எனது கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 13, 2022

'காகமும் குடையும் சில கவிதைகளும்' - கவிதைப் போட்டி

 

எங்கள் கல்லூரி  வாட்ஸ்ஸப் குரூப்பில்... இந்தப் படத்திற்கு  கவிதை எழுதச் சொல்லி  எனது கல்லூரி கால நண்பர்கள்  கேட்டார்கள்.  நான் நான்கு  கவிதைகள்  எழுதியிருக்கிறேன்.  
இப் படத்திற்கு  கவிதை எழுத சொல்லி நமது முகநூல் கவி நட்புக்களையும் உரிமையோடு அழைத்திருந்தேன். அவர்கள் எழுதிய கவிதைகள் இதோ.....




**********************
 மபா

1) காற்றறியுமோ...
குடை பிடித்தது
காகமென்று  ?!
**********************
2) மழை நாளில்
காக்கைக்கும் தேவை
குவார்ட்டர்  வாங்க
குடை !
***********************
3) உறவின்றி
தனித்து வாழ்தல்
அந்தோ
காக்கைக்கும்
குடை சாயும்.
******************
4) இரண்டுமே
கறுப்பு
ஒன்று கரையும்
மற்றொன்று
நனையும் !

----------------------------

வரதன் 


மரம் வளர் மனிதா!
குடையே வேண்டாம்.
நானமரக் கிளையாகும்
நீ அமர நிழலாகும்


---------------------------------------------
இன்னாசி பாண்டியன் (Innasi Pandiyan)

படர்ந்திருந்த மரமொன்று
காணாமல் போனதால்
நடு சாலையில் கவிழ்ந்த குடையில் ந
நின்றுகரைந்து கரைந்து தேடுகின்றேன்!!!
எனக்கு நிழல் கொடுக்கும்
அந்த மரத்தைப் போல் மாந்தருக்கு
நிழல் கொடுக்கும் இக்குடை
ஏனோ எனக்கு தர மறுக்கிறது!!!
மரம் வளர்ப்போம்
நிழல் கொடுப்போம்!!!

--------------------------------------------------
ரூபன் ஜாய் (Ruben Jay)

மயிலுக்கு போர்வை தந்தவனே,
இதோ,
காக்கைக்கு குடை கொடுத்தவனைப் பார்,
இவனல்லவா கொடை வள்ளல்.

------------------------------------------------------
விசுவநாதன் கணேசன்  (Viswanathan Ganeshan)

தாத்தாவின் குடை தடுமாறுகையில்
காக்காவுக்கு வைத்த சாதம் செய்த கைமாறு..

-------------------------------------------------------------
-வெங்கட் ராமானுஜன்.

சரிந்த  குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன்  எங்கே ..
வீழ்த்தபட்ட ஜனநாயகம் இங்கே..
காக்க போராடியவன் எங்கே..
தலைகவிழ்ந்த தன்மானம்  இங்கே..
தடியடித்த கொலை செய்த படுபாவிகள் எங்கே..
கரைகிரனே காகம் நான்
கேக்கவில்லையா அதிகாரம் புசிக்கும் பூதர்க்கு ..
குற்றம் செய்கிலா கோவலனுக்கு
நீதிகோரி எரித்தனளே கண்ணகி மதுரையை
குற்றமற்றவர்களின்  மர்ம உறுப்புகள்
சிதைக்கபட கதறிய  
வலிகளின் நடுநிசி ஓலங்களில்  
எரியாமல் ஏன் இருண்டது #சாத்தான்குளம்  ..
கா கா கா கா
எனறால் நான் வருவேன்
வா வா வா வா
எனறாலும் வர ஏன் நீ மறுக்கிறாய் ...
உன் சரிந்த  குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன் நீ எங்கே ..?

பி.கு1 :   

முகநூல் தமிழ் சொத்து  Mahesh Babu Padmanabhan அவர்கள் படம் பார்த்து கவிதை சொல்லும் கேள்விக்காக ..


பி.கு2 :   இறந்த நம் சகோதரர்களுக்கு #JusticeForJayarajAndFenix 🙏🙏


----------------------------
ஷண்முகம் எம்.பி (Shanmukham Mb)

Kuudu kata maram indri thavitha kagathirkaga kudaiyayi kudutha kudaivallal vazhga endru kagam karaithadhu
கூடு கட்ட மரம் இன்றி தவித்த காகத்திற்காக குடையையே கொடுத்த குடை வள்ளல் வாழ்க என்று காகம் கரைந்தது
()()
Shanmukham Mb
Mullaiku theyer kuduthaan paarivalar endha kakaiku kudai kudutan andha koudaivalar
--------------------------------------------
சாண்டியல்யன் (S Sandilyan)

உட்கார்ந்த இடம்
குடையின்
கொடை
()()
--------
காக்கை உட்கார
குடை சாய்ந்தது!!
()()

காக்"கை(யில்)"
குடை
----------------------
பாதையில்
குடை
காகம் உட்கார
எது தடை????
--------------------------
வேடியப்பன்  எம் முனுசாமி (Vediyappan M Munusamy)
..
தாத்தாவின் குடைமீது காக்கா
உட்காந்திருக்கிறது என்றேன்.
தளுதளுத்த குரலில் சொன்னார் பாட்டி..
இல்லை.., தாத்தாவேதான் உட்காந்திருக்கிறார்.
----------------------------------------------------------------------------------
மனோஜ் கிருஷ்ணா (Manoj Krishna)

அர்த்த ராத்திரி
அற்பர்கள் மத்தியில்.....
குடை பிடிக்கத்
தெரியாத காகம்.!
---------------------------------------------
தேவ தேவா (Deva Deva)

மனிதனால்
தூக்கி வீசப்பட்ட
கைக்குடை
அந்த கைக் குடையின்
முதுகெலும்பின் உச்சியில்
ஒரு கருநிறக் காகம்
பார்ப்பதற்கு என்னவோ
விளையாடுவதற்கு
உட்கார்ந்தது போல்
தெரியவில்லை
எல்லாமே தற்காலத்தில்
வினையாகி விட்டது
என்பதை உணர்த்துவதற்காக
உட்கார்ந்து போல் தெரிகிறது !!!
நம்மை விட
சில அறிவு குறைவான
ஆகாயத்துப் பறவைதானே
என்றெண்ணுவதா
அல்லது
புத்தி கெட்ட மனிதனுக்கு
இறைவனால் அனுப்பப்படும் இறுதித் தூதனென்று
எண்ணுவதா
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
கூக்குரலை நிச்சயமாய்
நானறிவேன்
தன் இனமே
அழிந்து போகிறதென்கிற
இறுதி செய்தியைச் அறைக்கூவல் செய்கிறதோ
அல்லது
தன் வாழிடங்களை
அழித்துப் போட்ட மானுடனத்தை பார்த்து
உங்களுடன் எப்பொழுதும் வேண்டுமானாலும்
போர் செய்வேன்
என்ற எச்சரிக்கை
தொனியை
உயர்த்துகிறதோ
இப் பூமியில் நடக்கும்
அநீதிகளை கண்டு
இதற்கெல்லாம் காரணம்
இப்பாழாய்ப் போன
மனிதன் தானென்று
கடவுளை நோக்கி
அபயமிடுகிறதோ
மனிதமே...
உன்னால் தலைகீழான இயற்கையின் விதிகளை
என்னால்
நிலைநிறுத்த இயலும்
என்று
சவால் விட்டு அழைக்கிறதோ...
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
பாடுகளை நானறிவேன்

---------------------------------------------
கதிரவன் திருநாவுக்கரசு (Kadhiravan Thirunavukkarasu)

குடைக்குள் காகம்..
கரு மேகம்..
மழைக்கு காகமோ , குடையோ..

----------------------------------------------
பாலசுப்ரமணியன் சுதாகர் (Balasubramanian Sudhakar)

லாக்டவுன் நேரத்தில்
யாரும் வெளியில் வராதீர்கள்ன்னு
எச்சரிக்கை செய்கிறதோ,
தனித்திருக்கும் காகம்!!
---------------------------------
ஜான் தம்பிதுரை (John Thambidurai George)

நான் காகம் தானே...
கரைய மட்டும் தான் இயலும்!
குடை சாய்ந்து போனதே இந்த பூமி...
என் செய்வேன்?
---------------------------------------------------
பரமானந்தம் யோகானந்தம் (Paramanandam Yoganandam)

மழை வரும் என்று
நம்பாத மனிதன்
சாலையில் வீசிய குடையை,
நம்பிக்கையுடன்
பிடித்திருக்கும் காகம்.

-------------------------------------------
வித்யா சுரேஷ் (Vidhya Suresh)


தருவில்லா தெரு
குடைக்குள்
கூடடைவோம்
-------------------------------------
பன்னீர் செல்வம் (Panneer Selvam)

மரங்களை
அழித்த மாபாதக செயலில்...கூடே,
எனது குடையாகும்...
உங்களின் குடையோ..கொடையோ...
எமக்கு.கூடாகுமோ..!?!
---------------------------------------------

அகிலா பரணி (Akila Bharani)

குடை இருக்கு...
மழை இருக்கு....
மனுஷன காணோமே...
----------------------------------------------
பிரான்சிஸ் (P.J. Francis)

குடிமகன் விட்டுசென்ற குடைகூட போதையில்
கவிழ்ந்து காக்கை குடித்தனம்
செய்யும் இடமானது
----------------------------------------

எ.ராஜமாணிக்கம்  வழக்கறிஞர்.

மழையின் கரங்கள்
பூமியை அறைந்து கொண்டிருக்க...
வானத்தின் கண்ணீரில்
நிலை தடுமாறிய குடை....
நீதிகேட்டு வானத்தை
நோக்கி
வழக்காடும்
காகம்......
------------------------------------

எனது வேண்டுகோளை ஏற்று கவிதைப் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றியும் பேரன்பும்!

அன்புடன்
தோழன் மபா.

செவ்வாய், ஜூலை 05, 2022

தருணம் ! கவிதை

ருணம்

முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை 

கண்டுணரும் தருணத்தில்... 

காதலும் காமமும்

 நம்முன் படையலிடப்படுகிறது! 

அன்னப் பறவையென உருமாறும்-

அத் தருணத்தில் இருக்கிறது

 நமக்கான வாய்ப்பு !

 -மபா

வெள்ளி, நவம்பர் 02, 2018

பிறிதொன்றாய் - கவிதை

இந்த வாரம் (29.10..2018)  கல்கி இதழில் எனது கவிதை !

-----------------------------

'பிறிதொன்றாய்'

குட்டி மீன்கள் நீந்தும் அத்தடாகத்தில்
அவன் மிதந்துக்கொண்டு இருந்தான்
நேற்றைய இரவுகளில் அவன்
உயிரோடு இருந்தானா என்பதை இனிதான்
துப்பு துலக்க வேண்டும்.

பல முறை அவன் இதே தடாகத்தில்
மீன்களிடத்தில் இளைப்பாறியதுண்டு

அவனது தோல்கள் உரிந்து செதில்களாக உதிரும்வரை...
அவன் அவற்றோடு நீந்தி களித்தின்புறுவான்

காலிடிக்கில் வழுக்கிச் செல்லும் அம் மீன்கள்
அதற்காக அவனிடத்திலிருந்து பொறிகளை பரிசாக பெறுவதுண்டு
சொப்புவாய்யைத் திறந்து கவ்வும் அழுகே...அழகு!

கொதி நிலையற்ற அவ்வாழ் பிரதேசத்தில்
தக்கையாகும் வரை நீந்துவான்.

அக்கரையில் மிதந்த அவனது உடலை
இடுப்பில் கயிறுக் கட்டி இக்கரை கொண்டுவந்தார்கள்

இனி அவனது உடலை பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும்

புறம் அகம் எதுவுமின்றி உயிர் போன
தடமுமின்றிக் கிடந்தான் அவன்.

அறிக்கை; 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்று சொல்லிவிட...

அத்தடாகமெங்கும்
மீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின
புதிதாய் வந்த மீனுடன்.

-தோழன் மபா

வியாழன், டிசம்பர் 29, 2016

மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

       திசையறியாது திகைத்து நின்றவனுக்கு வழி காட்ட எத்தனையோ நல் உள்ளங்கள். சிக்கிக்கொண்ட ஆற்றுச் சுழலில் அதன் போக்குணர்ந்து போராடுபவனுக்கு நம்பிக்கையாய் கரை தெரிவதுபோல் இதோ 'மறுதாம்பு' எனது கவிதை நூல் வெளிவரத் தயாராக இருக்கிறது.


அழைப்பிதழ்

வரும் ஜனவரி இரண்டாம் தேதி மாலை 6 மணிக்கு கவிக்கோ மன்றத்தில்

 மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள் தலைமையேற்று நூலை வெளியீடுகிறார்கள்.

கவிதைகளின் சக்ரவர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சிறப்புரை.

நண்பர் அமிதம் சூர்யா மற்றும் சுகந்தி நாச்சியாள் வாழ்த்துரை.

நண்பர் வேல் கண்ணன் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

அனைவரும் வருக!. உங்கள் வருகையால்தான் இவ் விழா மேலும்
 சிறப்படையும்!.

உங்களுக்காக Iam waiting

#மறுதாம்பு

புதன், ஜூன் 03, 2015

நஞ்சுண்ட நா! தமிழுண்ட நா!





நெஞ்சுக்கு நீதியாய் நின்று
எரிதழல் தன்னில் ஏந்தி
திருக்குவளை ஈன்றெடுத்த
தங்கமென தமிழுக்கு - நீ வந்தாய்.

நீ வந்ததிந்த நேரமோ...?
சூது மதியார் சூழ் நம் நிலத்தை
ஏதுமறியார் நம் தமிழர்
தலை நிமிறா நிலைகண்டு,

தமிழனை தடுத்தாட்கொண்டு
போர்களத்தில் - நீ முன்னின்றாய்.

கரகரத்த குரல் தமிழனின்  குறளாக..
முன்னின்று வழி நடத்த முக உன் பிறப்பு
காலத்தின் கொடையென்றோ...!
மழைக் காலத்தின் குடையன்றோ...!

அகவை தொன்னுற்றிரண்டாயினும்
முக'வை முன்னின்று வழி நடத்தும் முத்தமிழுக்கோர்
வயது மூவாயிரமாண்டுகள் மேலே
நனிதமிழுக்காற்றுவாய் நல் தொண்டினை அதற்குமேலே...!

நஞ்சுண்டநா வசை பாடும் -உன் மேல்
தமிழுண்டநா என்றும் இசைகொள்ளும் உன் பால்
பகுத்தாராய்ந்தால் நாங்கள் உன் பக்கம்
பகுத்தறிவற்றோர் என்றென்றும் நம் எதிர்பக்கம்!.

நீ இல்லாதுபோனால் அன்றுணருவார் -உன் பெருமை
இருக்கின்ற நாளெல்லாம் எய்துவார் உன் மேல் அம்பை
இதை நான் சொல்லாது போனால்
உன் காலத்தில் வாழ்ந்த எனக்கென்ன பெருமை!.

எம் தலைவனே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!.

-மகேஷ் பத்மனாபன்!.
3/06/2015


திங்கள், ஆகஸ்ட் 22, 2011

முன்பு போலவே...


மழை பெய்யும்-இந்த
இரவில்
வானம் இருண்டு
குளிருடன் கிடக்கிறது.

மின்னல் வெட்டும்
அகால வேளையில்
உணர்வுகள்
ஒற்றையடிப் பாதையில்
வெளிச்சமிட்டுக் கிடக்கின்றன...

ஊதல் காற்றின்
தாலாட்டில் -இருவர்
உடலும் சிலிர்த்து
உலகின்
மறு கூட்டலுக்கு
தயாரானது,

அசைந்தெரியும்
வெளிச்சத்தில்
முகங்களும் கைகளும்
உயிர்களுக்குள்
துழாவின...

அடித்து பெய்த
மழையில்
படுக்கை;
உணர்வுகளுக்குள்
அமிழ்ந்தே கிடந்தது.

எதன் பொருட்டும்
இருந்திராத
முன்மாதிரியில்


மீண்டும் - ஓர்
இரவு
செப்பனிடப்படாமல்


முன்பு போலவே... 

கலைந்தே கிடந்தது. 

-தோழன் மபா.













மீள் பதிவு

வியாழன், மார்ச் 03, 2011

மங்கையர் மலரில் எனது கவிதை!




மார்ச் 8 பெண்கள் தினத்திற்காக 8 வரிக்குள் கவிதை கேட்டிருந்தனர். நான் எழுதிய கவிதை 'சுரபி' என்ற தலைப்பில் இந்த மாத மங்கையர் மலரில் வந்திருக்கிறது.

...

கவிதையை படிக்க இங்கே  சொடுக்கவும்....
நன்றி!

வெள்ளி, பிப்ரவரி 05, 2010

கடிதங்களின் பிணங்கள்!



  • கடிதங்களின் பிணங்கள் !

    மிக நீண்டதொரு
    இரவு

    அதன்
    வெளிச்சங்கள்
    இருட்டினுல் அமிழ்ந்து
    அழுகையை வெளியிட்டன...

    இரவின் யாருமற்ற
    தெருவெளியில்
    குப்பைத் தொட்டிக்கருகில்
    அழுகிய பிணங்களாய்
    கடிதங்கள் இறைந்து கிடக்கின்றன.

    தனிமையின்
    இருக்கத்தின்...
    சுவர்களெங்கும்
    இரத்தச் சிதறல்கள்
    எழுத்துகளாய்
    சிதறியிருக்கின்றன

    காடா விளக்கின்
    வெளிச்சத்தில்-இம்முறை
    அவன் வெளியே
    நின்றிருந்தான்

    அவன்
    வருவதற்குள்...

    கைமணிக்கட்டின்
    வழிவந்த குருதி...

    இம்முறை
    அவன் கால்களை
    நனைக்கும்,

    காற்றின் அலைதலில்
    பிணவாடை
    இன்று அதிகம்தான்.

    -தோழன் மபா

புதன், ஆகஸ்ட் 19, 2009

ஒரு ஏப்ரல் மாதத்தில்...! (எனது கவிதை)

ஒரு
ஏப்ரல் மாத
பகல் பொழுதில்
அவளை- மீண்டும்
சந்திக்க நேர்ந்தது,


நடந்து முடிந்துவிட்ட
துயரங்களுக்கு-பின்
எதன்
மீதும் நம்பிக்கை
கொள்வதில்லை,


நூலிழையாய்
தொடர்ந்த... அன்பின்
வெளிப்பாடு...


பிரிவின்-பார்
பட்டதும்,


துன்பங்கள்
தோரண
வாயிலாய் மாறின,


நேருக்கு நேர்
பார்த்ததில்...


விழிகளுக்குள்
வெளிச்சம்
பறவினாலும்...


இதயம்
இறந்துவிட்டப்பின்,
விழிகளும்
குருடுதான்,
செல்லும்
வழிகளும்
கரடுதான்.


-19/04/97 இல் நான் எழுதிய கவிதை. நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் அப்பொது காதல் வயப்பட்டு இருந்தேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

எனது கவிதை...'வழக்கமான ஒன்டேன்று..."

வழக்கமான ஒன்டேன்று

நீ

நிற்கச் சொன்ன...

இடத்தில் அல்லாமல்,

பிறிதொரு இடத்தில்

நிற்கும் போதுதான்,

உணர்கிறேன்,

காத்திருப்பின் அவசியத்தை.

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

ஒரு பகல் நேரத்தில்... கவிதை





!!!!!கவிதை!!!!!!


ஒரு பகல் நேரத்தில்...
நான் எழுதிய இக் கவிதை
தினமணி கதிரில் (22/04/2001)
அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.
பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.
மேஜையில்
இருந்த
பூச்-ஜாடி
அப்படியே
இருந்தது.
கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.
டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.
இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,
அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...
அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?
-தோழன் மபா
*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

வெள்ளி, ஜூலை 31, 2009

புதன், ஜூலை 29, 2009

எனது கவிதை...

இரவு உணவு...

ஒரு பிடி சோறு
ஒரு குவளை பால்
ஒரு மஞ்சள் வாழைப்பழம்
கூடவே
ஒரு டிவி ரிமோட்
போதும்
இரவில்
பசியாற...
-தோழன் மபா

ஞாயிறு, ஜனவரி 18, 2009

ஈழமும் ஈரமும்


தோழன் மபா
கவிதைகள்...


  • வானம் சிவந்து

வைகறை

காணும்பொழுது

  • வாசல் தெளித்து

சாணம் இட்டு
கோபித் தண்ணி
குடிக்கும்


  • அந்த-வேளையில்
    தெரியாது...

  • எம் கானகம்
    எம் குருதியால்
    சிவக்கும்யென்று.


    18/01/09

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...