் மிதப்பதாகவேப்படுகிறது.

தாமறை கட்சிக்காரர்களே கொஞ்சம் சுய நினைவுக்கு வாங்க......  இல்லென நீங்க அபிட்டுதான்.




ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...